Monday, February 17, 2014

அபிலாஷ்..நேசமித்ரன்...மற்றும்... சில வியாதிகளை முன் வைத்து....






இலக்கியம், அகந்தையை வளர்க்க உதவி செய்யும் ஒரு கருவி என்றால் அதை என் காலில் போட்டு மிதிக்கவே விரும்புகிறேன்.

வணக்கம் நண்பர்களே.... அபிலாஸின் மௌனத்தை முன்வைத்து என் சொற்களை நான் திறக்கிறேன். ஏற்கனவே அந்தரங்கம் பற்றின எனது புரிதலைப் பலமுறை வைத்துள்ளேன். இனியும் இந்த மோசமான மௌனத்தின் முன், அதை... சில சந்தர்ப்பங்களை வைத்துத் திறக்கவே விரும்புகிறேன்.

சம்பவம் ஒன்று.

திருவாளர் நேசமித்ரன் அவர்கள்... சொல்ல ஒரு சொல்லுமின்றி என்னை முகநூலில் முடக்கி அவரது கலைத்தாகத்தை வெளிப்படுத்தியது குறித்து.

நண்பர் நரனிடம் என்னைக் கடவுள் அளவுக்குத் தூக்கி வைத்துப் பேசி பின் நேசமித்ரன் எழுதியது குப்பை என்று சொன்னதும் அவருக்கு நான் சாத்தானாக மாறிய கதையைப் பற்றியது. வலசையில் வந்த எல் டயானா கவிதையை மொழிபெயர்த்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. இதை அவரது இலக்கிய ஆத்மா மன்னிக்கட்டும். என் ஆளுமை குறித்து எனது வாழ்நாள் தோழியிடம் நேசமித்ரன் அவர்கள் பேசிய உண்மை உரைகளை இனி கொற்றவையும் எழுதுவாரென்றே நினைக்கிறேன்.

எனது வலைத்தளத்தில் அன்பர் நேசமித்ரனுக்கு நான் எழுதிய அனைத்தும் அப்படியே உள்ளது எதையும் நீக்கவில்லை. அவை காலம் காலமாக மின்னிக்கொண்டே இருக்கும்.அதையிட்டு எனக்கு அருமையான கட்டுரை எனப் பாராட்டிய நண்பர்கள் திரு நேசமித்ரன் செய்யும் அயோக்கியத்தனங்களை அவர் கவிதை என எழுதும் குப்பைகளை என்னிடம் சொன்னார்கள். அப்பொழுதும் அழுத்தம் திருத்தமாக இதை அவருக்கு நெருக்கமான நண்பர்களாகிய நீங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை என்பதைத்தான். அதற்கு அவர்கள்.... ”எங்க வசு எதாச்சும் சொன்னா எனக்கு யவனிகா ஸ்ரீராமைத் தெரியும் கோணங்கியைத் தெரியும் என்கிறான் இதில் நாம் என்ன செய்யமுடியும்” என்பதைத்தான். அதற்கடுத்த பின்தான் எனக்கு கடுப்பு அதிகமாகியது. எழுத்தாளர்களை அடியாட்களாக இவர் மாற்றிக்கொண்டே இருக்கும் அயோக்கியத்தனத்தைத்தான் முன் வைக்க வேண்டும் என நான் முன் வைத்தேன். அதற்கு அடுத்து தொடர்ச்சியாக எனது வலைத்தளத்தில் நான் எழுதிய கடிதங்களே சாட்சி. வாயடைத்து இப்பொழுதுவரை எந்தப் பதிலும் சொல்லாத அவரின் மௌனம்தான் இலக்கிய மௌனம் இப்பொழுது அபிலாஷின் மௌனமாக திரிந்திருக்கிறது.



இந்த மௌனத்தைக் கிழித்தபடி வேறொரு பெண் பேசினார் ”வசு நல்லாயிருக்கீங்களா என்றார்( அப்பெண் பெயரை இடுவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை அவருக்கும் இதில் சிக்கல் இல்லை என்றால் அதையும் இடுவதில் தயக்கமில்லை)    “ நான் நேசமித்ரனிடம் ஏன் என்னிடம் வலசைக்கு கவிதை கேட்கவில்லை என்று கேட்டேன்...அதற்கு அவர் நீங்கள் ஆதிரன் வசுமித்ர அவர்களின் தோழராக உள்ளீர்கள்... பின் எப்படி உங்கள் கவிதைகளைப் போடமுடியும் என்று கேட்கிறார்..இது எவ்வளவு மோசமான மனநிலை என்றார்.  அதற்கு நான் பதிலாக அப்பொழுது முதல் வலசையில் உங்கள் கவிதை நீங்கள் யார் நண்பர் என்று கருதி உங்கள் கவிதையைப் போட்டார் எனக் கேட்டேன். அதற்கு அவருடன் பழகியதை நினைத்தாலே அறுவெறுப்பாக இருக்கிறது என்றார். அடிக்குறிப்பாக இன்னொன்றும் சொன்னார். அவனெல்லாம் பாருங்க.... ஒரு குழந்தையக் கல்யாணம் பண்ணிட்டு குழந்தைச் சிறப்பிதழ் போடுறான் என்ன சொல்றது வசு என்றார். நான் அதை அவரிடமே சுட்டிக் காட்டுங்கள் என்றேன். அதற்கு அவர் இது எதுக்கு வசு என்றார் நான் பதிவிடமுடியாதைப் பற்றி நாம் பேசுவது நல்லதில்லை என்றேன். அதற்கடுத்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நேசமித்ரன் கவிதை என அறியப்பட்ட குப்பைக்கு வியந்து அந்தப் பெண் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்....எனக்கு ஆயாசம் மிஞ்சியது.

இன்று வரை கோணங்கியும் யவனிகாவும் நேசமித்ரனின் யோக்கியங்களைப் பற்றி நல்ல தமிழில்தான் என்னிடம் பேசிக்கொண்டிக்கிறார்கள். நான் வைத்த எந்தக் கேள்விக்கும் இதுவரை நேசமித்ரனிடம் இருந்து பதில் வரவில்லை. டயானக் கவிதையை மொழிபெயர்த்தவரும் என்னிடம் உரையாடினார். அது அவர் மொழிபெயர்த்த கவிதையில்லையாம். அதைச் செய்தது திருவாளார் நேசமித்ரன் தானாம். அதோடு இந்த விவாதத்தை முன் வைத்து நான் எழுதியபோது அந்த டயானாவை மொழிபெயர்த்தவர் நேசமித்ரனை பலமுறை அழைத்துப் பார்த்தும் போனை எடுக்காது இருந்திருக்கிறார் நேசமித்ரன்.  காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவரும் இப்போது நேசமித்ரனின் குப்பைகளுக்கு ஆமென் போட்டுக்கொண்டிருக்கிறார்.


இரண்டாவது சம்பவம்

நண்பர் லஷ்மி சரவணக்குமார் எழுதியது. எனது வாழ்வையும் எனது வாழ்நாள் தோழி கொற்றவையின் வாழ்வையும் பற்றி ஒரு துளி அறியாது ஒரு வசை அனுமானத்தை முகப்புத்தகத்தில் முன் வைத்து,  உடனே அதை நீக்கிவிட்டார். அந்த வசையைக் கவனித்த கொற்றவை என்னிடம் பேசியபோது. அது அப்படி இருக்காது.  லஷ்மி சரவணக்குமாருக்கு இப்படி எழுதும் அவசியமமும் இல்லை.... தேவையும் இல்லையே என்றேன். அதற்குக் கொற்றவை, இல்லை அது நம்மைப் பற்றி எழுதப்பட்ட விசயந்தான் என்றார். இடையே தொலைபேசியில் அழைத்த நண்பர் சுதீர் செந்தில் அதை உறுதிபடுத்தினார். பின் நான் லஷ்மி சரவணக்குமாருக்கு நான் பலமுறை போன் செய்தேன் பலமுறை என்றால் கிட்டத்தட்ட அறுபது தடவைகளுக்கு மேல் போன் செய்தேன் நண்பர் எடுக்கவில்லை.

விளைவாக மனம் கசியும் குற்றவுணர்ச்சியில் லஷ்மி சரவணக்குமார் மன்னிப்புக் கேட்டார். நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்றேன். லஷ்மி சரவணக்குமார் மனம் நொந்த நிலையில் மறுத்தார். பரவாயில்லை வாருங்கள் என அழைத்தேன் வந்தார். இருவரும் கொற்ற்வை சமைத்து வைத்த அன்றைக்கான மதிய உணவை உண்டோம்.  ஏன் லஷ்மி இதைச் செய்தீர்கள். எங்கள் வாழ்வைப் பற்றித் தெரிய வேண்டுமென்றால் என்னிடமோ கொற்றவையிடமோ கேட்டிருக்கலாம் இல்லையா என்றேன். அதற்கு நான் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்தேன் நண்பா அதனால் அப்படிச் செய்துவிட்டேன் என்றார். அதற்கு உங்கள் மனநிலை குழப்பத்திற்கு எங்களது வாழ்க்கையைத்தான் அசிங்கப்படுத்துவீர்களா எனக் கேட்டேன். லஷ்மி மிக வருத்தமாய் உணர்ந்தார். அத்தோடு அவ்வுரையாடல் முடிவு பெற்றது.

அதன் பின் கொம்பு இதழில் அடிமைகளை வாங்கவும் விற்கவும் இங்கு அணுகவும் என்ற தலைப்பின் கீழ் கோமதிநாயகம் என்ற புனைப்பெயரிம் நான் ஒரு கற்பனைப் பேட்டியை வரைந்திருந்தேன். இப்பொழுதும் சொல்கிறேன் அதில் ஒரு சொல் கூட இன்னும் மாறவில்லை அது குறித்து நான் இப்பொழுதும் தெளிந்த மனநிலையில் உரையாட எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன்.

ஆனால் கோமதிநாயகம் எழுப்பிய எந்த கேள்விக்கும் அதில் உள்ள உரையாடலுக்கும் எழுத்து மூலமாக பதில் வரவில்லை. இன்னும் அதில் மௌனமே நிரப்பட்டிருக்கிறது. ஆசிரியர் வெயில் வசு கள்ளமௌனம் என்றால் என்னவென்று இப்பொழுது புரிகிறது என்றார். நிற்க

அதற்கடுத்து வெயிலுக்கு கோமதிநாயகம் குறித்த உரையாடல்கள் போனில் தொடங்கியது. நண்பரும் சில நேரங்களில் அண்ணனுமான கோணங்கி வெயிலிடம்  போன் செய்து யாரந்த கோமதி நாயகம் என்று கேட்க அதற்கு வெயில் ஏண்ணே எனக் கேட்க கோணங்கி அட சொல்லுடா என்க வெயில் நம்ம வசுதான் என்று பதில் உரைத்திருக்கிறார். அதற்கு கோணங்கி மகிழ்ந்த சிரிப்பொழியுடன்... டேய்... நினைச்சன்டா.... நினைச்சன்டா.... என சிரித்து முடித்த ஓசையுடன் தொலைபேசி அணைந்திருக்கிறது.

அடுத்து நண்பர் லஷ்மி சரவணக்குமார் வெயிலுக்கு போன் செய்து யாரு நண்பா அந்தக் கோமதிநாயகம் எனக் கேட்க வெயில் ஏன் என்ன விசயம் எனக் கேட்க அதற்கு லஷ்மி... இல்ல நான் ஒரு அவசரமான இடத்துல இருக்கேன்..உடனடியா பதில் வேணும் சொல்லு சொல்லு என்க வெயில் வசுதான் என்க லஷ்மி ஓகே எனப் போனை வைத்திருக்கிறார். அதன் பின் உரையாடல் தொடரவில்லை.

சம்பவம் மூன்று
அதன்பின் வக்கிரத்தால் மெழுகப்பட்ட திருவாளர் நேசமித்ரன் கடல் கடந்து உதிரித் தொழில் செய்து இலக்கியத்தை வளர்க்கும் அந்த ஆத்மா ( அழுத்தம் என்னுடையது) வெயிலுக்குப் போன் செய்திருக்கிறது. போன் செய்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துகும் அதிகமான உரையாடலைச் செய்திருக்கிறது. அவ்வுரையாடலில் கோமதிநாயகம் எழுப்பிய கேள்விகளையோ பதில்களையோ பற்றி எதுவும் சொல்லாமல், அவன் என்ன பெரிய இவனா எனத் தொடங்கி அவனைப் பத்தித் தெரியாதா அவன் பொண்டாட்டியை அவன் அடிக்கிறதில்லையா எங்களுக்கு எல்லாம் தெரியும்..அவன் என்ன பெரிய இவனா இங்க நாங்க உசுரைக் கொடுத்து இலக்கியம் வளர்க்கிறோம் என்ற ரீதியில் அது தன் நிதானத்தை இழந்து வாந்தியை எடுத்திருக்கிறது. அதற்கு வெயில் கோமதிநாயகத்தின் கருத்துக்கு மறுவினை செய்யுங்களேன் என்றதற்கு மறுத்ததோடு நீங்கள் பேசிய இவ்வுரையாடலை கோமதிநாயகத்திடம் சொல்லலாமா எனக் கேட்டதற்கு அது எதுக்கு வேஸ்டா என பம்மி பின் மறுபடியும் அவதூறுகளை முன் வைத்திருக்கிறது.

இதுவே கோமதிநாயகம் தமிழுக்குக் கொடுத்த கொடை. இன்னும் நேசமித்ரன் எனும் வக்கிரம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.


அன்பான அந்த வக்கிரத்திற்கு நான் சொல்லுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்,. கேட்பதற்கு என்னிடம் நாலைந்து கேள்விகள் உள்ளன. கேட்டால் அசிங்கப்பட்டு முச்சந்தியில் நின்று தலையைச் சொறிய அவரும் அவருக்கு உடந்தையான சிலரும் ஆளாக நேரிடும் என மௌனம் காத்தேன் இனி காப்பதற்கு ஏதுமில்லை. அத்தனையும் நிறை அம்மணமாக்கும் மனநிலை கொண்டே இதை முன் வைக்கிறேன்.


என்னைப் பற்றியும் கொற்றவை பற்றியும் இலக்கியம் தாண்டி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது கேஷ் ஹிஸ்டரி செய்ய வேண்டும் என்றால் ஒரு மேடையை அமைத்துத் தாருங்கள். அதை செலவிலேயே செய்து தருகிறேன். அதே மேடையில் அவர்களின் கேஷ் ஹிஷ்டரியையும் தூசுதட்டிக் கொண்டு தயார் செய்து வரலாம்.

இப்பொழுது நேசமித்ரனிடம் கேட்க ஒரு கேள்வி.

கோமதிநாயகமாகிய நான் வைத்த உரையாடல்களுக்கு எந்த இலக்கிய பதிலையும் தராது கோமதிநாயகத்தின் குடும்பத்தை மட்டுமே வைத்து உரையாடும் நீங்கள் இப்பொழுது செய்த இரண்டாம் திருமணத்தில் மணப்பெண்ணின் வயது என்ன... (அவரது நெருங்கிய தோழிகள் அதை அவரிடம் சொல்லக் கூசி, வேறு வழியில்லை என்று என்னிடம் கூறியதுதான்.).

உங்கள் மனைவிக்கு எத்தனை வயது நேசமித்ரன்... அவரது பெயர் என்ன... இதுவரை நீங்கள் பிற மகளிர்க்கு அண்ணனாய் தம்பியாய் இன்னும் பல போர்வைகளைப் போர்த்தி செய்யும் இலக்கிய கள்ளத்தன மொழிபெயர்ப்பு உதவிகளை உங்கள் மனைவிக்கு கணவனாய் ஒரு முறையாவது செய்திருக்கிறார்களா.. அந்த அப்பாவிப் பெண்ணிற்கு எழுதக் கூட்டி வாசிக்கத் தெரியுமா அவரின் புகைப்படத்தைக் கூட நான் பார்த்ததில்லை நேசமித்ரன். அறியத் தருவீர்களா.


இறுதியாக நண்பர் அபிலாஷ்க்கும்.... இதே கேள்விகளை முன் வைப்பதோடு, என் குடும்பத்தின் மீதான அக்கறையை..அதன் மேல் உள்ள இவர்களது சந்தேகங்களைத் தீர்க்க நானும் கொற்றவையும் அவர்களின் இல்லங்கள் தேடிச் சென்று விளக்க ஆவலாய் உள்ளோம். இந்த பிப்ரவரியின் இறுதி கால அவகாசத்தில் எங்களது விடுமுறை நாட்களை சம்பந்தப்பட்ட நண்பர்களின் மனைவிகளோடு கழிக்க எண்ணுகிறோம்.... அழைப்பீர்களா.....நண்பர்களே.

அழைக்காவிட்டாலும் அழையா விருந்தாளியாகச் சென்று, சம்பந்தப்பட்ட நேசமித்ரனின் பெயர் தெரியா அவரது மனைவியிடமும்...அபிலாஷ் அவர்களின் மனைவி காய்த்ரி ராமச்சந்திரனிடமும் நிச்சயம் நாங்கள் உரையாடுவோம்.

நண்பர் வெயிலுக்கு...இனி நீங்கள் அறிந்த தகவல்களை தெரியச் செய்யலாம். காத்திருக்கிறேன்.



இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...