Thursday, December 29, 2011

.......... ஜெய மோகன் நீங்கள் மிகவும் நல்லவர்.




எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு சாவர்க்கரின் படத்தைப் பாராளுமன்றத்தில் திறந்து வைத்துள்ளார் குடியரசுத் தலைவர், மரியாதைக்குரிய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். காந்தியைக் கொன்ற சதிக்கு தலைமை தாங்கிய இந்துத்துவத்தின் தந்தை சாவர்க்கருக்கு காந்திக்கு அருகில் பாராளுமன்ற மரியாதை இந்த வெட்கங் கெட்ட செயலுக்கு குடியரசுத் தலைவர் உடந்தை.*


1937- ல் இந்து மகா சபையின் அகமதாபாத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று சாவர்க்கர் - பேசியபோது, “ நமது இந்திய தேசத்திற்கு முகமதியர்கள் மிகப்பெரிய ஆபத்தாக விளங்குவார்கள் என்று இந்துக்களை நான் எச்சரிக்கிறேன். இந்தியா ஒரு படித்தான ஒற்றைத் தேசமல்ல. இந்துக்கள் எனவும் முஸ்லீம்கள் எனவும் இரு இரு தேசங்கள் அதற்குள் உள்ளன” சாவர்க்கர்.*

டாக்டர் மூஞ்சே, சீரி சாவர்க்கர் போன்ற இந்துக்கள் வாளின் பலத்தையும் வன்முறைக் கோட்பாட்டையும் நம்புபவர்களாக இருக்கலாம். இந்து ஆதிக்கத்தின் கீழ் முஸல்மான்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு அவர்கள் எண்ணிடலாம். நான் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்   காந்தி.*





ஜெயமோகன்....காந்தியைப் பற்றி உங்கள் கோமணம் உருக எழுதியது போதாதென்று இப்பொழுது  பசு நெய்யை நாக்கில் வழித்து சத்தியம் வேறு செய்துள்ளீர்கள். அ.மார்க்ஸ்,
அ. முத்துக்கிருஷ்ணன் இருவரும் பணம் பெற்று வேலை செய்கிறார்களென்று. அய்யா தாங்கள் யாரிடம் பணம் பெற்று எழுதுகிறீர்கள் நான் சொல்லப் போவதில்லை. திரைக்கு வசனம் எழுத நீங்கள் வருவதற்கு முன் தங்களை அறிந்தவன் நான். இப்பொழுது நாலு காசு சேர்ந்ததும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறீர்கள். சாரு எழுதிய வரிகளிலேயே நான் மிகவும் மதித்த வரிகள் அவர் உங்களை சரியாகக் கணித்தது மட்டுமே. உளறுவதற்கு ஒரு மடத்தை வட்டமெனத் தொடங்கினீர்கள். ஏன் கைக்காசு குறைகிறதா விழா எடுக்க. வேட்டி சட்டையுடன் உங்கள் விருதுகளை வாங்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் மீதும் எனக்கு ஒரு வாசகனாக மரியாதை குறைகிறது. போகிற போக்கைப் பார்த்தால். அ.மார்க்ஸிற்கும் விருது வழங்குவீர்கள். அந்த நாள் தொலைவில் இல்லை. பிறர் உங்களை ஏதேனும் ஒரு வரிகள் எழுதினாலே என்னை வசை பாடினார்கள் என்று பல பக்கங்களுக்கு முழக்கமிடுபவர் நீங்கள். ஆனால் நீங்கள் பிறர் குறித்து வைக்கும் ஆபாசங்கள் கேட்கச் சகியாதவை. நீங்கள் இதுவரை  உங்களைத் தவிர வேறு யாரையும் விட்டு வைத்ததில்லை. உங்களின் பெற்றோரின் மரணம் இன்னும் அவநம்பிகையின் பால் உங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் எழுத்தின் ஒவ்வொரு வரியிலும் நான் உணர்கிறேன். நீங்கள் கருணை பற்றி அறம் பற்றிப் பேசும்போதெல்லாம் அது ஏன் எனக்குக் கிட்டவில்லை  என்ற சுய எரிச்சலையே முன் வைக்கிறீர்கள். இது குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அவநம்பிக்கை மட்டுமே நீங்கள் கூறும் அறச்சக்கரத்தின் மையம். அதை நீங்கள் இந்துவத்துவத்தின் தேர்களுக்குப் பொருத்தவே நீங்கள் இன்னும் முயல்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் அங்கு உங்களை விட பழம் தின்று கொட்டை போட்ட எண்ணற்ற ஞானிகள்...நீங்கள் சொல்லும் அறக்குவியங்களான சடாதாரிகள் நிரம்ப உள்ளனர்.


இவ்வளவு கேவலமாக மனிதர்களை எப்படி உங்களால் எடை போட முடிகிறது. காரணம் உங்களின் அவ நம்பிக்கை.  பணம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று முதலில். அ.மார்க்ஸ்சை மட்டும் சாடி வந்தீர்கள். இப்பொழுது முத்துக் கிருஷ்ணனையும் சேர்த்திருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த குஜராத் கலவரக் குறிப்புகள் எனக்கு நினைவுக்கு வந்து போகிறது. அவர்கள் காசு வாங்கினால் மகிழ்ச்சிதான். அதே போல் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கினால் அதையும் அந்நிய சதி என்பீர்கள். காசு எங்கு வாங்கினார்கள் என்று கேட்க, அல்லது நிரூபிக்கவாவது உங்கள் வாசக படை வட்டங்களை பயன்படுத்துங்கள். அவர்களும் எவ்வளவு காலந்தான் துதிகளையும் பஜனைகளையும் பாடுவது. 

பத்தாயிரம் பக்கங்கள் எழுதினாலும் டால்ஸ்டாய்...தஸ்யாயேவ்ஸ்கி...அறம்...தரிசனம் என நீங்கள் முக்கினாலும் உங்களை அறியமால் உங்கள் வாயில் வருவது நொண்டிநாய் என்றுதானே அய்யா...உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும். காந்தியம் பற்றி அவரின் தரிசனங்கள் பற்றி நீங்கள் எழுதிய வரலாற்றுக் குப்பைகளை..அதோடு உங்களது கற்பனையின் சீழை என்னவென்பது. கலாமுக்கு காந்தியைத் தெரியும் சாவர்க்கரைத் தெரியாது. ஆனால் கலாமை விட அவர் கையிலேந்தி வாசிக்கும் பகவத் கீதையைப் பற்றி சாவர்க்கருக்கும் உங்களுக்கும் நிறையத் தெரியும். ஒரு முறை பகவத் கீதையின் நிழலில்தான் எழுத வந்ததாகக் கூறீனீர்கள். நல்லது அய்யா.

அ.மார்க்ஸ், அ.முத்து கிருஷ்ணன் இவர்கள் வாங்கிய காசோடு, காந்தி அவர்கள் எவரிடம் காசு வாங்கினார் என்பதையும், சாவர்க்கர் யாரிடம் காசு வாங்கினார் என்பதையும் வரலாற்றைத் திரந்து இந்துத்துவ அற அரிப்பில்லாது ஒரு முறை  எழுதுங்கள்.


அப்துல்கலாமை ஞானி என்று அழைப்பது இஸ்லாம் பற்றி பேசத்தானா....அறிய முடிகிறது ஜெயமோகன். இந்து மத யாத்திரையில் அத்வானி வந்த ரதத்தை ஓட்டியவன் ஒரு முஸ்லீம். இதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த பெயர் தெரியாதவனுக்கும்... கலாமுக்கும் வேறு வித்தியாசங்கள் இல்லை. உங்களுக்கும்.  நாளுக்கு நாள் வெறி கூடும் உங்களது இஸ்லாமிய வெறுப்பை அறியமுடிகிறது.




* மேற்கண்ட குறிப்புகள் அ.மார்க்ஸ் எழுதியவையே வருடம் ஏப். 2003
அப்போதிருந்தே அ.மார்க்ஸ் காசு வாங்கியிருந்தால்...இந்நேரம்........

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...