Monday, May 15, 2023

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

 




 
 
இடது” இதழ் வெளியிடாத கடிதம்.
(ஆகஸ்டு 9- 2017)
 
 (இடது’ இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதிஇடது இதழ் வெளியிடாத கடிதம்.)
 
 இதழின் பொறுப்பாசிரியர் ஓடை.பொ. துரை அரசன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவுக்கும்...
 
நடப்பு இதழான செப்டம்பர் 2016 இதழில் உங்களது தலையங்கத்தைப் படித்தேன். அதில் எஸ்.வி.ராஜதுரை குறித்து தேனியில் எஸ்.வி.ஆரை  மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கேள்வியை எழுப்பியது நான்தான். அது குறித்தான எனது விளக்கங்களையும் கேள்விகளையும் முன்வைத்தே இதை எழுதுகிறேன்.
 
தோழர்களே... கடந்த செப்டம்பர் 2016 ராஜதுரைக்கு தமுஎகச வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. என் வரையில் அது வரவேற்கத் தகுந்த ஒன்றே. விருதுக்கான தொகையை ராஜதுரை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அப்போதே அளித்தார். அதுவும் வரவேற்கத்தக்கதே. (அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயருக்கும்சாதி ஒழிப்புக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசங்களை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.) உங்களது தலையங்கத்தில் ராஜதுரையின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது மார்க்சிய ஈடுபாடு குறித்து எவரொருவரும் ஐயம் கொள்ள மாட்டார்கள் என்ற குறிப்பும் உள்ளது.
 
இதையொட்டியே எனது கருத்தையும்ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் அங்கு நடந்ததையும் விளக்க எண்ணுகிறேன். இதுகுறித்து தாங்கள் எனது முக நூல் பக்கத்திலோ,வலைப்பக்கத்திலோ படித்திருக்கும் பட்சத்தில்இக்கடிதம் கூறியது கூறலாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும். அதையும் கவனத்தில் கொள்கிறேன். அது குறித்து நீங்கள் ஏதும் அறியாத பட்சத்தில் இது உங்களுக்கு உதவும்.
 
ரங்கநாயகம்மா நூல் வெளிவந்துகிட்டத்தட்ட ஒரு மாதகாலம் சவ அமைதியே நிலவியவது. பிற்பாடு ஆதவன் தீட்சண்யா என்பவர் நூலின் மீதான அவதூறுகளை முதலில் தொடங்கி வைத்தார். நூலின் குறைந்த விலை  உட்பட அனைத்தையும் மிக மோசமான குறுக்குப் புத்தியுடன் விமர்சிக்கத் தொடங்கினார். ரங்கநாயகம்மா நூலை பீ” க்கு ஒப்பாகவும் அவரால் துணிந்து எழுத முடிந்தது. அவரது அவதூறுகளை மறுக்கும் முகமாக முகநூலிலும் வலைப்பக்கங்களுலும் நானும் கொற்றவையும் பதில் கொடுத்தோம். அத்தோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்கிற மறைமுகமான மிரட்டலையும் ஆதவன் விடுத்தார்.
 
அவர் நூலை முழுதாக படிக்காமலேயே (இது அவரது எழுத்திலேயே உள்ளது) அவதூறுகளை இட்டு நிரப்பத் தொடங்கினார். மேலும் ஆதவனது அவதூறுக்கு வக்காலத்து வாங்கும் முகமாக தமுஎகச தொண்டர்களும் களத்தில் இறங்கினார்கள். அப்படி அவர்கள் இறங்கியதானதுநான் சின்னத்திரைத் தொடர்களில் மானம் இல்லாமல்கேவலமாகச் சம்பாதிக்கிறேன் என்ற அரிய கருத்தை வழங்கும் வரை சென்றது. 
 
சம்பந்தப்பட்ட ஆதவன் ஒரு எழுதாளாராக இதில் பேசியதைவிடவும்தமுஎகச மாநிலக் குழுவில் ஒரு தலைவராக அவரை தமுஎகச தொண்டர்கள் முன்வைத்து பேசியிருக்கிறார்கள்  என்பதற்குஅவர்கள் முகநூலில் எதிர்வினையாற்றிய விதமே சாட்சி சொன்னது. அதற்கான ஆதாரங்கள் தேவையெனில் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். சம்பந்தப்பட்ட விழா குறித்த அழைப்பிதழில்  விருது கொடுப்பதோடு எஸ்.வி,ஆருடன் கலந்துரையாடல் என்று போட்டிருந்தார்கள். 
 
அதை நம்பியே நானும் பேசினேன். (ஆனால் அது கலந்துரையாடல் இல்லை. மேடையில் அவர் அமர்ந்திருக்ககீழிருந்து கேள்வி கேட்டுமேலிருந்து அவர் பதில் சொல்லும் வகையிலானதாக அமைதிருந்தது)  கலந்துரையாடலின்! முதல் கேள்வி தமுஎகசவின் மாவட்டக் குழுவில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் என்பவரால் கேட்கப்பட்டது. அவர் கேட்ட கேள்வி  ரங்கநாயகம்மா நூல் குறித்து இரு வேறு பார்வைகள் நிலவுகிறதே அது குறித்து உங்களது கருத்து என்ன ?” இதுதான் அவரது கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராஜதுரை தான் நினைத்தையெல்லாம் பேசினார். 
 
ரங்கநாயகம்மா குறித்து அவர் பேசியதன் சுருக்கத்தை அளவு கருதி இங்கு சுருக்கித் தருகிறேன் . அவர் பேசியதாவது; “ரங்கநாயகம்மாவின் நூலை தெலுங்கில் யாருமே கண்டுகொள்ளவில்லைஎவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத நூல் அது,  அந்த நூலை சத்யமூர்த்தி போன்றவர்களே மறுத்துவிட்டார்கள்நக்சல் பாரிகளும் ஏற்றுக் கொள்ளவில்லைரங்கநாயகம்மா போன்றோரை நாங்கள் குகைமார்க்சியர் என அழைப்போம்அம்பேத்கர் நூல்களை முழுதாகத் தொகுக்கவில்லைமார்க்சின் நூல்களையும் முழுதாகத் தொகுக்கவில்லைஅம்பேத்கர் கூறியதான மார்க்சியத் தத்துவம் பன்றிகளின் தத்துவம் என்பதற்கு மாவோ காலத்தில் வரலாறு இருக்கிறது” என்று உளறி முடித்தார். 
நடந்தது இதுவே. இதில் தங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுமாயின்சந்தேகங்கள் இருப்பின் கூட்டத்தை கூட்டிய சம்பந்தப்பட்ட தமுஎகசவிடம் நீங்கள் அவர் என்ன பேசினார் என்று பதில் கேட்டுப் பெறலாம்.
 
கேள்விக்கு பதில் சொல்கிறேன் எனத் தொடங்கிஅவர் பேசிய அனைத்தும் உளறல்களே. அவரது உளறல்களில் எனக்கு பல கேள்விகள் எழுந்தது. தெலுங்கில் யாருமே ஒரு நூலைக் கண்டு கொள்ளாவிட்டாலோசத்யமூர்த்தி போன்றோர் பதில் சொல்லி விட்டாலோ நக்சல்பாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ ஒரு நூலின் பெறுமதி இல்லை என்றாகி விடுமாஇல்லைஇவர்களைக் கேட்டுத்தான் சம்பந்தப்பட்ட விசயங்களைஆய்வுகளை எழுத வேண்டுமாஎன்ற கேள்வி முதல் கொண்டுஅம்பேத்கரையும் தொகுக்கவில்லைமார்க்சையும் தொகுக்கவில்லை என்ற பதிலின் மூலம் ராஜதுரை என்ன சொல்லுகிறார் என்று எனக்கும் விளங்கவில்லைஅங்கிருந்தவர்களுக்கும் விளங்கவில்லை. ஒருவேளை தொகுக்கப்படாத அரைகுறை நூல்களை வைத்துத்தான்இத்தனை காலத்தை மார்க்சின் பெயரால் ஓட்டினோமோ என்கிற சந்தேகம் மட்டும் வந்தது. மேலும் இதை அடியொட்டி எனக்குப் பல கேள்விகள் எழுந்தன.
 
அக்கேள்விகளை பேசும் முகமாக நான் மேடை ஏறப்போனதும்ஒருங்கிணைப்பாளரான ஆதவன் பதறி நிலைகுலைந்து வேகமாக வந்து (இதில் மிகைக் கூற்று எதுவும் இல்லை. எஸ்.வி.ஆருடன் மேடையில் ஆதவன் அமர்ந்திருந்தாலும்கிழிருந்து நான் எத்தனை முறை தண்ணி குடித்தேன். எப்படி நடந்தேன் கழுத்தை எப்படிச் சாய்த்து வைத்திருந்தேன் என தான் கவனித்ததாக முகநூலில் எழுதியிருக்கிறார். அவரது அடிப்பொடிகளில் ஒருவர் நான் என்ன வகையான உடை உடுத்தியிருந்தேன் என்று கூட சிலாகித்து எழுதியிருக்கிறார். 
 
மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் என் குறித்து இத்தனை எழுதியிருக்கிறார் என்றால்அவரது ஒட்டுமொத்த கவனமும் என் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி கவனம் குவிகிறதென்றால் அதற்கான அச்ச உணர்ச்சியை எஸ்.வி.ஆரின் உளறல்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்...இல்லையா) என்ன பேசப் போகிறீர்கள் என்று கேட்டார்.  நான் உங்களைக் கேட்டுத்தான் பேச வேண்டுமா என்றேன். என்ன விசயம் சொல்லுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார். நான் உங்களிடம் சொல்ல முடியாது ராஜதுரையிடம் தான் கேட்க வேண்டும்அவருடன்தானே கலந்துரையாடல் என்று அழுத்தமாகச் சொன்னேன். உடனே வேகமாக ஓடிப் போய்  மைக்கைப் பிடித்த ஆதவன் இது எஸ்.வி,ஆருக்கு விருது வழங்கும் மேடைஇதை ரங்கநாயகம்மா நூல் மேடையாக யாரும் மாற்ற வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பை எனக்குத் தெரிவிக்கும் விதமாகச் சொன்னார். இதுகுறித்து எந்த எச்சரிக்கையும் பார்வையாளர்களுக்கு சொல்ல வில்லை. இதை இதை கேட்கலாம் என்ற குறிப்புகள் எதும் வழங்கப்படவில்லை. ஆனால் நான் பேசுவேன் என்றதும் பதறி நிலைகுலைந்து எச்சரிக்கை விடப்பட்டது.)
 

உண்மையில்கேட்ட கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல்கிட்டத்த 3040 நிமிடங்கள் ரங்கநாயகம்மா நூல் குறித்து பேசுகிறேன் என இஷ்டத்துக்குப் உளறிஅதை ரங்கநாயகம்மா மேடையாக மாற்றியது ராஜதுரைதான். அதுகுறித்து கேள்வி கேட்கப் போன எனக்கு எச்சரிக்கைக் குறிப்பு! இருப்பினும் அக்குறிப்பை மதித்து மேடையேறிய நான் ராஜதுரையின் பங்களிப்புகள் குறித்து எனது புரிதலை வைத்துவிட்டு அவரை மார்க்சிய அறிஞர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதுஅந்நியமாதல்இருத்தலியம் சார்த்தர் என அவர் ஒரு தலைமுறை சீரழியத் துணை போனவர் எனச் சொன்னேன். (மேடையில் நான் என்ன பேசினேன் என்பதற்கு காணொளி ஆதாரம் எனது முக நூலில் உள்ளது) சொல்லி முடித்ததும் பதற்றத்துக்குள்ளான ராஜதுரை (உண்மையில் அவர் பதற்றப்படவே செய்தார். நேரில் கண்டதன் மூலமாகத்தான் இதைச் சொல்கிறேன் ) வேகமாக மைக்கைப் பிடித்து முதலில் பேசியது,   “என்னை நான் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை தமுஎகச தான் அப்படிச் சொன்னது” என்று  கூறினார். (இந்தச் சொல்லுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் பரிசாகக் கிடைத்தது. இதன் உளவியல் குறித்தும்இதனடிப்படையில் அங்கிருந்த தமுஎகச தோழர்களின் வாசக குணம் எப்படி அமைந்திருக்கிறது என்பது குறித்தும் ஒரு நூறு பக்கம் தனியே எழுதலாம்) அப்பொழுதே அவர் கூட்டத்தை என்ன மனநிலைக்குத் திருப்புகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து  வசுமித்ர போன்றவர்கள் என்னை மார்க்சிஸ்ட் இல்லை என அவதூறு செய்யலாம்...அவரின் வயதென்ன...” என்றெல்லாம் பேசத் தொடங்கினார். உண்மையில் நான் மதித்த ராஜதுரையா அப்படிப் பேசுவது என்ற அதிர்ச்சியே என் மனதை முதலில் தாக்கியது. 
 
ஒரு புத்தகம் குறித்து தன் கருத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரியாத ராஜதுரையா இவர்! நான் மார்க்சிய அறிஞர் இல்லை என்று சொன்னதற்கு அவர்  நான் மார்க்சிஸ்ட் இல்லை என இவர் சொல்லலாம் ” எனத் திரித்தது உட்பட எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம்.
 
மேடையில் ஒரு நபர் தன்னை மார்க்சிய அறிஞர் இல்லையென்று சொன்னால்அது எப்படி என வினாத் தொடுக்க முடியாதுஅதற்கான விளக்கங்களையோபதில்களையோ சொல்லமுடியாதுதன்னை முன்னிலைப்படுத்தி நிறுவும் ஒரு நபரையா இத்தனை வருட காலம் படித்து வந்தோம் என்ற உணர்வை எனக்கு தந்தது. எல்லாவற்றிற்கு மேலும்நீங்கள் தேர்வு செய்த நபரை இவன் அசிங்கப்படுத்துகிறான் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே” என்ற உளவியல் தூண்டுதலைத்தான் மறைமுகமாக அவர் கூட்டத்தை நோக்கி வீசினார். 
 
வீசிய வேகம் வேலையும் செய்தது.  அவர் உளறிய பின் அந்த உளறல்கள் குறித்துக் கேள்வி கேட்க மேடையை நோக்கித் திரும்பியதும்தமுஎகச தொண்டர்கள் சூழ்ந்தனர். அங்கிருந்த எஸ்.ஏ.பெருமாள் என்பவர் ஒரு தெரு நாயை விரட்டுவது போல்  அதான் பதில் சொல்லியாச்சுல போ போ போப்பா”  என்று ஆரம்பித்தார். அதற்கு நான்  என்னங்க என்னமோ நாய் மாதிரி விரட்டுறீங்க” என்று இரண்டு எட்டுக்கள் முன்னே வைத்ததும் சற்று பின் வாங்கி  போப்பா போப்பா” என்றார் உடனே மோகன் குமாரமங்கலம்சிவாஜி போன்ற தோழர்கள் என்னை இழுத்து வெளியே கொண்டு போய் விட்டனர்.
 
அரங்கில் இருந்த  தமுஎகச மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன்மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மார்க்சிய அமைதி! காத்தனர். மேலும் மார்க்சிய அறிஞருக்கே! உரிய மௌனத்தை ராஜதுரை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதுவரை அவர்கள் பேசி வந்த  கருத்துச் சுதந்திரத்தின் கடைவாய் நகைப்பை நான் அன்று முழுதாக உணர்ந்தேன்.
 
அதற்கு மேல் அங்கு தமுஎகச தொண்டர்கள் என்ற பெயரில் எழுத்தாளர்களும்ரசிகர்களும்விசிலடிச்சான் குஞ்சுகளும் (ரஜினி கமல்ஹாசனுக்கு மட்டுமல்லபுரட்சிகரம் என்ற பெயரில் எஸ்.வி.ராஜதுரைக்கும் அப்படிப்பட்டோர் உண்டு)  ராஜதுரைக்கு பாதபூஜையே செய்யத் தொடங்கினர்.  பாதபூஜை எனச் சொல்லும் போது உங்களுக்கு எரிச்சல் வரலாம் தோழர்களே என்ன செய்வது. சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் மேடையில்  எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது தவறு அவரை மார்க்சியப் பேரறிஞர் எனச் சொல்லியிருக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதுகுறித்து தமுஎகச தொண்டர் ஒருவர் கூறியது,  “சு.வெங்கடேசன் அப்படிச் சொல்லியது கூடியிருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்தவாம்.” எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அரங்குக்கு வெளியே தமுஎகச தொண்டர்கள் நடந்த விதம் அதை விட மோசம். எங்க அமைப்பு யாருக்கு வேணா விருது கொடுப்போம் என்று தொடங்கி இஷ்டத்துக்கு பேசியது. (நான் விருது குறித்து எந்த வினாவையும் தொடுக்கவில்லை. மார்க்சிய அறிஞராக அவரின் பங்களிப்புகள் எவை என்பதுதான் என் கேள்வி)அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர்களில் எவரும் எஸ்விஆரைப் படித்தது இல்லை என்று. நிற்க.
 
இதுதான் அங்கு நடந்தது. ஒரு சிறிய கூட்டம் போட்டாலேஅதை பொதுவெளியில் புரட்சிகர அனுபவமாக அனைத்து தளங்களிலும் விளக்கி எழுதும் தோழர்கள்சம்பந்தப்பட்டக் கூட்டம் குறித்து விரிவாக எதையும் முன்வைக்கவில்லை. போனோம் வந்தோம் என்ற பாணியில் பதிவை வைத்து அமைதி காத்தது. தேனியிலிருந்து ஒரு வாரத்திற்குப் பின் சென்னை வந்த நான் அதுகுறித்து எழுதியதும்மறுபடியும் வசைகளை முன்னெடுத்தது. ஆனால் இன்றுவரை எஸ்.வி.ராஜதுரை ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் எவை என்ற எனது கேள்விக்குப் பதிலே வரவில்லை. இக்கேள்வியை நான் தமுஎகசவுக்கு வைத்தும் பதில் இல்லை. பாரதிபுத்தகாலயம் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை முடக்கியதோடுகேள்வி கேட்பது அத்துமீறல் எனச் சொல்லிஅதன் முகநூல் பக்கத்தில் நான் நுழைய தடை விதித்தது. இதுகுறித்தும் அறிவுசார் சமூகம் தன் வாயை இறுக மூடிக்கொண்டது. 
 
நாங்கள் மார்க்சிய அறிஞர் என பட்டம் கொடுக்கவில்லை என்ற வியாக்கியானங்கள் தூள் பறந்தது. அப்படி நாங்கள் சொல்லவில்லை என மழுப்பியது. ஆதரத்தோடு எடுத்துப் போடவும் வசைகளை அள்ளித் தெளித்தது. இதையெல்லாம் விட மிக மோசமாய்புதிய புத்தகம் பேசுது இதழ் வாழ்த்துகிறோம் என்ற பெயரில்விருது வாங்கியவர்களின் பெயர்கள்புத்தகங்களின் பெயர்களைக் குழப்பி அடித்துப் போட்டிருந்தார்கள். இதற்கிடையேஇப்பொழுது தங்களது இடது இதழின் தலையங்கத்தில்ஒரு தகவலாக அதை நீங்கள் போட்டிருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரம் குறித்து உங்களது அக்கறையும் கவனமும் மதிப்பளிக்கக் கூடியது. அதே சமயம். ஒரே ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்தன் மூலம் நாங்கள் ஆதிக்கச் சாதியாவதும்நான் கேவலமான வேலை செய்பவனாகவும் மாறிய அற்புதங்கள் குறித்து எனக்கு இன்னும் ஆச்சரியம் நீங்கவில்லை. 
 
மேலும்தோழர் துரைஅரசனுக்கு நான் முகம் தெரியாதவனும் அல்ல. கூட்டம் குறித்த செய்திகள் தேவையிருப்பின் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. ஆனால் அதே சமயம் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என நீங்களும் அழுத்தம் திருத்தமாக கூறவில்லை. இதுஎனது கேள்வியை உங்களுக்குள்ளும் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. (அதே சமயம் கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது போல் மார்க்சியத்தில் அவரளவுக்கு உயரத்தை எட்டியவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தமுஎகசவின் தேர்வு பொருத்தமானது என்றே இடது” கருதுகிறது.” என்று உங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள். (தமுஎகசவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவன் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளது குறித்தும் அதில் தனக்குக் கேள்விகள் இருப்பதாகவும் சொல்கிறார். அக்கட்சியின் வெகுஜன அமைப்பில் இருப்பவரே சொல்லிவிட்டார் அதனால் வேறு அத்தாட்சி தேவையில்லை. எனவே சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சிதான் என முடிவுக்கே வரலாம்..இல்லையா?.) 
 
எஸ்.வி.ஆர் ஒரு மனித உரிமை போராளி என்ற குறுவட்டை இடது வெளியிட்டிருப்பதால்ராஜதுரை குறித்து உங்களுக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். சாய்வுகள் இருக்கலாம்.  இது என் சந்தேகமே. இருப்பினும் இது நியாயமான சந்தேகந்தான். 
செம்மலரில் எஸ்.வி ஆர் ஒரு திரிபுவாதி என எழுத இடம் கொடுத்தவர்கள்இப்பொழுது அவர் மார்க்சிய அறிஞர்தான் என விளக்கம் ஏதும் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கிறார்கள். நீங்கள் அவருக்கு தனி படமே எடுத்துள்ளீர்கள். அதை நான் மதிக்கும் வேளையிலும் சந்தேகம் வருவது நியாயந்தான் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மேலும் ராஜதுரை மார்க்சிய அறிஞரா என கேள்வி எழுப்பப்பட்டது தவறுஅது மிக  மோசமான கருத்துவிவாதிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் உடையது  என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில்ராஜதுரை அறிஞராக மார்க்சியத்துக்கு அளித்த பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலமே அதை நிறுவமுடியும்ஆனால்நீங்களும் அவர் மார்க்சிய ஈடுபாட்டில் ஐயம் கொள்ளமுடியாது. அறிவுப் பங்களிப்புகள் செய்தவர்கோவை ஞானியே அவரது உயரத்தைச் சொல்லிவிட்டார் என்ற கருத்தையே முன்வைத்து நகர்கிறீர்கள். ஆனால் இடையிலுள்ள ஒரு வார்த்தைதான் என் சந்தேகத்தை ஆழமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. 
 
அதுஎஸ்.வி.ஆரின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும்” அப்படி எந்த வாதம் பிரச்சினைகளாக உள்ளது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். 
அந்த சில கருத்துக்கள் மார்க்சியத்துக்கு வலு சேர்ப்பவையாமார்க்சியத்தை வேறு திசைக்கு நகர்த்துபவையா என நீங்கள் விளக்க வேண்டும். உங்கள் குறிப்புகளில் உள்ள சுட்டல்களுக்குப் பொருந்திமார்க்சிய அறிஞராக துடித்துக்கொண்டிருக்கும் நபர்கள்அறிவுசார் சொத்தை அடைய விரும்புபவர்கள்அதன் மூலம் தங்களது அடையாளப் பிரச்சினையைஇருத்தல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளத் துடிப்பவர்கள்  எண்ணற்றோர் என்பது நீங்கள் அறியாததல்ல. 
 
தோழர்களேஉங்களது தலையங்கத்துக்கு எதிர்வினையாக எனது கருத்தையும் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன். கோவை ஞானி எஸ்.வி,.ஆர் குறித்துச் சொல்லியுள்ள கருத்து அவரது கருத்து மட்டுமே. கோவை ஞானி சொல்லிவிட்டதானலேயே எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என இடது கருதலாம். அது அதனுடைய கருத்து. ஆனால் அதை வைத்து அவரை மார்க்சிய அறிஞர் என்று என்னால் அளவிடமுடியாது. 
 
அப்படி அமைய வேண்டும் என்றால் எஸ்.வி.ஆர் ஒரு அறிஞராக இத்தனை வருடங்கள் மார்க்சியத்திற்கும் தத்துவத்திற்கும் அளித்த பங்களிப்புகள்கொடை என்ன. இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்திய எஸ்.வி ஆரின் மொழிபெயர்ப்பு நூலான சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் என்ற நூலில் தனது முன்னுரையில் எஸ்.வி.ஆர் மார்ஸெல்லோ முட்டோவை இளம் மார்க்சிய அறிஞர் என்கிறார்அருண் பட்நாயக்கை மார்க்சிய அறிஞர் என்கிறார். ஆனால் வால்ட்டர் பெஞ்சமினை மார்க்சிய சிந்தனையாளர் என்றே வகைப்படுத்துகிறார். எனவே யாரை மார்க்சிய அறிஞராக முன்மொழியமுடியும் என்கிற தேர்வும் அவருக்கிருக்கிறது. 
 
மார்க்சிய அறிஞர் யாரென என்னைக் கேட்கும் பட்சத்தில்ராஜதுரை  குகை மார்க்சியர்’ எனச் சுட்டிய தோழர் ரங்கநாயகம்மாவை உதாரணம் காட்டுவேன். மார்க்சிய அறிஞராக அவர் செய்த பங்களிப்புகளாக கீழ்க்கண்ட பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறேன்.
 
1  For the solution of the ‘caste’ question, Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must. [Pages: 400. Paperback. 1/8th demmy size. Rs. 80.]
 
2  House Work and Outside Work. [Pages: 104. Paperback.1/8th demmy size. Rs. 30.]
 
3  An Introduction to Marx’s ‘Capital’ (in 3 volumes). [Pages: 1972. Hardbound. 1/8th demmy size. Rs. 360.]
 
4.  Caste and Class: A Marxist Viewpoint. [Paperback. 1/8th demmy size. Rs. 60.]
 
இவைகளிலிருந்து நான் யாரை மார்க்சிய அறிஞர் என்ற பதத்தின் கீழ் அடையாளப்படுத்துவேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதில் ஒருவேளை உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின்மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்திற்கு யார் பொருந்துவார்இல்லை அப்பதத்தின் பெறுமதிகள் என்ன என்று நீங்கள் எனக்குச் சுட்டினால் மேற்குறித்து நாம் விவாதிக்கலாம்.  மார்க்சிய அறிஞரான! ராஜதுரை ஒரு நூலை (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு…..) விமர்சித்த முறையை வைத்துப் பார்த்தால்அவர் வெறுமனே அறிஞர் என்று அழைப்பதற்குக் கூட தகுதியற்றவர் என்பதே என் கருத்து. விமர்சனங்களில் நட்புச் சோரம் போவதோதெரிந்தவர் அறிந்தவர் என்ற முகதாட்சண்யங்களைத் தாங்களும்விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். 
 
ராஜதுரையின் அளவுகோலின்படிஒரு நூலை யாரும் கண்டு கொள்ளாததானாலேயே அதைப் பொருட்படுத்தத் தேவையில்லைஎன்ற வாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை. இதை உறுதியாக என்னால் கூறமுடியும். தேனி தமுஎகச பொறுப்பாளர்கள் கூட எஸ்.வி.ஆரைப் படித்தது இல்லை என்பதை அவர்கள் பேச்சில் உணர முடிந்தது. நிலைமை இப்படியிருக்கராஜதுரை ரங்கநாயகம்மாவின் நூல் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை ஏதும் அறியாத ஒரு கூட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கிறார்.  இதுதான் ஒரு மார்க்சிய அறிஞர்! நூலை அளவிடும் முறையாஒரு தர்க்கத்திற்காக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதிகம் விற்ற நூல்தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா?  
 
முடியுமெனின்  ஒரு விவாதத்திற்காகதெலுங்கில் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை...நூல் தெலுங்கில் 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஆனால்  ராஜதுரையின் நூல் இரண்டாம் பதிப்பு வருவதற்கே இருபது வருடங்கள் ஆகிறது! தமிழில் ரங்கநாயகம்மா நூல் நான்கு மாத காலங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. முதல் பதிப்பில் 500 பிரதிகள்இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள்மூன்றாவது பதிப்பில் 2000 பிரதிகள் போட்டு அதுவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதுவா ஒரு நூலை மதிப்பிடும் அளவுகோல்.
 
இரண்டாவதுகண்டுகொள்ளப்படாத அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் விமர்சித்துவிட்டார்கள் (கண்டுகொள்ளப்படாத நூலை முதலில் ஏன் சத்யமூர்த்தி விமர்சிக்க வேண்டும்நூல் எழுதவேண்டும்!) என்று சொல்வதன் மூலம்  என்ன சொல்ல வருகிறார் ராஜதுரை. சத்யமூர்த்தி போன்றவர்கள் மார்க்ஸ் தேவையில்லை என்று சொன்னால்உடனே ராஜதுரை அவரே விமர்சித்துவிட்டார் என்று சொல்லி மார்க்ஸைப் புறக்கணியுங்கள் என்று சொல்வாராசத்யமூர்த்தியே  விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் ராஜதுரைக்கு சத்தியமூர்த்தி தத்துவ வழிகாட்டி போலவும்அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்து நகர்வதன் அர்த்தம்  என்ன இதற்குப் பெயர்தான் மார்க்சிய அறிஞரின்  வாதமாஇப்படி அவருக்கு உகந்தவர்கள் யாரேனும் விமர்சித்துவிட்டால் அந்த நூலைப் படிக்கவேண்டியதில்லையா?
 
மூன்றாவது களப்பணி செய்யவேண்டும்சும்மா கம்யூட்டர் முன்னால் தட்டிக்கொண்டிருந்தால் போதாது அவர் ஒரு குகை மார்க்சியர்” என்று உளறுவதன் மூலம் ரங்கநாயகம்மா கம்யூட்டர் முன்னால் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார் என்கிற சித்திரத்தை அங்கு வந்திருந்த தோழர்களுக்கு அவர் உணர்த்த விரும்பிய விதம் மிகுந்த மோசமான ஒன்றென இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன். 
 
மார்க்சிய அறிஞராக அவர் அம்பேத்கரையாவது படித்திருக்கிறாரா என்றால்அதுவும் எனக்கு சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ராஜதுரை படித்த அம்பேத்கரை அவரது வார்த்தைகளிலேயே இங்கு முன்வைக்கிறேன். 
 
 “புத்தரா கார்ல் மார்க்ஸா என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றிதனது இறுதி நாட்களில் எழுதி முடித்த  புத்தரும் அவர் தம்மமும்’ நூலிலும் கூடபுத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருப்பதைக் காணலாம்.” என ராஜதுரை எழுதியிருக்கிறார். 
 
அவர் குறிப்பிட்ட அந்த கட்டுரையில்புத்தரும் அவர் தம்மமும் நூலில் அம்பேத்கர் அப்பணியைச் செய்திருக்கிறாரா என்று பாருங்கள். புத்தரை மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியை அம்பேத்கர் எந்த நூலில் எந்தக் கட்டுரையில் கூறினார் என்பதை நீங்களே படித்துப் பார்த்துக் கூறுங்கள். 
 
இடது பத்திரிக்கைக்கு எனது கேள்விகள்.
 
1.எஸ்.வி.ஆர்  ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச்  செய்த பங்களிப்புகள் என்ன?
 
2.மார்க்சிய அறிஞர் என்ற வரையறைக்கு இடது இதழ் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?
 
3.மொழிபெயர்ப்புகளே மார்க்சியத்துக்கு அறிஞராக மாறும் தன்மையைக் கொண்டதாகிவிடுமா?
 
4. ஞானி சொல்லிவிட்டார் என்றால் அதை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டு,   அந்த பட்டத்தின் கீழ் இடது ஆசிரியர் குழு அவரை மார்க்சிய அறிஞராக கருதுகிறதா?
 
சிறுகுறிப்புஎஸ்.வி. ராஜதுரை அவர்களின் மார்க்சிய ஈடுபாட்டை நானறிவேன். அவரது பணிகளையும் நான் மதிக்கிறேன். அதே சமயம் அவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்வது மார்க்சிய அறிஞர்களை கொச்சைப்படுத்த வாய்ப்பளிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் சிறிது நாட்கள் சென்றால் கோவை ஞானிஎஸ்.என்.நாகராசன்அ.மார்க்ஸ்எஸ்.ஏ.பெருமாள் (இவரை மார்க்சிய அறிஞர் என அவரது கட்சியே சொல்கிறதுஅதோடு இவர் கேரளாவில் பிறந்திருந்தால்   மாஷே’ என்றும்பெருமாள் மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவார் என தமிழ்ச்செல்வனே சொல்லிவிட்டார். இந்த மாஷே கேமரா ரீடிங் பற்றி எழுதிய தத்துவ முத்துக்களையும் நீங்கள் அவரது நூல்களில் காணலாம். எல்லாம் தமிழக மார்க்சியர்களின் தலையெழுத்து!)இவர்களும் மார்க்சிய அறிஞர்களாகிவிடுவார்கள். 
 
 இப்படிப்பட்ட மார்க்சிய அறிஞர்கள்முகநூலில் தோழர் ரங்கநாயகம்மாவுக்குச் சூட்டிய பட்டங்கள்மற்றும் சில அறிவார்ந்த விமர்சனங்களில் சிலவற்றை ஒரு பார்வைக்காக கீழே வைக்கிறேன். அது நிலவி வரும் விமர்சன அறிவுச் சூழலைஉங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தும் வல்லமை கொண்டவையாக இருக்கும் என நம்புகிறேன்.
 
ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கருக்கு செருப்பு மாலை  போட்டிருக்கிறதுரங்கநாயகம்மாவின் நூல் நரகல். ரங்கநாயகம்மா ஒரு மார்க்சியப் பொறுக்கிசெறுப்பால் அடிப்போம்வன்கொடுமை சட்டத்தின் மூலமாக மிரட்டல்ஆதிக்க சாதி,  என்.ஜி.ஓ.புத்தகம் மூலம் நிறைய பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார்கள்டெல்டும்டே தலித் காவலன்னு கம்பு சுத்தினார்இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுது ஏன் வரவேண்டும்மொழிபெயர்ப்பைத் தவிர்த்திருக்கலாம்மார்க்ஸ் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்பரிதாபத்திற்குரிய மார்க்ஸ்,மார்க்ஸ் தேவையில்லைமார்க்ஸ்க்குப் பின்னாடி வந்த அத்தனை பேரும் தேவை,  ரங்கநாயகம்மா ஒரு காலம்னிஸ்ட்ரங்கநாயகம்மாவுக்கு மார்க்சியம் தெரியாதுஎலும்புக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற்போல் இருக்கிறதுகாழ்ப்புணர்ச்சி கொண்ட எழுத்துக்கள்அபத்தமான நூல்,  மார்க்ஸியத்தோட சாரம்சத்தை மார்க்ஸ்க்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டார்,கள்ள மௌனம் காக்கிறார்கள்முட்டாள்தனமாய் எழுதப்பட்ட புத்தகம்ரங்கநாயகம்மா ஒரு பூனைமொழிபெயர்க்கத் தகுதி இல்லாத புத்தகம்தத்துவப் பரதேசிகள்மண்டை சூம்பிப்போய் கண்டபடி உளறுபவர்கள்ரங்கநாயகம்மா ஒரு குகை மார்க்சியர். அந்த நூலை யாருமே பொருட்படுத்தவில்லை,தேர்ட் ரைட் பாலிமிக்ஸ்கம்யுனிஸ்ட் என்றதும் வரலாற்று பொருள் முதல்வாதம்இயங்கியல் பொருள் முதல்வாதம் என்று சொல்லி, 'வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் தோய்த்துஎழுதுவார்களே அப்படியொரு பழைய கபாலி எழுத்து இதுமுற்றிலும் காலாவதியான நூல்,ரங்கநாயகம்மா நூலைப் படித்தால் ரத்தம் கக்கி சாவான்ரங்கநாயகம்மா யாருக்கோ வப்பாட்டி.
 
தோழர்களே... மார்க்சியத்துக்கு தமிழகத்தில் பல அறிஞர்கள் தேவைப்படும் சூழல் இங்கு நிலவுகிறது அதை நாம் வரவேற்போம். ஆனால் அதற்காகமார்க்சியத்துக்கு அறிஞராக எந்தப் பங்களிப்பையும் செய்யாதுதன் மனம் போன போக்கில் அந்நியமாதல்இருத்தலியம்,சார்த்தரியம்வைணவ மார்க்சியம்மேலை மார்க்சியம்கீழை மார்க்சியம்மண்ணுக்கேற்ற மார்க்சியம்தேசத்துக்கு ஏற்ற மார்க்சியம்நாட்டுக்கேத்த மார்க்சியம்தெருவுக்கேற்ற மார்க்சியம்பின்நவீனத்துவ மார்க்சியம்என்று வகைபிரிப்பவர்களை எல்லாம் மார்க்சிய அறிஞர் என்றால் அது மார்க்சியத்துக்கே கேட்டை உண்டாக்கும் என்பதை நினைவு படுத்துகிறேன்.
 
நன்றி
வசுமித்ர
 
11- 26 -2016 அன்று இக்கடிதத்தை இடது பத்திரிக்கைக்கு அனுப்பினேன். 
 
Jun 302017 அன்றுவிமர்சனத்தை வெளியிட்டீர்களா என்று தோழர் கணகுறிஞ்சிக்கு பதில் கேட்டிருந்தேன். பதில் வரவில்லை. பின் இடது இதழைக் கண்டதும் எனது விமர்சனம் வெளிவராதது கண்டு தோழர் ஓடை பொ.துரையரசனை செல்லில் அழைத்துகடிதத்தை வெளியிட விருப்பமில்லையா எனக் கேட்டதற்குஅந்த நூலுக்கு ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!) விமர்சனக் கூட்டம் நடத்தி அதன் பின் வரும் விமர்சனங்களோடு எனது விமர்சனத்தையும் இணைத்து வெளியிடுவதாகச் சொன்னார். கூட்டம் நடந்தபாடில்லைஅதற்கு மேலாக நான் இடது தலையங்கம் குறித்துதான் என் கேள்வியை கடிதத்தின் வாயிலாக வைத்தேன். கடிதம் வராமலேயே போகும் வாய்ப்பு இருப்பதால் இங்கு பொதுவெளியில் முன்வைக்கிறேன்.
 
 
பின்குறிப்பு;
 
இந்து கலாச்சாரக் காவலர்களுக்கு சற்றும் சளைக்காத புரட்சிகர வசைகளை எழுதிய தமுஎகச தோழர்கள்மார்க்சிய அறிஞர்கள்நவீன பௌத்த பிக்குணிகள்தலித்திய அம்பேத்கரிய அறிஞர்கள் குறித்து நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ரங்கநாயகம்மா புத்தகத்திற்குப் பின் இவர்கள் அடைந்த பதட்டங்கள்அச்ச உணர்ச்சிகளின் உளவியல் குறித்து தனியே எழுத வேண்டும் என்கிற ஆவல் உள்ளது.
 
 
---- 
( மீள்)
 
இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தை தனியாருக்குத் தாரை வார்க்க தனது உளவு வேலையைச் செய்திருக்கிறார் ராஜதுரை. மார்க்சிய அறிஞர்மார்க்சியப் பேரறிஞர் என்று கூவியவர்கள் எல்லாம் கூவிய வாயால் எங்கு என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் பூஜ்யம்.
 
தனக்கென்று எந்த அடையாளமில்லாது அலையும் சிலர்தங்களது அடையாளத் தேவைக்காக அமைப்பைப் பயன்படுத்தி சாதிச்சங்கம்-மதவாத அமைப்புகளுக்குள் ஒளிந்துகொண்டு தங்களது அறியாமையை படைப்புகள் என பந்தி விரிக்கும் வரை இது நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாது.
 
உரையாடல் தொடரும்...
 
-               வசுமித்ர

Tuesday, September 20, 2022

பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்

  




0.உங்களப் பற்றிய அறிமுகம். மற்றும் படைப்புகள்?

ஊர்- போடிநாயக்கனூர். அம்மா வீரலட்சுமிஅம்மாச்சி செல்லம்மாள் இருவரும் கூலித்தொழிலாளிகள் தம்பி நேதாஜி நரேந்திரநாத். பிழைப்பின் நிமித்தம் பல்வேறு கூலித்தொழில்களைச் செய்தேன். சித்தாள் தொடங்கி பனியன் கம்பெனி, ஹோட்டல் மேனேஜர் என்று பல்வேறு பணிகள். இப்பொழுது சின்னத்திரைக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன். சினிமா நடிகனாகவும் இருக்கிறேன். 

ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன, ..எர்னெஸ்த்தோ ச்சே கெபாராவைக் கொலை செய்தல்கள்ளக்காதல்நித்ரா நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி (ஆதிரனுடன் சேர்ந்து)தடை செய்யப்பட்ட புத்தகம்மரண இதிகாசம்பசலை ருசியறிதல்நுழைஇடக்கரடக்கல்ததாகம்கொலைக்குலவை ஆகிய கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். ஆய்வுகளாக அம்பேத்கரும் அவரது தம்மமும்அம்பேத்கரியப் பார்ப்பனியம்.

 

1.“மொழியை கடவுளெனத் துதிக்காமல், நாயைப் போல் ஏவிவிட வேண்டும்” இலக்கியம் எல்லாவற்றையும் இப்படி வெளிப்படையாகத்தான் பேசவேண்டுமா? பூடகமாகப் பேசுவதில் என்ன தவறு?

 

இலக்கியம் மறைமுகமாகப் பேச வேண்டிய விசயம் அல்ல. வெளிப்படையாகத்தான் பேசியாக வேண்டும். மறைக்க- மறக்கப்பட்ட விசயங்களைக் கொண்டுவருவதில் ஏன் மறைமுகம் காட்ட வேண்டும். வெளிப்படையாக பேசுவது என்பது உண்மையைப் பேசுவதென்பதாகும். நீங்கள் எவ்வளவுதான் பூடகமாகப் பேசினாலும் அதிலும் உண்மை இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை ஒரு படைப்புக்கு இல்லையெனில் அது யாருக்கோ தன் சேவகத்தைச் செய்கிறது என்பது என் கருத்து.

 

2.கவிஞன் அதிகாரத்திற்கு எதிரியாக இருக்க வேண்டும் என்றால், அவனுடைய இலக்கான விருதுகளை அடைவது எப்படி?

 

அதிகாரத்திற்கு எதிரியாக கவிஞர்கள் இருந்தால் அதிகாரத்திற்கு எதிரியாக இருப்பவர்கள் விருது கொடுப்பார்கள். இல்லையெனில் விருது வியாபாரமாக நடக்கும். இல்லையேல் நட்பின் அடிப்படையில் சாதி அடிப்படையில் குழுவாத விருதுகளாகக் கிடைக்கும். அத்தகைய விருதுகளை வைத்து படைப்பாளி பெருமைப்பட முடியாது. பின்வருபவர்கள் விருதைக் குறித்த ஏளனத்தையும் அதை வாங்கியவர் குறித்த திறனாய்வையும் முன்வைப்பார்கள். அது இறந்த படைப்பாளியை தோண்டி தூக்கிலிடும். விருதுகளுக்காக எழுதுபவர்கள் விருதுகளை அடைய வாழ்த்துகிறேன். கவிஞர்களின் இறுதி இலக்கு விருதுகள்தான் என்றால் எதையாவது எழுதி தனக்குத்தானே விருதுகள் வழங்கிக்கொள்ள வேண்டியதுதான். யாருக்கும் எந்த நட்டமுமில்லை.

 

 

3.இணையர்கள் இருவரும் ஒரே தளத்தில் இயங்குவதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி?

 

மார்க்சியம்தான் இருவருக்குமான ஒரே தளம்.  மகிழ்ச்சியான விசயம். ஒருவருக்கொருவர் தத்துவார்த்த தளத்தில் பங்களிப்பதும் கற்றுக்கொள்வதும்  உதவியாய் இருக்கிறது.

 

4.கொற்றவையும் காதலின் அறமும்?

 

எனது மிகச்சிறந்த மாணவி. என் ஆசிரியரும் கூட. காதலுக்கான அறமென்று நான் கருதுவது மரியாதையை.

 

 

5.அனல்வீசும் சிந்தனைகளுக்கு இடையில் உங்களிடமிருந்து வெளிப்படும் அப்பா மகள் கவிதைகளில் இருக்கும் உயிரோட்டம் எப்படி சாத்தியமாகிறது?

 

பிள்ளைகளைக் கொல்லத் துடிக்க அரசு எத்தனிக்கும்போது எந்த தகப்பனுக்குத்தான் பதறாது. பிள்ளைகள் என்றால் மக்களும் அடங்குவர்.  நானும் ஒரு காலத்தில் மகனாக இருந்தவன்தானே. எனது தாயின் கண்களில் சில போது நான் அடித்து வளர்த்த பிள்ளை இவன் என்கிற கர்வத்தையும் அதட்டலையும் உணர்கிறேன். அவர் தாயின் தன்மையோடு இளமையாக இருக்கிறார். நான் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். தாயின் பொய்களை அடையாளம் காணுமளவுக்கு. 

 

6.உலகமயமாக்குதல் இலக்கியத்தை மாற்றியிருக்கிறது என்ற உங்களின் வாதம் சரியென்றாலும், அது சிலருக்குச் சேவகம் செய்கிறது என்பது உண்மையென்றாலும், அது ஒரு பரந்துபட்ட வெளியைத் திறந்துவிட்டிருக்கிறது அதன்மூலம் சாமன்யனும் தன்னை ஒரு படைப்பாளியாக உருவாக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பது சரியான போக்குதானே?

 

அனைத்துவிதமான அறங்களையும் உருவிவிட்டு வெறும் நுகர்வுக்கான பண்டமாய்த்தான் எழுத்தாளன் தெருவில் விடப்பட்டிருக்கிறான். எழுத்தாளனும் சாமான்யன்தான். சாமான்யர்களின் பொருட்டு எழுதும் அவன் உண்மையானவும் கூட. அந்த சாமானியனைத்தான் உலகமயமாக்கல் கொன்றிருக்கிறது. பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது என்பதற்காக நாம் பெருமை கொள்ள முடியுமா என்னபடைப்பு? அது நல்ல விசயந்தான். சாமன்யன் படைப்பாளியாக இருந்து எதை எழுதுவான். உலகமயமாக்கல் போட்ட பிச்சையில் நான் படைப்பாளன் ஆனேன் என்றாஇது உண்மையில் வேடிக்கையாக இருக்கிறது.. 

 

படைப்பாளியாக உருவாக்கிக்கொள்ளும் படைப்பாளர் தனது இடத்துக்கும் அங்கீகாரத்துக்குமாக தன்னை மட்டுமே முன்னிறுத்தி அலையும் அலைச்சல்கள் மிகக் கொடுமையாக இருக்கிறது. இதில் சாதிக்கும் பங்கிருக்கிறது. எந்த சாதியும் இதில் விதிவிலக்கில்லை. எழுத்தாளனின் சாதியை வைத்து இவர் எங்க சாதி எழுத்தாளர் என்பது வரை விருதுகள் அணைப்புகள் எல்லாம் உண்டு. விளைவு சாதிவாரியான பிழைத்தல்கள். சாமான்யர்கள் உயிர்வாழ்தலின் பொருட்டு கூலியாகிறார்கள். இவர்கள் தங்களை முன்னிறுத்த சாதியை விளம்பரம் செய்கிறார்கள்.  இது வரமல்ல சாபம். உலகமயமாக்கல் படைப்பாளர்களை உற்பத்தியாளர்களாகவும் படைப்புகளை பண்டங்களாகவும்தான் மாற்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கதல்ல. 

 

தமிழில் இலக்கியவாதம்- இலக்கியவாதி என்பது பிழைப்புவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. “இதுநாள் வரையில்மரியாதைக்கு உரியதாக இருந்தபயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்தவாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அதுமருத்துவரையும் வழக்குரைஞரையும்மதகுருவையும் கவிஞரையும்விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது.” என்ற மார்க்ஸ் எங்கெல்ஸின் வார்த்தை உறுதியாகிக் கொண்டே வருகிறது.

 

 

7.தமிழ் இலக்கியமும் அடையாள அரசியலும், தரகர்களும்; ஒரு இலக்கிய வரைபடம்- வாசக வழிகாட்டி என்கிற உங்களது படைப்பை ஓர் இலக்கிய அறிக்கையென எடுத்துக் கொள்ளலாமா?

 

அது படைப்பாளர்களும் வாசகர்களும் எடுக்க வேண்டிய முடிவு. என்ன நடந்தது? என்ன நடந்திருக்க வேண்டும்? எதை எப்படியெல்லாம் திரித்தார்கள்மடைமாற்றினார்கள்என்பதற்கான விளக்கங்கள் அதில் உண்டு. என் வரையில் அது ஒரு சிறிய சுட்டல். 

 

8.கோணங்கி வகையறாக்கள் ஒருவகையான இறுக்கமான அல்லது தன்னிச்சையான இலக்கியப் போக்கினைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வசுமித்ர வேறுவகையான கோட்பாட்டியல் இலக்கியப் போக்கினைக் கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

கோணங்கி வகையறாக்கள் எழுதுவது உங்களுக்கே அது விளங்காததனால்தான் அதை வகைப்படுத்த முடியாமல் இறுக்கமான தன்னிச்சையான இலக்கியப் போக்கு எனக் கருதுகிறீர்கள். அவற்றைத் தான்தோன்றித்தனமான ஒன்றாகக் கூட வரையறுக்கலாம். பிழையில்லை. அவை வேண்டுமென்ற செய்யப்பட்ட வித்தியாச நோயால் பாதிக்கப்பட்ட இறுக்கம்.  இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டுமானால் அது ஒரு பொய் பிரக்ஞை. 

 

உருவத்தை உள்ளடக்கத்தைவிட முக்கியமானதாகக் கருதும் மரபு குறித்த விமர்சனத்தில் கார்ல்மார்க்ஸ் “ஒவ்வொரு விசயத்திலும் தங்களுடைய நடையை (உருவத்தை) விளம்பரப்படுத்த வாய்ப்பைக் காண்பவர்வெறும் உருவ ரீதியான இந்த செயல் மூலம் குழப்பமான ஓர் உள்ளடக்கத்துக்கு இட்டுச் செல்லப்படுகிறார். இந்தக் குழப்பமான உள்ளடக்கம் எதிர்மறையாக அதன் உருவத்தில் விகாரமாகத் தோன்றும்” என்கிறார். அதோடு “உருவத்துக்கு எந்த மதிப்புமில்லை-அது உள்ளடக்கத்தின் உருவமாக இல்லை என்னும் போது”என்கிறார். கோணங்கியின் இலக்கிய வடிவமான இந்த பொருத்தப்பாடின்மையும் குழப்பமும் வாசகனை வாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளுகிறது. புரியவில்லை என்பவர்களை மட்டம் தட்டும் சிந்தனை முறையை அடுத்தபடியாக அவரைச் சார்ந்த குழு முன்வைக்கிறது. எனக்குத் தெரிந்து கோணங்கியின் படைப்புகளை அவர்கள் நண்பர்கள் வாங்கிக் கொள்வார்கள். அவர் கூறும் புகையான சொற்களைப் பரப்புவார்கள். விளைவு கோணங்கி இலக்கியவாதியானார். அவரது ஆரம்ப கட்ட படைப்புகளில் இந்தக் குழப்பங்கள் இல்லை என்று சொல்வதில் எனக்கு முன்னோர்கள் இருக்கிறார்கள். கோணங்கியின் இந்த குழப்பமான நடைதான் அவரது தகுதியாக இருக்கிறது. 

 

இன்னும் சொல்லப் போனால் கல்குதிரைக்கு அவர் எழுதிய முன்னுரையை  அவரே திருடி அதைத் தன் சிறுகதையில் ஒரு பாராவாக துணிந்து சேர்க்க முடிகிறது. இதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது. எவரும் படிக்கமாட்டார்கள் என்கிற அவரது சுயவிமர்சனத்திலிருந்துதான். இத்தகைய ஏமாற்றுத்தனங்களை நாம் கேள்வி கேட்க வேண்டும்.

 

இதில் சமத்காரமாக ஒரு கூற்றைச் சொல்வார்கள். படைப்பு என்பது படைப்பூக்க மனநிலை. அதில் படைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது புரிகிற மாதிரி எழுது என்று சொல்வது அதிகாரம் என்று ஒரு குற்றச்சாட்டை வைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த தனிநபர் நட்பை முன்னிலையாக வைத்து அந்தப் படைப்பு அற்புதம் என்று வெட்கமேயின்றி பாராட்டவும் செய்வார்கள். இது எப்படி நிகழ்கிறதுஒரு படைப்பை திறனாய்வு செய்யக் கூடாது அப்படி செய்வது படைப்புக்கு எதிரான செயல் எனும்போது பாராட்டு மட்டும் எப்படி இனிக்கிறது. இந்த இடத்தில் “தனது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமான வடிகாலும் வெளிப்பாடும்தான் தனது கலைப்படைப்படைப்பே தவிர, அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என ஒரு கலைஞர் கூறலாம். அப்படியானால் அவர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். “இந்தக் கலைப்படைப்பை உருவாக்குவதற்கு வேறு நோக்கம் இல்லை என்றால், உங்கள் படைப்பில் மற்றவர்கள் ஏன்,எதற்காக ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்” என்ற ராஜதுரையின் கேள்விகள்தான் மேலெழுகிறது. 

 

படைப்பை எழுதிவிட்டு தனக்கான புகழை மட்டும் சுவைப்பதும், படைப்பின் மீதான திறனாய்வை தட்டிக்கழித்து பொறுப்பற்று நடப்பதும்தான் இவர்களது கலை கலைக்காகவே என்கிற புலம்பல்.  அவ்வளவே. மற்றபடி கோட்பாட்டளவில் நான் மார்க்சிய  மாணவன். அவ்வளவே. 

 

 

9.அயோத்திதாசப் பண்டிதர், அம்பேத்கரை விமர்சித்தால் விமர்சகர்களின் சாதியைக் குறித்துப் பேசும் போக்கு இங்கு ஏன் நிலவுகிறதுஉங்கள் மீதும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

 

அயோத்திதாசரை அம்பேத்கரைப் படிக்காமல் வருவதினால் வரும் பதட்டம் இது. “அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், “சாதி ஒழிப்பு” நூலில் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும்தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்த தமிழாக்கமும் கூடத் தமிழ்நாட்டிலிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோதலித் அரசியல் கட்சியையோ சாராத தலித் முரசுஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் புணே ஒப்பந்தம் தொடர்பாகவும் அம்பேத்கரின் பௌத்தமத மாற்றம் தொடர்பாகவும்இடஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்டநடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட சாதி ஒழிப்பு’ குறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத தலித் எழுச்சி’ தமிழகத்தில் இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால்தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கர் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளனஅவர்கள் செய்யத் தவறியவை ஒருபுறமிருக்கட்டும். என்.சி.பிஎச் நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை இந்த  எழுச்சி மிக்க’ தலித் இயக்கங்கள்  நடத்தியிருக்கின்றன?” என்று கேட்கப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

அம்பேத்கர் வாழ்க என்று சொல்லிவிட்டால் தலித் போராளி என்கிற பட்டம் கிடைக்கும். அடையாள நெருக்கடியில் உள்ளவர்கள் செய்த காரியம்தான் இது. அம்பேத்கரைப் புகழ்ந்தால் அவரது சாதி முக்கியமில்லைஇது சாதி அடையாள அரசியல். இந்துத்துவ அம்பேத்கர்’ நூலை உருவாக்கியவரின் சாதி குறித்துப் பேசப்படாதது ஏன் என்று ஒரு கேள்வியை முன்வையுங்கள்அடையாள அரசியல் தனக்குத்தானே அம்பலப்பட்டுக்கொண்டிருப்பது உங்களுக்குப் புரியும். மற்றபடி பெரியாரை இதில் சேர்க்க முடியாது. அவர் சாதிக்கும் மட்டுமல்ல கடவுளுக்கும் எதிரி. அந்த வகையில் அவர் இந்த வரிசையில் இணைய மாட்டார். 

 

அயோத்திதாசரும் அம்பேத்கரும் கடவுளை உருவாக்கியவர்கள். அயோத்திதாசர் புத்தரையே பிரம்மன் இடத்தில் வைக்கிறார். அம்பேத்கர் புத்தரை மாயங்கள் கொண்டவராக புதிய கடவுளாக அவரை அறிவிக்கிறார். நான் ஏலவே சொல்லியதன்படி இங்கு அம்பேத்கரைப் படிப்பதோ விவாதிப்பதோ திறனாய்வு செய்வதோ தேவையில்லை. அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்திப் பிழைத்தால் போதும். அதுதான் அம்பேத்கரியப் பார்ப்பனியமாக இங்கு மலர்ந்திருக்கிறது. அம்பேத்கர் சொல்லாததையெல்லாம் சொல்லி அம்பேத்கரியவாதியாக ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் பிழைப்பதும் நடக்கிறது. 

 

இத்தனை காலமாய் இத்தகையோர்களது பிம்பவணக்கத்தில் மட்டும் காட்டப்பட்டிருந்த அம்பேத்கரைத் திறனாய்வு செய்கையில் மாயைகள் நொறுங்குகின்றன. ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியாத நிலையில் சாதியைக் கையில் எடுக்கிறார்கள். வேறென்ன அம்பேத்கரியப் பார்ப்பனியம்தான்.

 

10.இலக்கியவாதிகளுக்குள் இருக்கும் சாதிய மனநிலையும் குழு மனபோக்கும் குறித்து  பின்நவீனத்துவம் பேசுகிறதா?

 

அத்தனை பிரிவுவாதங்களையும் பின்நவீனத்துவம் வளர்த்தெடுக்கும். சாதியை அடையாள அரசியலில் சேர்த்து  பின்நவீனத்துவம் கைதட்டும். வரவேற்கும். அதற்கு தத்துவ முலாம் பூசும். இங்கு பாதிப்பேருக்கு புரியாமல் எழுதுவதுதான் பின்நவீனத்துவம் என்ற புரிதல் இருக்கிறது. “பின்நவீனத்துவம் ஒரு தத்துவமே அல்லஅது எல்லாத் தத்துவங்களையும் நிராகரிக்கிறது.பின்நவீனத்துவம் வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரான அணுகுமுறை எனத் தன்னைப் பிரமாதமாய் அறிமுகப்படுத்திக் கொள்கிறது. ஆனால் தத்துவ அடிப்படை அல்லாத அணுகுமுறை எங்கே இருக்கிறதுஎல்லா மொழித் தத்துவத்தையும் நிராகரித்தல் என்ற பெயரில் மதம்,அரசியல் பொருளாதாரம்,பகுத்தறிவு,மார்க்ஸியம் உள்ளிட்ட தத்துவங்களையும்அறிவியலையும் பெருங்கதையாடல் என நிராகரித்துவிடுகிறது. பின்நவீனத்துக்கு வர்க்கம்,அரசு,குடும்பம்,மரபு,ஒழுக்கம் போன்றவை மொத்தத்துவப்படுதுதலின் அடையாளங்கள். இதனை நிராகரிக்க வேண்டும் என்கிறது. எல்லா அதிகாரங்களையும் மறுத்து-பொதுக்கருத்து என்ற ஒன்றை நிராகரிக்கும் பின்நவீனத்துவம் அநீதிக்கு எதிரான கலகத்தின் தத்துவம் கூட அல்ல. உலகமயமாக்கலின் கீழ் நுகர்வு அலகாக மாறிக் காணாமல் போன தனிமனிதனை மீட்டெடுத்து தனியனாக்கி அவனை ஒழுங்கற்ற குழப்பவாதி ஆக்கும் அராஜக கோட்பாடாகும்" என்கிறார் தேவ பேரின்பன்.

 

பின்நவீனத்துக்கென்று  இருக்கும் நோக்கம் கலைப்புவாதமே. அனைத்துத் தனி மனித அவஸ்தைகளையும் வரவேற்று தத்துவ முகம் கொடுத்து தனியாய் நிற்கச் சொல்லும். நோய்க்கான காரணத்தை விளக்காது. நோயை மட்டுமே வியாக்கியானத்தில் எடுத்துக்கொள்ளும். தனிமனிதத்துவமே சகல விடுதலை என்று கூறும். பிறகு தனது ஏற்படுத்தப்பட்ட அவஸ்தைகளை படைப்புகளாக அதன் பேரில் வைக்கும். அதற்கும் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இங்கிருந்துதான் எனது படைப்பு’ ‘என் சுதந்திரம் என்று பேசப்படுகிறது. எனது படைப்பை எவரும் விமர்சிக்கக் கூடாது என்கிற அகங்காரம் அதனடிப்படையில்தான் உருவாகிறது. மக்களுக்குப் புரியவில்லை என்றால் அது அவர்களது பாடு என்றும். விலக்கத்தக்க உறவுகளை சித்தரித்தும் ஆபாசமாக பொருத்தமற்ற கூற்றை வைப்பதும் அதன் பேரில் விளம்பரம் தேடிக்கொள்வதும் நடக்கிறது.  உண்மையில் இங்கிருந்துதான் சாருநிவேதிதா போன்ற கோமாளிகள் உருவானார்கள். பின் அதனை அடியொற்றி சிலர். ஆங்கிலப் படங்களைப் பார்த்து தமிழில் பெயர்களை வைத்து கதை எழுதுவதெல்லாம் நடக்கிறது. படம் பார்த்து கதை சொல் என்பதை அவர்கள் இன்னமும் மறக்காமல் நவீன எழுத்தாளர்களாய் உருவாகிக்  கொண்டிருக்கிறார்கள். 

 

இவர்கள் தங்களது எழுத்துக்களில் இன்னமும் குடும்பத்தைத் தாண்ட முடியாமல் தவிப்பது புரிகிறது. அயலக சினிமாக்களில் குடும்பம் தாண்டிய அல்லது குடும்பத்தைக் காக்க தவிக்கும் ஏற்பாடுகளை எழுதிப்பார்க்கத் துணிகிறார்கள். விளைவு இரண்டும் கெட்டானாய்த்தான் படைப்பு வந்துவிழுகிறது. இதில் பேர்பெற்றவர்கள் உள்ளனர். ஆதவனின் என் பெயர் ராமஷேசன் நாவலில் இருக்கும் ஒரு பாரா போன்று தன் வாழ்நாளில் எழுதிவிடமாட்டோமா பசித்த மானிடத்தில் ஒரு பக்கத்தையாவது எழுதிவிடமாட்டோமா என்று தவிக்கும் பலபேரை பார்த்திருக்கிறேன். சாத்தியமில்லை. காரணம் ஒன்றுதான். தான் அறியாத-நோக்கமற்ற ஒன்றை- தன் அடையாள நெருக்கடிக்காக எழுதவும் எழுதி விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆவலும், பிழைப்புவாதமும்தான். 

 

அவப்புகழ் தேடியாவது தன்னை நிரூபித்துக்கொள்ளத் துடிக்கும் களமாக தமிழ் இலக்கியம் மாறிவருவதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அசிங்கமாப் பேசிவிட்டாலே அது இலக்கியத்தில் சேர்த்தியாகிவிடுகிறது. என்ன செய்வதுகாலத்தில் மிஞ்சவே கூடாது என்ற கங்கணம் கட்டிக்கொண்டு அப்பொழுதைய சம்பவங்களை படைப்புகள் என்ற போர்வையில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் ஒரு பாடல் பாப்புலாராவது அடுத்து ஒரு புதிய பாடல் பாப்புலரனாதும் மறக்கப்படுவது போல் இங்கு படைப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன. 

 

யதார்த்த எழுத்துச் செத்துவிட்டது என்று இவர்கள் முதலில் கூறியதற்கு காரணம், தங்களது அடையாள நெருக்கடியில் தங்களுக்கான அடையாளத்தை எப்படியாவதுஅவப்புகழ் தேடியாவது தங்களை வெளிச்சத்தில் மின்னச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் செயற்கையான மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய வக்கிரங்களை எழுத்தாக வைக்க முடியவில்லையே என்கிற மனநிலைதான். ஆனால் யதார்த்தம் செத்துவிட்டது என்று உரக்க முழங்கியவர்கள் தங்களது படைப்புகளில் குடும்பத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உலகுதழுவிய பிரச்சினைகளை இவர்களால் காணமுடியாத பரிதாபம்தான் இங்கு இலக்கியமாக இருக்கிறது. விளைவு- அம்மா...அம்மம்மா.. அப்பா அப்பப்பா...

 

இது மிக விரிவாகப் பேச வேண்டிய ஒன்று என்பதை மட்டும் சுருக்கமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

 

11.முற்போக்காளாராக எழுத்தைத் தொடங்குபவர்கள் பின்னாட்களில் தங்கள் சாதி மனநிலையை படைப்பில் வெளிக்காட்டுவது ஏன்இதற்கு எதேனும் கோட்பாட்டுப் பின்புலம் உள்ளதா?

 

அவர்கள் எப்பொழுதும் சாதியாளார்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆதாரங்களை எனது நூலிலேயே வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒரு முற்போக்கான அமைப்பு. சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமைப்பு. ஆனால் சாதிச் சங்கத்தில் இருந்து கொள்வதும் சாதிச் சங்கத்துக்கு சந்தாக் கட்டிக்கொண்டே மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் முற்போக்காளராக தங்களை அறிவித்துக்கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மாற வாய்ப்பே இல்லை. எங்கிருந்தாலும் தங்களது சாதி சார்ந்த எண்ணங்களை நாசூக்காக வெளியிட்டபடியேதான் இருப்பார்கள். தாங்கள் கேட்டதை வேடிக்கை பார்த்ததை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதையே இலக்கியம் என்கிறார்கள். ஒடுக்குகிற சாதியில் பிறந்து எழுதினால் அது ஆதிக்கச்சாதி எழுத்து. ஒடுக்கப்படும் சாதியில் பிறந்து எழுதினால் அது தலித் எழுத்து என்று சுருங்கிப் போயிருக்கிறது. 

 

இந்த பிரச்சினையில் தன்னை தலித்தாக முத்திரைக் குத்திக்கொண்டு தலித் விரோதக் கவிதைகளையும் படைப்புகளையும் முன்வைக்கும் அவலமும் இங்கிருக்கிறது. அதையும் தலித்படைப்பு என துணிந்து சொல்லும் கோமாளித்தனமும் நிகழ்கிறது. முன்னமே சொன்னது போல் எதை வைத்தாவது தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அவஸ்தை சாதியை வெறுமனே ஒரு கருவியாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறது. இதில் தலித் இலக்கியம் சிக்கியிருப்பது வருந்தத்தக்க விசயம். விவாதிக்க வேண்டிய விசயம். மக்கள் குறித்தான பண்புகளோ அவஸ்தைகளோ எதுவும் சித்தரிக்கப்படுவதில்லைமுடிந்ததெல்லாம் தன்னை நிறுவ சாதியைப் பயன்படுத்தும் எண்ணம் மட்டுமே. இதுதான் இங்கு பெரும்பாலும் நிகழ்கிறது. அவர்களது கோட்பாடெல்லாம் தன்னைத் தானே படைப்பாளி என்று கூறிக்கொள்வதும் ஆள் சேர்ப்பதும் தானேயொழிய வேறில்லை. 

 

12.தமிழ் சிந்தனைப்பள்ளி அல்லது இலக்கியப்பள்ளியை தற்போதுள்ள விட்டேத்தியான சூழ்நிலையில் கட்டமைக்க முடியுமா?

 

சிந்தனைப்பள்ளி குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன். நீங்கள் இங்கு கேட்பதால் அதையே கொஞ்சம் விரிவாக இணைக்கிறேன். தமிழில் இசங்களின் வருகைக்கு முன் எந்தப் படைப்பும் எந்தப் படைப்பாளியும் இசத்தை முன் வைத்து இங்கு உரையாட வரவில்லை. கா.நா.சுவெங்கட் சுவாமிநாதன்அதற்கடுத்து சுந்தரராமசாமி,  வகையிலான விமர்சனங்களில் அதிகமும் ரசனை சார்ந்த விமர்சனமும் குழு மனப்பான்மையுமே விமர்சனமாக இருந்தது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் கலை கலைக்காகவே எனச் சொன்ன பார்ப்பன சைவ வெள்ளாள விமர்சனமாக சாதி சார்ந்து இயங்கியது. படைப்பாளியும் விமர்சகனும் மாறி மாறி இயங்கியது இந்த புரிதலின் வெளியில்தான். உழைக்கும் வர்க்கமாக இவர்கள் இல்லாத நிலையில் இது மேலெழும்புவது புரிந்து கொள்ளத்தக்கதே.

 

இதற்கு எதிராகஅமைப்பு ரீதியாய்தத்துவப் பின்புலத்தை அடியொற்றி நடந்த விமர்சகர்களும் விமர்சன இயக்கங்களும் உண்டு. ஆனால் அவர்கள் இடதுசாரிகள்முற்போக்காளர்கள் என்ற காரணத்தினாலேயே ஒதுக்கப்பட்டும்ஒட்டுமொத்த மார்க்சியமே இலக்கியத்திற்கு எதிரி என்றும் வசைபாடப்பட்டார்கள். வர்க்கப் பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முடியாதுவர்க்கம் என்பதெல்லாம் பெருங்கதையாடல் என்றவர்கள் அதற்கு பதிலீடாக எந்த மாற்றக் காரணியையும் முன் வைக்காமல் இசங்களில் தலை நுழைத்து நுண் அரசியல்மீச்சிறு அலகுகள் நிறுவன எதிர்ப்புஅமைப்பு எதிர்ப்பு என மேற்கோள்களை வைத்தார்கள். இன்னும் அலை ஓய்ந்தபாடில்லை. கலை வேறு மக்கள் வேறுகலைக்கு மக்களைப் பேச வேண்டிய தேவை இல்லை. அது விருப்பினால் எதுவும் பேசும் என்ற ரீதியிலான விவாதங்களும் நடந்தது உண்டு. நடந்து கொண்டிருக்கிறது. 

 

சுருங்கச் சொன்னால் தமிழில் சிந்தனைப் பள்ளிகளும் எழுத்தாளர்களுக்கு வாய்க்கவில்லை. ஒரு வாதத்திற்காக தமிழ் சிந்தனைப்பள்ளிஇலக்கியப்பள்ளி என எடுத்துக்கொண்டால் இங்கு சுந்தர ராமசாமியின் சிந்தனைப் பள்ளியில் வந்தவர்கள் ஜெயமோகன் தொடங்கி மனுஷ்யபுத்திரன் லஷ்மி மணி வண்ணன்சங்கர ராமசுப்பிரமணியன் வகையறாக்கள்அ. மார்க்ஸ் சிந்தனைப்பள்ளியை முன் வைத்து இயங்கியவர்கள் என்று பார்த்தால் ஷோபா சக்திஒரு கால கட்டம் வரை வளர்மதி இன்ன பிறர். இதில் பலர் சேர விலக காரணங்கள் விவாதங்கள் இருந்திருக்கிறது. இதற்குப் பின் அன்று தொடங்கி இன்று தற்காலச் சிந்தனைப் பள்ளி என்று பார்த்தால் அது இன்னும் கோரமாக பல்லை இளிக்கும் கோணங்கி சிந்தனைப் பள்ளி. இதைப் பின் தொடர்பவர்களைக் காட்டிலும் கோணங்கி பின் தொடர்ந்து செல்லும் ஆசிரியர்களான நாகார்ஜுனன்எஸ் சண்முகம் இவ்வகையினங்களே. 

 

 இன்று கால ஓட்டத்தால் தனக்கென்று ஒரு மலை தனக்கென்று ஓர் பஜனைப் பட்டாளம் என இயங்கி வருகிறது. அதில் ஜெயமோகன் பெருந்தெய்வ உற்சவராய் இருக்கிறார். இந்து மடங்கள் போய் இலக்கிய மடங்கள் உருவாகியிருக்கிறது. அச்சுறுத்தும் பிரச்சினைகளை மன அமைதியினால் எதிர்கொள்ளுங்கள் என அது தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறது. அதன் கருதுகோள்கள் அனைத்தும் சாந்தி சாந்தி என்று முழங்குவதில்தான் போய் முடிகிறது. அமைதியைக் குலைத்தவர்கள் யார் என்று ஜெயமோகனால் ஒருபோதும் அடையாளம் காட்டாது. இதில் பிரச்சினை என்னவென்றால் ஜெயமோகனைப் பொறுத்த மட்டில் வாசகர்களை உருவாக்க முடியுமே தவிர  சிந்தனைப் பள்ளியை உருவாக்க முடியாது. முதலும் முடிவுமான மரபுகளை அவர் வைத்திருக்கிறார். மடாதிபதிகளின் தூய வைதீக மரபையே ஜெயமோகன் இலக்கிய முன்வைப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார். 

 

அதுதவிரஅச்சகம் அறுகியிருந்த காலத்தில் தங்களை மேதைகளாகக் காட்டிக்கொண்ட இந்த சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்கள்இப்பொழுது எவர் வேண்டுமானாலும் புத்தகம் போடலாம் என்கிற காலம் வந்ததும் மறக்கப்படுகிறார்கள். விளைவு தன்னை மறந்து போகக் கூடாது என்பதற்காக புதிதாக எழுத  வருபவர்களைத் துதிசெய்கின்றனர். விளம்பர வெளிச்சத்திற்கேற்ப பிஸ்கெட் பாக்கெட்டுகள் கிடைக்கின்றன. அவர்களும் இதற்கு பதில் அளிக்கும் முகமாக என் சிந்தனையாளனே என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படைப்பு முச்சந்தியில் சிரித்துக்கொண்டிருக்கிறது.

 

அதே சமயம் நா. வானமாமலை சிந்தனைப்பள்ளியை எடுத்துக் கொண்டால்மே.து.ராசுகுமார் தொடங்கி தோதாத்ரி,  ஆ. சிவ சுப்பிரமணியன்,  முத்துமோகன்பக்தவச்சல பாரதிக. பஞ்சாங்கம் வரை இன்னும் பட்டியல் நீளும். விவாதிற்காக முன்னகர்த்தினாலும் பொருட்படுத்தக் கூடிய ஆய்வுகளை முன்னெடுத்த சிந்தனைப் பள்ளி இதுதான். இவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. 

 

இதற்கடுத்து தனித்தனி விமர்சகர்களாக குறிப்பிட்டால்  எஸ் என். நாகராசன் இடதுசாரிக் கருத்தியலை மேலை மார்க்சியம் கீழைய மார்க்சியம் எனப் பிரித்து கடைசியில் வைணவத்துக்குச் சென்று சேர்ந்து மார்க்சியத்தில் அன்பில்லை என இந்துத்துவ சிமிழில் அடங்கினார்.  கோவை ஞானி தலித்தியத்திற்கு தத்துவப் பின்புலம் இல்லை என்று கூறி இந்து மெய்யியலில் எல்லாம் உள்ளது எனக்க்கூறி தமிழ்த் தேசியத்தை விதந்தோதினார். சோதிப்பிரகாசம் ஜெயமோகனால் சிரிக்கத் தெரிந்த மார்க்சியர் எனப் பட்டம் சூட்டப்பட்டு தான் எழுதிய ஆய்வுகளுக்கு எதிராக ஜெயமோகனது இந்து தத்துவ தரிசன நூலுக்கு முன்னுரை கொடுத்தார். இவ்வகையில் பலரும் இடம்பெறுவார்கள். 

 

இந்த தத்துவச் சிந்தனைப்பள்ளிகள்  தவிர  அமைப்பு விதியை ஏற்றுக்கொண்டு எழுத்தாளர்களுக்கென அமைப்பையும் பொறுப்பையும் சொல்லி அவர்களை வழி நடத்துகிற இந்தியக் கம்யூனிஸ்ட்க்  கட்சிகளுக்கான இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்கலை இலக்கிய பெருமன்றம் போன்ற அமைப்புகள். 

 

எல்லா அமைப்புகளையும் பாதிப்பது போல் இதிலும் அடையாள அரசியல்வாதிகள் புகுந்து குழுவாதங்களை இலக்கியமாகவும் அறிவிக்கின்றனர். தங்களது அடிப்பொடிகளை உருவாக்கி அவர்கள் எழுதுவதை படைப்பு என்று கூறி விசுவாசத்தின் அடிப்படையில் இவர்தான் படைப்பாளி என்ற அடையாள அட்டையையும் அவர்கள் கழுத்தில் தொங்கவிட்டு விடுகின்றனர். இதில் அமைப்புக்கோ இலக்கியத்துக்கோ அதில் எந்தப் பயனும் இல்லை. 

 

மார்க்சியத்தின் பின்புலத்தில் இருக்கும் அமைப்புகளான இதில் வருந்தத்தக்க பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. மார்க்சிய ஆய்வாளர்களுக்கு இத்தகைய அமைப்புகளில் பெரிய மரியாதை இல்லை. கதைகளை எழுதுவது கவிதைகளை எழுதுவது அதன்பால் ரசனையோடு சமூகத்தை மாற்றும் படைப்பு இது என்று கற்பனையில் உலாவுவது போன்ற விசயங்கள்தான் அதிகமும் நடக்கிறது. 

 

உண்மையில் இங்கு படைப்பாளர் என்றால் கதை கவிதை பாடல் எழுதுபவரை மட்டுமே குறிக்கப்படும் சொல்லாக உருமாறிப் போயிருக்கிறது. ஆய்வாளர்களை எவரும் முன்வைப்பதே இல்லை. புனைவுக்கு இருக்கும் மரியாதை அபுனைவுக்கு இல்லை. அதனால்தான் சொல்கிறேன் இந்த வரிசையே தவறு. அபுனைவு – புனைவு என்றுதான் வரிசைப்படுத்த முடியும். உண்மை பொய் என்ற வரிசைக்கு தத்துவ அடிப்படை உண்டு பொய்- உண்மை என்ற வரிசை எதை முன்னிலைப்படுத்துகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். கதை கவிதை எழுதுகிறவர் தன் மனநிலையை தானாக உண்டாக்கலாம். கேட்டதில் பார்த்ததில் எல்லாம் அவரது மனநிலை பதிவாகியிருக்கும். அதனால்தான் வாசிப்பவர்கள் தங்கள் மனநிலைக்கேற்ப வித்தியாசமான பார்வைகளையும் விமர்சனங்களையும் வைக்க வாய்ப்பளிக்கிறது. ஒரு கதையை- கவிதையை இப்படி புரிந்து கொள்ள வேண்டும் அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற பிரச்சினை இங்கு தொடங்கி, புரிகிற மாதிரி எழுதினால் என்ன என்ற நிலைக்கு வந்துவிடுகிறது. ஆனால் அபுனைவில் அப்படிப்பட்ட சாத்தியங்கள் குறைவு. கிட்டத்தட்ட இல்லையென்றே கூறலாம். 

 

ஒரு கட்டுரையை ஆவணத்தை எழுதும் படைப்பாளி தன் எடுத்துக்கொண்ட விசயம் குறித்து பல்வேறு ஆய்வாளர்களுடன் மக்களுடன் உரையாட வேண்டியிருக்கிறது. அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டியிருக்கிறது. அதன் பின் தன் கருத்தை ஆணித்தரமாய் வைக்க வேண்டியிருக்கிறது. இது எல்லாம் போக அந்தக் கட்டுரை யாருக்காக எழுதப்பட்டதுஅதன் நோக்கம் என்பதை கட்டுரை தெளிவாக அறிவித்திருக்கும். வியாக்கியானத்தை இதில் நாம் சேர்க்க முடியாது. உதாரணத்திற்கு நான் இப்படிச் சொல்கிறேன். ஒரு ஊரில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஒரு கவிதையோ நாவலோ எழுதுகிறார். இதைப் படிக்கும் ஒடுக்கும் சாதியைச் சார்ந்தவர் கண்ணீர் மல்கலாம். ஆனால் அது கூட அவருக்கு அனுகூலத்தையே தருகிறது. தான் எவ்வளவு நல்லவராக இருந்தால் அழுதிருப்பேன் என்கிற மனநிலையை அவருக்கு சாதகமாகத் தருகிறது. யோசித்துப் பாருங்கள் இதையே ஆய்வாக அந்த ஊரில் இன்னார் இந்தப் பெயருடையோர் இந்த சாதியால் படுகொலை செய்யப்பட்டார் என்று ஆவணத்தை வைத்தால் அதை வாசிக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் மனநிலை என்னவாக இருக்கும். அழுவாராஆத்திரப்படுவாராஅம்பலப்படுவாரா?

 

ஆளும் வர்க்கம் எப்பொழுதும் மக்களுக்குக் கதைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. நாம் பதிலுக்கு கதையைச் சொல்வது சரியா? இல்லை ஆவணங்களை அதன் முகத்தில் எறிவது சரியாஎன் வரையில் இது ஆவணங்களின் யுகம் என்றே சொல்வேன். ஒரு கூட்டத்தில் தமுஎகசவைச் சேர்ந்த கதையாளர் ஒருவர் கேட்டார். அப்படி எந்த ஆவணம் சமூகத்தை மாற்றியிருக்கிறதென்று. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்றேன். அவ்வளவுதான். இந்த நிலையை இரு பெரும் அமைப்புகளான தமுஎகச- க.இ.பெ. ம - வும் தங்களின் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

பைபிள் கீதை குரான் இவைகள் கதைகளாலனவை. பதில்களைக் கதையால் திருப்பித் தரமுடியாதுஆவணத்தாலும்-அறிவாலும் நாம் திருப்பித் தரவேண்டும். கட்டுரையாளர்களை வரவேற்க வேண்டும். இங்கு கதை கவிதைகளுக்கு வாசகன் உண்டு. கட்டுரைக்கு அப்படியில்லை. அங்கு எழுதப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் தோள்கொடுக்கும் தோழர்களும் பிரச்சினைக்கு உள்ளானவர்களும்தான் இருப்பார்கள். உண்மையை அதிகமும் நாம் வரவேற்போம். வரவேற்கவேண்டும். 

 

இவ்வமைப்புகள் போக இலக்கியத்தின் பால் நாட்டம் கொண்டு ரசனை மரபை முன்னெடுக்கும் உதிரியான சில அமைப்புகளும் இருக்கிறது. அதன் செயல்பாடுகள் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு திறனாய்வை செய்யாது பாராட்டுதல்களைச் சொல்லி கூட்டம் சேர்க்கிறது. இன்று திறனாய்வு என்பது இலக்கியவாதிகளுக்கு எட்டிக்கசப்பாய் முகம் சுளிக்கும் வசையாய் தெரிகிறது. 

 

மேற்சுட்டிய அமைப்பு சாராது இசங்கள் சார்ந்து  எழுதிய அனைவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவெனில் மார்க்சியத்தைத் தமிழ்ச் சூழலில் வைத்து கலாச்சார ரீதியாக ஒத்துவராது என்று பண்பாட்டு விமர்சன அடிப்படையை வைத்து மட்டுமே முடிவுக்கு வந்தவர்கள். அரசியல் பொருளாதரம் குறித்து பெரும்பகுதியாகஒப்பீட்டளவில் எதையும் பெரிய அளவில் முன்வைத்ததில்லை. பின்நவீனத்துவம்பன்மைகள்உடைத்தல்கள்இவைகள்தான் மாற்றுச் சிந்தனை எனச் சொல்வது. இரண்டாவதுமனிதனுக்கு மதம் முக்கியம்அன்பு முக்கியம்என தங்கள் நோக்கில் இந்து தத்துவ இயலை முன்வைத்தும் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தும் பேசியவர்களே. தமிழ் சிந்தனைப்பள்ளியை இப்பொழுதும் கட்ட முடியும். முதலில் அதற்கு சிந்தனைப்பள்ளிகள் என்றால் என்ன அதற்கான தேவை என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். பண்பாட்டு அடிப்படையை ஆதாரமாகக் கொண்டு பொருளாதார அடிப்படையை பின்னுக்குத் தள்ளுவது மிகவும் ஆபத்தானது. விளைவு அதே பண்பாட்டு அடிப்படையைக் கொண்டுதான் பாசிசம் தன்னை நிலை நிறுத்துகிறது. விளம்பரப்படுத்துகிறது.

 

பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும் 

 

13.தற்போதுள்ள தமிழ்ப் பேராசிரியர் இலக்கியம் பக்கமாக கரையொதுங்காமல், மாதச் சம்பளம் போதும் என்றிருப்பது மோசமான ஒன்றாக இருக்கிறதே. அவர்களின் பணிக்காலத்தில் இதர படைப்புகள் எழுதாவிட்டாலும் குறிப்பிட்ட அளவில் கட்டுரை எழுதுவதை அல்லது மொழிபெயர்ப்பு செய்வதை கட்டாயப்படுத்தலாம்தானே? 

 

எவரையும் கட்டாயப்படுத்தி எழுத வைக்க முடியாது. தங்களது வாழ்வாதாரங்களுக்காக கிடைக்கப் போகும் நலன்களுக்காக அவர்கள் தாராளமாக எழுதுவார்கள். கட்டாயப்படுத்தி எழுதிவாங்குவது பாசிச நடவடிக்கை. உங்களது அறிவை மக்களின் நலன்களுக்காகப் பங்களிப்பாகச் செய்யுங்கள்அவர்கள் கொடுத்த கூலியிலிருந்துதான் நீங்கள் இலட்சம் இலட்சமாக சம்பாரித்தீர்கள்கூலி கொடுத்த அந்த மக்களுக்காக உங்கள் கல்விப்பணியை செய்யுங்கள் என்று கோரலாம். 

 

கூடுதலாக தமிழகத்தைப் பொருத்தவரையில் பேராசியரியத் தொழில் என்பது பேசவும் எழுதவுமான ஒரு தொழில். அதனால் தங்களுக்குத் தெரிந்ததங்களுக்குப் புரிந்த அளவிலான தத்துவங்களை மேற்கோள்களாக வைத்து சிதைத்துக் காட்டினார்கள். காலத்துக்குத் தகுந்த கோலம். இதில் பாதிப் பேராசிரியர்கள் ரசனை சார்ந்து இலக்கியம் பேசினார்கள். மேலும் கலகத்திற்கான இலக்கியத்தையும் தத்துவத்தையும் முன்வைக்க இங்கு சூழலும் இல்லை. அம்பேத்கரியம் எனும் போது அது இன்னும் மோசமாக இருப்பவற்றை எல்லாம் கவிழ்க்கிறேன் என்றானது. மார்க்சியம் பேசினால் பிரச்சினை வரும். அதையும் தாண்டி பேசிய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். மக்களின் விடுதலைக்கான தத்துவம் குறித்து தங்கள் பணியைச் செய்துள்ளார்கள். இன்றுள்ள நிலையைச் சொல்ல வேண்டுமென்றால் மேலே சொன்னதுதான். எதாவது உருப்படியாகச் செய்தால் சர்ச்சை வரும் என்கிற அச்சத்தில் நமக்கு எதுக்கு வம்பு என்றெண்ணி தமிழ் இலக்கியத்தில் எதாவது ஒரு தலைப்பை வைத்து முன்னேறுவது வசதியாக இருக்கிறது. எது எளிதாக இருக்கிறதோ எது பிரச்சினைக்குரியதாக இல்லாமல் இருக்கிறதோ அதைச் செய்தால் போதும். அதுவே பொன் செய்யும் மருந்து என்று உணர்ந்திருக்கிறார்கள். பேராசிரியர்கள் கட்டிய வீடுகள் எல்லாம் அவர்களது புகழ்களை காலம் காலமாக பாடும். 

 

14.வசுமித்ர கலகக் காரரா?

 

மார்க்ஸின் மாணவன்.

 

 

15.தற்போதைய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டுவீர்கள்?

 

முதலில் இந்த தற்போதைய என்ற வார்த்தை படைப்புகளுக்கு உதவாது என்றே எண்ணுகிறேன். தற்போது குப்பை கொட்டிகளும் இருக்கிறார்கள் உயிரோடு இல்லாமல் இன்னும் படைப்பாளிகளை உருவாக்கும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். எனவே தற்போதைய என்ற காலத்தை தள்ளிவிட்டு எனக்குப் பிடித்த படைப்புகளையும் படைப்பாளர்களையும் முன்மொழிகிறேன். குறிப்பாக மொழியை அளவுகோலாக நான் கொள்வதில்லை. எனது கருத்துவரையில் சில படைப்புகளில் உயிரோடு உலாவும் எழுத்தாளர்கள் சில படைப்புகளில் பிணங்களாக காட்சியளிக்கிறார்கள். இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. பொதுவாக படைப்பு என்றாலே இலக்கியம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதை நான் ஏற்பதில்லை. உண்மையில் சமூகத்தை மாற்றியமைத்த மாபெரும் படைப்புகள் புதினங்களாக கவிதைகளாக இங்கு இல்லை. கோட்பாடுகளாகத்தான் இருக்கின்றன. படைப்பு என்றால் அதற்குத்தான் நான் முதலிடம் தருவேன். புனைவு – அபுனைவு என்கிற வரிசையே தவறு. அபுனைவு- புனைவு என்றுதான் இருக்க வேண்டும். அந்தவகையில்கார்ல்மார்க்ஸ்-எங்கெல்ஸ்,லெனின்ஆகஸ்ட் பேபல்தேவிபிரசாத் சட்டோபாத்யாயகோசாம்பிடி.டி.கோசாம்பிடி.என்.ஜாஆர்.எஸ்.சர்மாராகுல சாங்கிருத்தியாயன்ரொமிலா தாப்பர்ரங்கநாயகம்மாஇன்னும் ஏனைய இடதுசாரிப் படைப்பாளிகள். தமிழில்- தேவ பேரின்பன்தி.சு.நடராசன்கார்த்திகேசு சிவத்தம்பிபஞ்சாங்கம்ராஜ்கௌதமன்ரவிக்குமார்எஸ்.வி.இராஜதுரைஅ.மார்க்ஸ்யமுனா ராஜேந்திரன், போன்றோர். புனைவுகளில் சில படைப்புகள் விதிவிலக்கானவை ஏன் சொல்கிறேன் என்றால் நாவலாசிரியர்கள் அடுத்தடுத்த புனைவுகளில் தோல்வியைத் தழுவுவதும் உண்டு. அதனால் படைப்புக்களின் பெயர்களை முன்மொழிகிறேன். காதுகள்என் பெயர் ராமஷேசன்பசித்த மானிடம்ஜே.ஜே.சில குறிப்புகள்சிலுவைராஜ் சரித்திரம்பீக்கதைகள்கூளமாதாரிதாண்டவராயன் கதைஏழாம் உலகம்விஷ்ணுபுரம்பின் தொடரும் நிழலின் குரல்வெயிலைக் கொண்டு வாருங்கள்மகாராஜாவின் ரயில் வண்டிம்சொல் என்றொரு சொல். போன்ற நாவல்கள்கவிதைகளில்  சங்க இலக்கியங்கள் தொடங்கி இரவுகளின் நிழற்படம்அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்குஒடக்குரத்த சந்தனப்பாவைகாமக்கடும்புனல்உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்கருப்பு வெள்ளைக் கவிதைகள்,பேரழகிகளின் தேசம்முலைகள்நெரிந்துகுற்றத்தின் நறுமணம்அக்காளின் எலும்புகள் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்போன்ற படைப்புகள் இருக்கிறது. இதோடு மொழிபெயர்ப்புகள் நிறைய உண்டு. தனியே பட்டியல் தேவைப்பட்டால் விரிவாக கொடுப்பேன்.

 

16.தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் மீது விமர்சனம் எழாதாவாறு புனித பிம்பம் கட்டமைக்கப்படும் மனப்போக்குகள் குறித்து நீங்கள் சொல்வதென்ன?

 

திறனாய்வு செய்தால் தங்கள் தலைவர்கள் அம்பலப்பட்டுப் போவார்களோ என்ற அச்சம் மட்டுமே தலைவர்களைக் கடவுள்களாக்கி இவர்களைப் பூசாரிகளாக உருமாற்றியிருக்கிறது. கடவுள் சிலைகளை அம்பலப்படுத்தினால் பூசாரிகள் பதறுவது புரிந்துகொள்ளக் கூடியதுதானே.

 

 

17.உங்களின் சேகரிப்பில் இருப்பவற்றில் வாசிக்காத புத்தகங்கள் என்று எதுவும் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்திய வாசிப்பில் சிறப்பான புத்தகம்/புத்தகங்கள் என்று ஏதேனும் இருக்கிறதா?

 

வாசிக்காத புத்தகங்களும் இருக்கிறது. போரும் அமைதியும் போன்ற படைப்புகள் இருக்கிறது. கம்பராமாயாணம்மஹாபாரதம் இருக்கிறது. அவ்வப்போது தோன்றுகிறபோது ஆய்வின் நிமித்தம் எடுத்து அவற்றைப் புரட்டுவேன். மற்றபடி வாசித்துக்கொண்டே இருக்க வைக்கும் கட்டுரைகள் உண்டு. மறுவாசிப்புக் கோரும் நூல்களே அதிகம். மூலதனத்தை முழுமையாக வாசிக்கும் தாகம் இருந்துகொண்டே இருக்கிறது. இக்கேள்வியை அடிப்படையாக வைத்து ஒரு சிறு விண்ணப்பம். அம்பேத்கரின் படைப்புகள் பெருந்தொகுப்பாக வர இருக்கிறது. அதை யாரேனும் வாங்கிக்கொடுத்தால் நன்றியுடையவனாய் இருப்பேன். 

 

18.எழுத்தாளர்களுக்கு இணையாக பதிப்பகங்ள் அதிகம் உருவாகிறதே அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

 

படைப்புகளும் வந்தால் நல்லது என்று நினைப்பேன்.

 

 

உங்கள் மீது தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்திருந்ததேஅதன் நிலை என்ன?

 

இதில் நான் ஆச்சரியப்படவும் பகிரவும் விசயங்கள் உண்டு. விசயம் என்னவெனில் அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலை வெளியிட்ட அடுத்த நாளே எனக்கு கொலை மிரட்டல் வந்தது. நூலில் நான் என்ன எழுதியிருக்கிறேன் எதைச் சொல்லியிருக்கிறேன் என்பதெல்லாம் கவலையில்லை. அதோடு தினமும் யாராவது ஒருவர் ஆபாசமாகப் பேசாத நாளே இல்லை. வசைகளோடு ஆரம்பிப்பார்கள். அப்படி பேசுபவர்களிடம் அம்பேத்கர் குறித்து நீங்கள் படித்துள்ளீர்களா எனக் கேட்டால் இல்லை என்று கூறுவார்கள். மிக நிதானமாக எனது இறுதிக் கேள்வியை வைப்பேன் இப்படி ஆபாசமாகப் பேசினால் விடிவு கிட்டிவிடும் என்றால் அம்பேத்கர் அப்படிப் பேசியிருக்கமாட்டாரா என்பேன். ஆச்சரியம் என்னவெனில் அதிக கொலைமிரட்டல்களும் ஆபாச வசைகளும் இந்தக் கேள்விக்கு முன் தங்களது மன்னிப்பை வைத்தன. எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டார்கள்.

 

இந்த கொலை மிரட்டல் குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தனது மாநில மாநாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கான இந்த மாதிரியான விசயங்கள் தவறானவை எழுத்தாளர்களை இப்படி மிரட்டுவது பாசிச நடவடிக்கை என அறிவித்து தனது கண்டத்தை அறிவித்திருந்தது. 

 

இந்த சூழ்நிலையில்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது வன்கொடுமை வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டுமென புகார் அளித்தது. உண்மையில் இது நான்  எதிர்பாராத ஒன்று. நினைத்தே பார்த்திராத ஒன்று. 

 

தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்ட சிபிஎம்மின்  மாபெரும் சறுக்கல் என்றுதான் இதைச் சொல்வேன். சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இதுவரையில் கட்சியோ அதன் வெகுஜன அமைப்போ  தனிநபர் மீது இத்தகைய  ஒரு காரியத்தைச் செய்ததில்லை என்று நினைக்கிறேன். அதுவும் முகநூலில் வைத்த ஒரு கருத்துக்காக. உண்மையில் எனது கருத்தை திரித்தே என் மீது வன்கொடுமை வழக்கில் புகார் செய்திருந்தார்கள். அவர்கள் இதை வெளியிட்டதும் பல்வேறு நபர்கள் குழுக்கள் இதே புகாரை பல்வேறு இடங்களில் கொடுத்திருந்தார்கள். எனக்கும் சென்னையிலிருந்து தொடங்கி பல்வேறு ஊர்களில் இருந்து, இறுதியாக திண்டுகல்லில் இருந்து காவல்துறையினரின் அழைப்பு வந்தது விளக்கங்கள் கொடுப்பேன். கேட்டுக்கொள்வார்கள். கடைசியாக ஒரு அழைப்பு வந்தது நேரில் ஆஜராகச் சொன்னார்கள் முடியாது என்று கூறிவிட்டேன். சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் என்றேன். அதுவும் முடிந்தது. இப்பொழுது அது என்ன நிலையிலிருக்கிறது எனத் தெரியவில்லை. 

 

சிபிஎம்மின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார் கொடுத்திருந்த காரணத்தினால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தனது கருத்துச் சுதந்திரம் குறித்து கனத்த அமைதி காத்தது. எழுத்தாளர் எவருக்கும் எங்கேனும் ஒரு பாதிப்பு நடந்தால் அவர்களைக் காக்கும்பொருட்டு தனது கருத்துச் சுதந்திரக் கொடியை உயர்த்தும் தமுஎகசவின் இந்த அமைதி  புரிந்துகொள்ளக் கூடியதுதான். இது குறித்து நான் வெளிப்படையாக கடிதங்களையும் எனது முகநூல் பக்கத்தில் வைத்தேன்.

 

இது போதாதென்று எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்ட 61 பேர் கொண்ட ஒரு குழு எனக்கு கடிதம் எழுதியிருந்தது. கொடுத்த வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டிருந்தார்கள். நான் வைக்காத வார்த்தைக்கு இப்படித் துள்ளிக்குதித்து வந்தவர்கள்தான்   கொற்றவையையும் என்னையும் குறித்து ஆபாசமாகவும் கொலைமிரட்டல் விடுத்தும் பலர் பொதுவெளியில் மிரட்டல் விடுத்திக்கொண்டிருந்தபோது தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பத்திரமாக வைத்திருந்தவர்கள்.  ஆச்சரியம் என்னவெனில் இதுநாள் வரையில் அம்பேத்கர் குறித்தோ அவரது செயல்திட்டங்கள் குறித்தோ ஆவண ரீதியான அர்ப்பணிப்புடன் கூடிய் ஒரு கட்டுரையைக் கூட எழுதாதவர்கள். சாதிய வாதம் பேசியர்கள்பெண்களை இழிவுபடுத்தியவர்கள் எல்லாம் அதில் அடக்கம். அம்பேத்கருக்காக இப்படி ஒரு கையெழுத்தைப் போட்டுவிட்டால் தானும் போராளியாகலாம் என்கிற அவர்களது அடையாள நெருக்கடியைத்தான் அதில் நான் கண்டேன். வேறொன்றுமில்லை. இது எல்லாம் போக நான் சொல்லாத வார்த்தையை நான் எப்படி திரும்பப் பெற்றக் கொள்ள முடியும்வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று கூறிவிட்டேன்.

 

கருத்துச்  சுதந்திரத்தின் கழுத்தை  அடையாள அரசியலின் கைகள் நெறிப்பதைப் புரிந்துகொண்டேன். சாதி அடையாள அரசியலுக்கு கருத்துச் சுதந்திரம் பின்வாங்குவதைக் கண்டேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இந்த நடவடிக்கை குறித்து கலை இலக்கியப் பெருமன்றம் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் எழுதியது. அ.மார்க்ஸும் போன்றோரும் இன்னும் சிலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். 

 

என் பார்வையெல்லாம் இந்த புகாரையும்  தாண்டி வேறு ஒரு திசையில் இருந்தது. எனது நூல்-எனது எழுத்து அம்பேத்கரை எப்படி அவமானப்படுத்தியது என்பதற்கான ஆதாரத்தை வைத்து எவரும் பேசவில்லை. அம்பேத்கரைப் படிக்காத ஒரு தலைமுறைக்கு அம்பேத்கர் எப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு எனது முகநூலே சாட்சி. அம்பேத்கர் பெயரை வைத்து என்னையும் தோழர் கொற்றவையையும் ஆபாசமாகப் பேசாத நாட்களே இல்லை. அந்த வசைகளை இங்கு பட்டியலிட்டால் கதை முடிந்தது. அம்பேத்கர் பெயரைச் சொல்லி எதையும் செய்யலாம் என்கிற அவர்களது மனநிலைஅம்பேத்கர் எப்படி ஒரு சாதித்தலைவராய் வெற்றிகரமாக மாற்றப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வைத்தது. 

 

அதே சமயம் பண்டிதர் படித்தவர் அறிஞர் என்றெல்லாம் போற்றப்படும் அயோத்திதாசரை வெள்ளைக்காரர்களுக்கு உருவிவிட்டுக் கொண்டிருந்ததலா என்று ஒருவர் தனது நூலிலேயே துணிந்து  எழுதமுடிகிறது. ஆனால் அது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புகார் பாயவில்லை. கருத்துச் சுதந்திர அடிப்படையில் தமுஎகசவும் அமைதி காத்தது. உண்மையில் தமுஎகச ஒரு பரந்து பட்ட வெகுஜன அமைப்பு. நான் மதிக்கும் அமைப்பு. அவ்வமைப்பில் இருக்கும் தனிநபர்கள் செய்யும் செயல்கள் அமைப்பை பின்னுக்குத் தள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. எது அமைப்பின் கருத்து எது தனிநபரின் கருத்து என்று தெரியாத அளவுக்கு அமைப்பின் பெயரைச் சொல்லியே அவர்கள் இப்படி செய்கிறார்கள். இந்த நிலையில் சின்னத்திரைக்கு வசனம் எழுதிச் சம்பாரிப்பது கூட கேவலமான ஒரு விசயமாக சிபிஎம் கட்சியின்  பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் ஒருவர் எழுதியிருந்தார்அதன் தொடர்ச்சியாக அப்பொழுது இருந்த மாநில செயலாளர் தோழர் ராமகிருஷணனுக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதன் பின் அவர்கள் தங்களது இந்த மோசமான செயல்களை நிறுத்திக்கொண்டார்கள். ரங்கநாயகம்மா நூலை விமர்சிக்கும் சாக்கில் தங்களது அடிப்படைவாத  வெறியையும் கூடக் காட்டினார்கள். ஆயிரம் நபிமார்கள் இருந்தும் ஏனில்லை வாப்பா ஒரு பெண் நபிஎன்ற ஹெச்.ஜி.ரசூலின் கவிதை உலகப் புகழ் வாய்ந்தது. உள்ளிருந்தே கலகத்தை ஒலித்த குரல் ரசூலுடையது. அதற்காக ஊர்விலக்கமும் செய்யப்பட்டவர் அவர். அவரின் இந்தக் கவிதையை மிகவும் கொச்சையாக புரிந்துகொண்டு என்னையும் கொற்றவையையும் வசைபாடுவதாக நினைத்து ப.கு.ராஜன் என்பவர் ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை என்று கூட பொதுவெளியில் கேட்டிருந்தார். அமைப்பின் துணையோடு அவரும் தன்னை மார்க்சியராக அறிவித்துக்கொள்கிறார். அதற்கும் அங்கு கைதட்டியவர்கள் உண்டு. 

 

என் வருத்தம் ஒன்றுதான். தத்துவத்தின் அடிப்படையை விளங்கிக் கொள்ளாமல் அடையாள அரசியலை முன்னெடுக்கும் அரசியலற்ற நபர்கள் தங்கள் அடையாளத்துக்காக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ரங்கநாயகம்மா நூல் வந்ததும் கொதித்த அந்தக் குழுவினர் ரங்கநாயகம்மா நூலுக்கோ எனது நூல்களுக்கோ மதிப்பு வாய்ந்த எந்த மறுப்பையும் செய்யவில்லைஆபாச வசைகளை தொடர்ச்சியாக வைப்பதன் மூலம் நான் பின்வாங்குவேன் என நினைத்தார்கள். என்ன செய்வது? நான் அடுத்த நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். வசைகள் மட்டுமே மிச்சம். வரலாற்றில் வசைகளுக்கு என்றுமே இடம் கிடையாது.  

 

அம்பேத்கரை படிக்காத ஒரு தலைமுறைக்கு அம்பேத்கரைப் படிக்கச் சொல்ல வேண்டும்மார்க்சியத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். இதுதான் என் வேலைத்திட்டம். 

 

அம்பேத்கரும் அவரது தம்மமும்’ ‘அம்பேத்கரியப் பார்ப்பனியம் நூல்கள் குறித்தான எதிர்வினை எப்படி இருந்தது?

 

மேற்சொன்னதிலேயே பாதி விடை இருக்கிறது. வசைகளன்றி வேறில்லை. ஆதாரப்பூர்வமான எதிர்வினைகளுக்காக காத்திருக்கிறேன். கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன். அம்பலப்படுத்தப் பட்டவர்கள் அமைப்பில் உள்ள தங்களுக்குத் தெரிந்தவர்களை வைத்து புரளியைக் கிளப்புவார்கள்.  நான் விளக்கம் கொடுத்ததும் இன்னும் வெளிச்சமாய் அவர்கள் அம்பலப்படுவார்கள். அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலுக்கு மறுப்பாக ஒரு நூலும் வந்தது. அந்த நூலுக்கான மறுப்பையும் அம்பேத்கரியப் பார்ப்பனியம் நூலில் வைத்திர்க்கிறேன். 

 

தமிழகத்தின் இரு பெரும் இலக்கிய அமைப்புகளான தமுஎகசகலை இலக்கியப் பெருமன்றம் அமைப்புகளில் ஆளுமைகளாகக்  கருதப்படுபவர்களை நீங்கள் விமர்சிக்கிறீர்கள்உங்கள் விமர்சனத்துக்கு மறுப்பு ஏதேனும் வந்துள்ளதா?

 

சமீபத்தில் நிகழ்ந்ததைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆம். விமர்சனம் தவிர்க்கப்பட முடியாதுதான். ஆளுமைகளாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆளுமைகள் குறித்தான பண்பை மார்க்சியத்தின் மாணவனாக நான் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கஆரியர்கள் இந்தியாவின் வந்தேறிகள் என்று அம்பேத்கர் சொன்னதாக ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் அம்பேத்கரையே படிக்காமல் பேசுகிறார்கள். முத்துமோகன் தனது மார்க்சியப் போதாமையை மார்க்சியத்தின் போதாமையாக எழுதிக் கொண்டிருக்கிறார். பதிலளிக்க வந்த சொக்கலிங்கத்திற்கும் அதே நிலைமைதான்மார்க்சியத்தின் அடிப்படைகள் மீதே அவருக்கு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றும் அளவுக்கு அவரது வார்த்தைகள் வெளிப்படுகின்றன. அமைப்புகள் மார்க்சியக் கல்வியை எடுத்து நடத்துவதில் கொஞ்சம் தீவிரம் காட்டியிருந்தால் இந்த மாதிரியான அடையாள அரசியலை இவர்கள் முன்னெடுத்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும்கலை இலக்கியப் பெருமன்றமும் பரந்துபட்ட அமைப்பு. அதற்கென கோட்பாட்டுப் பின்புலம் உண்டு. அதற்கான செயல்திட்டங்களும் உண்டு. அது வரவேற்கத்தக்கதும் பாரப்பட்ட வேண்டியதும் ஆகும். கலை கலைக்காவே என்கின்ற அற்பத்தனத்திற்கு எதிராக கலை மக்களுக்காக என முழங்கும் அமைப்புகள் அவை. 

 

ஆனால் இத்தகையவர்கள் தங்களின் சொந்தக் கருத்தை அமைப்பின் கருத்தாக மாற்றப் பாடுபடுகிறார்கள்.  உண்மையில் இந்த அமைப்புகளில் இல்லையென்றால் இவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அபத்த மதிப்பைக் கூட அளிக்கமுடியாது. அவ்வகையில் இது போன்றவர்களை நான் ஆளுமைகள் என்று சொல்லக் கூச்சமாயிருக்கிறது.  கூச்சப்படுவதோடு அப்படியே விட்டுவிடவும் முடியாது. அம்பலப்படுத்தவும் வேண்டும். இது எல்லாம் போக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் சாதி சார்ந்த அமைப்புகளிலோமத நிறுவனங்களிலோ எந்த விதமான பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பது கட்சியின் தலையாய விதி. ஆனால் இன்று சாதிச் சங்கத்திலும் மத அமைப்பிலும் பொறுப்பில் இருந்துகொண்டு முற்போக்கைப் பேசுகிறார்கள். உண்மையில் இவர்கள் அடையாள அரசியல் பேசுவது இத்தகைய அற்பத்தனங்களையும்கட்சிக்கு கேட்டை உருவாக்கவுமே இது உதவும். 

 

உரையாடல் தொடரும்.

 

 

19.தேனி மாவட்டத்தின் சினிமா தாகம், வசுமித்ர என்ற படைப்பாளியை சிதைத்துவிடும் என்கிற பயம் இருக்கிறதா?

 

எனக்கு தாகமெல்லாம் இல்லை. பிழைப்பிற்கான வழி. அவ்வகையில் என்னை ஓர் கூலித் தொழிலாளியாகவே நினைக்கிறேன். 

 

20.எழுதிக்கொண்டிருக்கும் படைப்பு பற்றி ஏதேனும் முன்னோட்டம் கூற இயலுமா?

 

புத்தனின் மதுக்குடுவை என்கிற உருவம் வடிவுசெய்யப்படாத ஒரு பனுவல் இருக்கிறது. அயோத்திதாசர் குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் நாவல்கள் குறித்தான எனது திறனாய்வை விரித்து எழுதி தனியாக ஒரு தொகுப்பாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் என்ற ஒரு கவிதை நூலும் இருக்கிறது. உடனடியாக செய்யும் பணியாக கலை – மதத்தின் அந்தப்புரம் எனும் ஒரு ஆய்வை எழுதி வைத்திருக்கிறேன். முன்னர் கூறியதைப் போல புனைவு அபுனைவு செயல்படும் விதம்மதத்தின் அந்தப்புரமாக இலக்கியம் ஆன கதை இது குறித்தான விரிவான ஆய்வாக அதை முன்வைப்பேன்.  

 

21.உங்களின் எழுத்துப் பயணத்தில் இதை எழுதிவிட்டால் போதும் என்று ஏதாவது ஒரு இலக்கு வைத்திருக்கிறீர்களா?

 

மார்க்சியத்திற்கு என்னாலான பணிகளை செய்ய வேண்டும் என்பது தவிர வேறெந்த இலக்கும் இல்லை. மார்க்ஸையும் எங்கெல்ஸையும் ஆசான்கள் என்று அழைப்பதற்கான எனது தகுதியை அதிகமும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். அவ்வளவே.


நேர்காணல்:

அம்மு ராகவ் 


நன்றி

படைப்பு

தகவு- கலை இலக்கிய மின்னிதழ்.

 

 

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...