Wednesday, September 14, 2011

சென்னகரம்பட்டி கொலை வழக்கு.




" நீதி நம்பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உணர்வு பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. ஏனெனில், நமது போராட்டம் சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்த சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும் பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது. உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே; கற்பி,போராடு ஒன்றுசேர்"

அம்பேத்கர்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும்பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிழந்த அதே சாலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு நூறு மீட்டர் தொலைவில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையைச் செய்த அதே கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப் போக்கையும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றின் சாதியமனோபாவத்தை புரிந்து கொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் ( same plot) மேலவளவு கொலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ தலித் அமைப்புகள் தலித் கொலை நிகழ்வுகளையொட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களோடு நிறுத்திக்கொள்ளும் நிலையில், குறைந்தபட்ச நீதிக்கான எந்த உத்தரவாதமுமின்றி அரசின் கருணையிலேயே நடந்து நீர்த்துப் போய்விடுகின்றன.

( பக்கம் 5,6 )

அரசு தரப்பு சாட்சி எண் ; 10

பெயர்; டாக்டர்.லதா கணேசன்
/பெ: கணேசன்
கிராமம்: மேஜர்.மதுரை
சாதி: இந்து பிள்ளைமார்.
வயது:50 ஆண்டுகள்
நாள்: 28.3.2008

முதல்விசாரணை : அரசு தரப்பில்


நான் தற்போது மேலூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறேன். 1992ம் ஆண்டு அரசு மருத்துவமனை மேலூரில் உதவி மருத்துவராக பணி புரிந்தேன். 6.7.92ம் தேதி பாண்டி கணேசன் என்பவர் காவலர் 566 என்பவர் கொடுத்த வேண்டுகோளை பெற்று அன்று காலை 10.30 மணிக்கு ஒரு ஆண் அம்மாவாசி என்பவரின் பிரேதத்தை சடலக்கூறாய்வு செய்தேன். மேற்படி மேலூர் காவல் நிலைய சம்பந்தப்பட்டது. மேற்படி பிரேதத்தில் ஒரு கருப்பு மச்சம் வலது மார்பகத்திற்கு கீழ் காணப்பட்டது. மற்றொரு மச்சம் தொப்புளுக்கு கீழ் காணப்பட்டது. மேற்படி இறந்து போன நபருக்கு வயது சுமார் 50 வயதிருக்கும். மேலூர் காவல் நிலைய குற்ற எண்.468/92 வழக்கு சம்பந்தப்பட்ட பிரேதம் மேற்படி ஆரோக்கியமான பிணம், கண்கள் திறந்திருந்தது. நாக்கு வாய்க்குள் இருந்தது.8,8/32 இருந்தது. முகவாய் இருக்கமாக இருந்தது. பிணவிறைப்பு தன்மை கைகால்களில் காணப்பட்டது. அவர் உடலில் கீழ்க்கண்ட வெளிக்காயங்கள் காணப்பட்டது.


1. 18செ.மீx6செ.மீx 6 செ.மீ அளவில் ஒரு வெட்டுக்காயம் கழுத்தின் முன்பகுதியில் காணப்பட்டது. அதில் கழுத்தின் சதைகள் மற்றும் மூச்சுக் குழாய் உணவு குழாய் வெட்டப்பட்டிருந்தது. செர்விகல் வெஷ்டிபுலா தைராய்டு கார்ட்டிலேஜ் - ம் வெளியே தெரிந்தது.

2. இடது கன்னத்தில் 10செ.மீ x 2செ.மீ x 2செ.மீ அளவில் வெட்டுக்காயம் காணப்பட்டது.


3. இடது பக்க பின் தலையில் டெம்பரல் ரிஜின் பகுதியில் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அது கபாலத்தின் அடிப்பாகம் வரையில் நீண்டிருந்தது. இடது காது வழியாக நீண்டிருந்தது.20x6x6 செ.மீ அளவில் காணப்பட்டது.

4. கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு வெட்டுக்காயம் 15 x 5 x5செ.மீ அளவில் காணப்பட்டது. அது இடது பக்க தாடை எலும்பு வரை நீண்டிருந்தது.

5. ஒரு வெட்டுக்காயம் 5x2x2 செ.மீ அளவில் பின்பக்கத்த்ஹில் (ஆர்சிபிட்டல்) காணப்பட்டது. அதே இடத்தில் மற்றொரு வெட்டுக்காயம் 3x2x1 செ.மீ அளவில் காணப்பட்டது. வஒரு வெட்டுக்காயம் பிராமன்ஷ் மேல் காணப்பட்டது. மற்றொன்று கீழ் காணப்பட்டது.


6. 5வது காயத்திற்கு கீழ் 6வது காயம் காணப்பட்டது.

7. சிதைந்த காயம் ஒன்று தோள்பட்டையிந் இன்புறம் இடது பக்க தோள்பட்டையில் காணப்பட்டது.3x2x1செ.மீ அளவில் இருந்தது.

8. மற்றொரு வெட்டுக்காயம் 6x4x2செ.மீ அளவில் வலது காதின் கீழ் காணப்பட்டது.

9. தோள்பட்டை மார்ஜினில் எலும்பு எல்லையில் 3x2x1செ.மீ அளவில் ஒரு சிதைந்த காயம் காணப்பட்டது.

10. வலது சுண்டு விரலில் நுனிப்பகுதி காணப்படவில்லை.


பிரேத உட்புற பரிசோதனை செய்தபோது

1. கேரோடிட் ஆர்ட்டிரேட் இரண்டு பக்கத்திலும் காணப்படவில்லை. அதன் கீழ் பகுதி வெட்டப்பட்டு வெளிப்புறமாக தெரிந்தது. செர்விகல் வெஷ்டிபுலா வெளியே தெரிந்தது.

2. தோரா க்க்ஷ் நுரையிரல் வெளிறி காணப்பட்டது. இருதயம் வெளிறி இருந்தது. இருதயத்திந் அறைகள் காலியாக இருந்தது.

3. வயிற்றில் சுமார் 200. மி.லி அளவில் சரியாக ஜீரணம் ஆகாத உணவு காணப்பட்டது. பகுதியாக ஜீரணித்த உணவு.

4. சிறுகுடல் காற்றில் உப்பி காணப்பட்டது. சிறு நீர் பையில் நீர் இல்லை. காலியாக இருந்தது.

5. லேரின்க்ஷ், கிலாட்டிஷ், ஒரு பகுதி காணப்படவில்லை.

6 தைராய்டு கார்ட்லிக்ஷ் இருந்தது. ஹைராய்டு எலும்பு காணவில்லை. கணையம் கல்லீரல் வெளிறி காணப்பட்டது.

7. இடது பக்க முன் மண்டை எலும்பு உடைந்து இருந்தது.டெம்பரல் எலும்பு. முன்பக்க மண்டை எலும்பு இடதுபக்கம் உடைந்து இருந்தது.மூளையில் எவ்வித காயமும் இல்லை.அது வெளிறி காணப்பட்டது.

மேற்படி நபர் அவருக்கு ஏற்பட்ட உயிர் காக்கும் உறுப்புக்களில் ஏற்பட்ட காயத்தினாலும், அதனல் ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியினால் பிரேத பரிசோதனைக்கு முன் 10லிருந்து 11மணி நேரத்திற்கு முன்பாக இறந்திருக்கக் கூடும் என கருத்து தெரிவித்து பிரேத பரிசோதனை சான்று அ.சா..10 வழங்கினேன்.

( பக்கம் 117, 118)

நூல்: சென்னகரம்பட்டி கொலை வழ க்கு.
தொகுப்பு: பொ.இரத்தினம்( வழக்குரைஞர்)
விடியல் பதிப்பகம்
புத்தக வெளியீட்டகம்.




சாதி, தன் கருத்துக்களால் காவு வாங்கிய ஒரு உயிரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் மேற்கண்டது. தலித்துக்கள் ஆதிக்க சாதியிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாது அரசிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில்தான் சாதியம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை அரசே ஊதிப் பற்ற வைக்கும்போது, மேற்கண்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள்தான் இனி ஆளும் அரசின் சட்டப் புத்தகங்களாய் இருக்க முடியும்.


பரமக்குடி.........?



2 comments:

  1. மனிதத்தன்மையற்று போக பழகிக்கொள்கிறோமா?.. பயமாக இருக்கிறது...

    ReplyDelete
  2. 'அரசு' அதன் இறுகிய முகத்தில் காறித்துப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...