Showing posts with label ஆபாசம். Show all posts
Showing posts with label ஆபாசம். Show all posts

Monday, October 30, 2017

அவதூறு + ஆபாசம் + சிபிஎம்



தோழர்களே…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சியின் முதுபெரும் தோழரான W.R. வரதராஜன் அவர்களையே, பாலியல் குற்றச்சாட்டுக் கூறி தற்கொலைக்குத் தள்ளியது. இந்த தற்கொலை முடிவுக்கு சிபிஎம் கட்சியே காரணம். இப்பொழுது அக்கட்சித் தோழர்கள் அதை வெற்றிகரமாக பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இவர்களது கருத்துச் சுதந்திரம் பற்றிய விமர்சனம். இவர்களை விமர்சிக்காத வரைதான். விமர்சிக்கும் பட்சத்தில் அவதூறு எனும் ஆயுதத்தால், மனம் சோர்வடையும் வரை ஆபாசமாகப் பேசி, அதை அமைப்பின் பெயரால் முன்வைப்பார்கள்.

பெண் சுதந்திரம் எனப் பேசும் அவர்களது அமைப்பில் உள்ள, மற்ற பெண்களும் இதைக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். அமைப்பு என்று வந்துவிட்டால் அதற்கு ஆண் பெண் வித்தியாசமில்லை. அனைவரும் அமைப்புவாதிகளே.

கொற்றவை இப்பொழுது முகநூலில் இயங்கப்போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதே முடிவை எடுக்கத் தூண்டிய இதுபோன்ற நபர்கள் இப்பொழுதும் அதில் வெற்றிக் கண்டிருக்கின்றனர். கொற்றவை மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.

இனி அவரிடம் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிய அமைப்பும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தோழர்கள் இனி எதற்கும் அழைக்கவேண்டாம்.

தோழர்களே…
முழுநேர ஊழியர்கள் என்ற பெயரில் கட்சிக் காசைத் தின்று, புரட்சிப் பணி ஆற்றும் சிலர், தங்களது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு நகை வாங்கிப் போட்டு, அலங்காரம் செய்து கோயில் குளம் நேர்த்திக் கடன், இஸ்லாமியக் கல்வி, கிறித்தவக் கல்வி அளித்து, வரதட்சணை பெற்று மார்க்சியத்தை கண்ணியமாகக் காப்பாற்றி வருகின்றனர்.

கட்சி சம்பளம் 12000. ஆனால் தினமும் குடிக்க 500. அப்படியெனில் மாதம் 15000 க்கு குடிப்பவர் முழுநேர ஊழியர். கட்சிச் சொத்தைத் திருடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் மார்க்சிய ஆசான். வீடு கட்டியவர் மார்க்சிய விஞ்ஞானி.
தன் வீட்டில் பூணுல் கல்யாணம் நடத்தியவர் சோம்நாத் சட்டர்ஜி. அவர் புரட்சியாளர். சாதி மறுப்பாளர். இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சியமா?

கட்சியில் சொத்துச் சேர்ப்பதையே மார்க்சியம் எனக் கற்றுக்கொடுக்கும் இவர்கள்தான் மார்க்சியப் போராளிகள் நாங்கள் அல்ல என்பதை முதன்முறையாக ஒத்துக்கொள்கிறேன்.

வயிற்றுப்பாட்டுக்கு சின்னத்திரையில் வேலை செய்து வரும் நான், மானங்கெட்ட சம்பாத்தியத்தை வைத்து, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். நானும் கொற்றவையும் எங்களை சாதி மறுப்பாளர்களாக அறிவித்தும், அந்த அவதூறையே முன்னுக்கு வைப்பதுடன், ஆபாசமாகவும் பேசத் தொடங்கி, அவரை இப்பொழுது மறுபடியும் சோர்வடையச் செய்துள்ளனர்.

தனிப்பட்ட முறையில் இது அவர்களுக்கு வெற்றியாக இருக்கலாம். கட்சியின் மூத்த தோழரையே பாலியல் குற்றச் சாட்டு கூறி, தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு நாங்கள் ஒரு பொருட்டே கிடையாது என்பதை நானறிவேன்.

அதே சமயம்… நம்பிக்கையுடன் வந்த கொற்றவையை மறுபடி நம்பிக்கை ஊட்ட எனக்கு நாட்கள் தேவைப்படுகிறது. பரவாயில்லை. உங்கள் அமைப்புக் கற்றுக்கொடுக்கும் தத்தாரித்தனத்தை நான் கொற்றவைக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள் உரையாடும் மார்க்சியம் வேறு. ரங்கநாயகம்மா நூல் தமிழுக்கு வந்த கொடை. இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தற்கொலை செய்யத் தூண்டுவதும், அவதூறு பேசுவதுமாக உள்ள உங்கள் மார்க்சியத்தை என்னால் கற்றுக் கொடுக்கமுடியாது. இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டியிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள்” என்ற உண்மையை தனது கடிதத்தில் முன்வைத்த W.R. வரதராஜன், தற்கொலைக்கு முன் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்று நினைத்தாலே மனம் பதட்டமடைகிறது.

தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். குறைந்தபட்சம் அவதூறை தத்துவமாக முன்வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனீஸ்ட் கட்சியின் தோழர்கள், தங்களது மனைவிமார்களுக்கு கற்றுக்கொடுத்த கம்யூனிஸத்தை விட, நான் அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கொற்றவையும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அமைதியாக இருந்து சீரியலில் சம்பாரிக்கும் காசை உங்களது கட்சிக்கு நன்கொடையாகக் கொடுக்கும் பட்சத்தில் நானும் புரட்சியாளராக இருந்திருக்க முடியும்தான். அறிவூட்டியதற்கு நன்றி.

இனி கொற்றவை மொழிபெயர்ப்பாளாரக மட்டுமே இருப்பேன் என்பதோடு, என்னிடமும் இனி அமைப்புகள் குறித்தோ, இயக்கங்கள் குறித்தோ எதையும் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார். இது எனக்குப் பெரிய வலிதான்.

மனம் கனத்துக்கிடக்கிறது.
வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தடித்தனம்.
ஆபாசம். அவதூறு,மிரட்டல்.

தோழர்களே…. இதுதான் சிபிஎம் கட்சி என்று மீண்டும் மீண்டும் நான் சொல்வதற்குக் காரணம், பொதுத்தளத்தில் எப்படி உரையாடவேண்டும் என்றோ,  நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு, விமர்சனப் பண்பு குறித்தோ, அவர்களுக்கு சிபிஎம் கற்றுக்கொடுக்கவில்லை என்பதை, அவதூறாளர்களை வைத்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மார்க்சியப் பார்வையில் தனிநபர்கள் செய்யும் குற்றதிற்கு, எப்படி சமூகக் கட்டமைப்பு காரணமோ, அதே போல் அமைப்பில் உள்ள இந்த நபர்களில் நடத்தைக்கு, அமைப்பைக் குறைச் சொல்வது, அல்லது அமைப்பைக் கேள்வி கேட்பது என்பது ஒன்றும், தவறான விசயமோ, அல்லது நாகரீகமற்ற செயலோ கிடையாது.

அவ்வளவே.




“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...