Thursday, July 14, 2011

வாசகப் பதாகினி சூழ் பீதசாலம் கோணங்கி அவர்களுக்கு...….




தார்மீகத்தில் வழியும் உப்புக்கத்தியின் குதிர்வாடைக்குள்ளிருந்து பெருகும் புளித்த சொற்களின் ஏகாந்த சொற்குருகில் விளைந்த ததாக சொப்பனச் சொல்லொன்றுங்களுக்கு.....


மறுவாசிப்பென்னும் புலிக்குகைக்குள் நீண்டு நெடிய தன்மசாதனப் புதிரில் நெளியும் இக்கடிதத்தை தங்களின் மேலான தலைக்கு மேல் கேள்விக்குறி நீளும் தற்கோலமாய் வைத்தெழுதுகிறேனய்யா. அதாகப்பட்டது பிரேளிகை சுவாசத்திலிருந்து பிருத்துவி முளைத்துத் துயிலும் பிரேதகத்தை தாங்கள் மைபூசிய செவ்விழிநீரறியும் ஊரறியும் உற்றாரும் தானறியும் சேவற்கொண்டைப் பித்தில் குடிபுகுந்தலையும் பிலுக்கு. முனைஞர் கூடியிழுத்த தீச்சுடர் வெறியேறிய காந்த சொரூப நித்திலப் பைங்கிளியின் உன்மத்த ரேகைதனை இழுத்திழுத்து உறையும் பனிக்காட்டின் மலிர்நிறை. என் கவனங்கொள் குடிபுகுந்த கொல்விழிகள் கண்டது தாத்பரியத்தின் தூரிகை சமைத்த எழுத்துருக்களை.


அச்சிட்ட மை காயும் நம்பலோடு உறைந்த நதியை இழக்கும் செவ்வரளிப் பூச்சூடிய நங்கை கிளர்ந்து மூலாதாரப் பொதிகலைத்து நேர்கோட்டில் சுருண்டிருக்கும் சதை கிழியும் உருப்பெருக்கி சுவாதிஷ்டானமுணரும் காட்டுக்குருவியின் இறக்கை மடிப்பில் துயிலும் பெருங்கிழவன் நணுகராகி உறை மறுத்து மணிப்பூரகமறுத்து அந்தர வாடையில் சொக்கிய குமரியின் அநாகதம் தூண்டி தலைகீழ்க் குத்தென விரைந்தொழுகும் விசுக்தியாய் நிலைகொண்டு ஆக்ஞை பிரதிபலிக்கும் கிழவனொருவன் பெருமூச்சு கோடரியைத் தலைகீழ்ப் பாய்ச்சலால் விரைந்து மூச்சடைத்து முயக்கம்பெற்று பித்தேறி செஞ்சடை சிதற உடுக்கையில் ஒலிக்கும் சஹஸ்ரஹாரம். அதாகப்பட்ட எழுத்துருவை வெட்டிக் கட்டி மறுமையிட அஞ்சி சொம்பல் துலக்கம் பெற குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்து வெள்விழி குறுக்கி பீளை வடியும் தூக்கத்தை மென்று கடைவாய் இறுக்கி கொட்டாய்தனில் கொட்டாவி விட்டுறையும் நாட்கூறில் நாங்கூழ் பாய்ச்சி நாகக்கோளிரண்டில் இருசுடைவளைந்து சூழும் பரிவேடம் திளைத்த வான்மீன் கிளர்ந்தொழியும் பெருந்தூமகேது பாயும் நட்டவிசியில் மையழித்து தெருபைரவன் குரல்வளையிருக காகிதத்தை கிழிக்காது கணிணிப்பெருமூச்சேக்கத்துக்குத் தின்னக்கொடுத்த கட்டுரையிது. கதையிது.


வாசகன் தாமதச் சொல்லில் குடிபெயர்வான்.நெஞ்சில் இறங்கும் கூரான கத்தியிறக்கும் பணித் தட்டான்போல் ஒரு வார்த்தை. பதினாறு ஆட்டைக் குமரனும், சீர்பன்னீர் ஆட்டைக் குமரியுமாகி ஒத்த மரபினும் ஒத்த அன்பினும் கற்பக நல்மர நல்பயனாகிய இருட்டில் கண்டான் வாசகன் எழுத்தாளன் ஏடறிவித்தவன் ஏமாற்றுக்கார இலக்கியம் செய் வித்தையை.




இதுவும் அது:


பதுமகோமளை கண் விழித்தாள் பற்றியெறிந்தது காணீர் போர்ச்சூடமுரசின் பத்திருபதுபாகங்களெனச் சிறு தோல். கருங்கையெனும் சதைக்குமிழுடைய தாங்களது சோம்பல்த் திறவால் வந்தவினையிதுவெனக்குமுறியிருகப்பற்றியிழுத்தயிழுப்பிலொழுகாத்தவக்கோலச்சுதி.


கல்குதிரைஇரண்டாயிரத்திரண்டிலொழிந்த வேனிற்காலங்களிழதழில் தாங்கள் மையிட்ட அச்சில்தலைப்பிட்டு வந்ததொரு தலையங்கம் தலையங்கமான சிறுகதையான காப்பிய வரிகொள்ளாத கானுறை வேங்கைச்சிறுபுலி வரிகள். பெண் - இசை - பித்தமொழி என்ற தலைப்பு இரண்டாயிரத்தி ஏழில் மைகாத்து அதே கதை தலையங்கத்தை சிறுகதையல்லாத வடிவென வரிகள் மாற்றி கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் என மாற்றி அச்சிட்டு வாசகத் தலையில் பத்திருபது மிளகாய் பச்சையாய் அரைத்தூற்றி வாசகவிழி சிவந்த கதை இதுவை விளங்குங்கள் பெரியோய்.






சிறுகுறிப்பு:


கல்குதிரை 2002
வேனிற்காலங்களின் இதழ்
பிரிவுத் தலைப்பு : பித்த கலாந்தம்
தலைப்பு : பெண் – இசை – பித்தமொழி


இப்பிரிவின் கீழ் வந்த அவரது எழுத்தைத் தலையங்கம் எனலாம்.


அதே அது


இருள்வமௌத்திகம் ( சிறுகதைகளும் குறுநாவலும்)
என்று பிரசுரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதே தலையங்கம் “ கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள் ” என்ற தலைப்போட்டு சிறு வாக்கியங்களை எழுத்துக்களை மாற்றி வெளிவந்திருக்கிறது. இதை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. இதுதான் மாந்த்ரீக எழுத்தா. வாசக பாவம் சும்மா விடாது.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...