Showing posts with label சச்சிதானந்தன். Show all posts
Showing posts with label சச்சிதானந்தன். Show all posts

Thursday, April 18, 2013

பரிணாமம்: ஒரு எதிர்க்கவிதை - சச்சிதானந்தன்






முதன்முறையாக அவன் என்னெதிரில் வந்தபோது
அவனது பையில் இருந்தன
திலகரின் கீதை உரை,
காந்தியின் ‘சத்தியசோதனைகள்’,
1.வைக்கத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்
2.திருநாவாயிலிருந்து கொஞ்சம் மணல்
ரத்தக்கறை படிந்த ஒரு கதர் வேட்டி.

இரண்டாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன:
‘கம்யூனிஸ்ட் அறிக்கையின்’ ஓரணா பதிப்பு,
3. ஏ.கே.ஜியின் சுயசரிதை,
*ஓஞ்சியத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்,
*வயலாரிலிருந்து ஓர் எறி ஈட்டி,
ரத்தக்கறை படிந்த ஒரு காக்கிக் கால் சட்டை.

மூன்றாம் முறையாக அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன:
மாவோவின் சிவப்புப் புத்தகம்
குவேராவின் பொலிவிய நாட்குறிப்பு,
*ஸ்ரீகாகுளத்திலிருந்து ஒரு பாட்டுப்புத்தகம்,
போஜ்பூரிலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி,
ரத்தக்கறை படிந்த ஒரு தலைமறைவு வேடம்.

நேற்று அவன் என்னெதிரில் வந்த போது
அவனது பையில் இருந்தன
கோல்வாக்கரின் சிந்தனைத் தொகுப்பு;
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப்,
ஒரு ஸ்ரீ சக்கர பூஜை முறை,
அயோத்தியில் உயர்த்திய ஒரு திரிசூலம்
ரத்தக்கறை படிந்த ஒரு காவி உடை.


மொழியாக்கம் -; நிர்மால்யா

1இந்திய விடுதலைக்காகக் காந்தியின் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் ஒன்று
1.கேரளத்தில் ஓடும் ‘பாரத புழ’நதிக்கரையில் உள்ள இந்த இடம், கேரள மக்களின் புனித இடமாகக் கருதப்படுகிறது.
3.இடதுசாரிகளால் ஏ.கே.ஜி என்று அழைக்கபடும் ஏ.கே.கோபாலன். முதன்முறையாக பாராளூமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி உறுப்பினர்களில் முக்கியமானவர்.
*கம்யூனிஸ்டுகளின் போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த கேரள ஊர்கள்.

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...