அவன்
தனது
தொலைதூர கிராமத்திலிருந்து
உலகைப்
பார்த்தான்
உலகம்
எண்ணற்ற
செவிகளைக்
கொண்டதாயிருந்தது
செவிகளே
கதைகளையும்
வரலாறுகளையும்
புரட்சிகளையும்
வாங்கிக்கொண்டிருந்தன....
காதுகளைப்
புல்லரிக்கச் செய்யும்
ஆயுதம்
இதுவெனக்
கொண்டான்
பணிவென்பதை
இசையென
கண்டுகொண்ட
உலகத்தைக்
கண்டு
புன்னகைத்தான்
உண்மையில்
இவ்வுலக
உருண்டையில்
இல்லாத
கடவுள் இதுவரை தான் காட்டத
உள்ளங்கையில்
பதுக்கி
வைத்திருந்த
இசையை
மிக
எளிதான
புன்னகையுடன்
பிடுங்கினான்
கடவுளர்களும்
மேதைகளென
அழைக்கப்பட்டவர்களும்
அவன்
காலடியை
நோக்கி
ஊர்ந்து நகரும்போது
அவனது
வயலின்
ஒரு
முறை அதிர்ந்தடங்கும்
குரல்களை
நாணேற்றி
புல்லாங்குழலின்
வழியாக
அவன்
வீசியெறியும்போதெல்லாம்
எண்ணற்ற
செவிகள் திறந்து கொள்ள
எண்ணற்ற
கண்கள் மூடிக்கொள்ளும்
வசந்தத்தை
முரசில்
அறிவிப்பதே
அவனது
தனிமையென்றானது
இப்பேரரசன்
இப்பொழுது
அமைதியில்
இருக்கிறான்
கேட்கும்
செவிகளில்
மழையடித்து
காலம் ஆயிற்று
ஆயினும்
என்ன
இன்னும்
சில
செவிகள்
பழைய
மழையில் நனைந்த
ஈரத்தோடு
சிலிர்த்துக்கொண்டேதான்
இருக்கிறது






