Monday, September 23, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன்.


                                





       இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள காலம் இது. ஆதிக்கசாதியினரின் வெறித்தனமான கூச்சல்களுக்கு மத்தியில்தலித் மக்களின் கதறல்கள் காற்றோடு கரைந்து போய்க்கொண்டிருக்கின்றன. தலித் மக்கள் அனைவரையும் அவர்களின் ஆதரவு சக்திகளையும் ஜனநாயகரீதியாக ஓரணியாகத் திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியமார்க்சியத் தத்துவத்தையே தமது அடித்தளமாகக் கொண்டுள்ளஇடதுசாரிக் கட்சிகள்  தங்கள் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று விட்டன என்றும் கூற முடியாத நிலை. அதற்கான காரணங்கள் அகத்திலும் புறத்திலுமாகப் பல இருக்கலாம். இருப்பினும்சாதியப் படிநிலைகளை அமைத்துஅதன் மீது காலூன்றி நின்றுகொண்டிருக்கின்றபண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில் இடதுசாரி இயக்கங்கள் நடத்தி வருகின்ற போராட்டம் சாதிய அமைப்பு முறையையே அடியோடு தகர்த்தெறிவதற்கான போராட்டம் ஆகும். சாதிய வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் சாதியையே ஒழிக்க வேண்டும் என்பதற்கான போராட்டமாகத்தான் இருக்க முடியும் என்ற புரிதல் மார்க்சிய இயக்கங்களுக்கு உண்டு.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு இதே காலத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களது பங்களிப்புகள் மகத்தானவை என்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் இந்தியா முழுவதிலும் பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் செய்த சாதனை மிகப்பெரியது. தலித் மக்களுக்கென்றே இயக்கங்களைத் தொடங்கியவரும் அவர்தான்.

அதே நேரத்தில் சாதி அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டுஅவரவரது சாதி அடையாளத்தைச் சார்ந்து அமைப்புகளை உருவாக்கிதமது அமைப்பின் நலன்களுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே சாதிய வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தைக் கருதிச் செயல்படுவதும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொள்ளாமல்தமது சாதி அடையாளத்தையே முழுமுதலானதாகக் கருதி வருகின்றஒட்டுமொத்த சமூகத்தில் சாதியின் முக்கியத்துவத்தைத் தகர்க்கின்ற பார்வையை வகுத்துக் கொள்ளாமல்சொந்த சாதிக்கான ஆதாயங்களை - பல நேரங்களில் இவை சொந்த ஆதாயங்களாகவும் சீரழிந்துவிடுகின்றன-மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றஅடையாள அரசியல் பேசுகின்ற இயக்கங்கள்/ அமைப்புகள் நாடெங்கிலும் அதிகரித்து வருகின்றன.

உலக அளவிலும்நாடு முழுவதிலும் நாள்தோறும் உருவாகிவரும் புதுப்புதுப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்ற இடதுசாரி இயக்கங்களோ நாட்டின் மாறி வரும் புதிய சூழ்நிலையில் வைத்து சாதிப் பிரச்சினையை முதன்மை முக்கியத்துவம் வழங்கி அணுகாமல்அப்பிரச்சினையின் தீவிரத்தையும் அவசரத் தன்மையையும் குறைத்து மதிப்பிட்டு வருகின்றனசாதி ஒடுக்குமுறைகளை சமூக – பொருளாதார- பண்பாட்டுப் பிரச்சினையாகக் கருதி ஆய்வு செய்வதில் போதாமைகள் நிலவுகின்ற காரணத்தால்பல்வேறு சமூகப் பிரச்சினைகளைப் போல் சாதிப்பிரச்சினையையும் மிகவும் பொதுப்படையான பிரச்சினையாகக் கருதிஅதற்குத் தீர்வு காண முயல்கின்றன.

தலித் மக்களுக்கான சமநீதிபண்பாட்டு சமத்துவமிக்க சமுதாயம் ஆகியவற்றை அமைப்பதற்கு  இவ்விரு போக்குகளுமே உதவப்போவதில்லை. தலித் அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் ஓர் ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய தருணம் இது. இதனைப் பெரும்பாலான இடதுசாரி இயக்கத் தோழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுக்கின்றபொருளாதாரரீதியானவை அல்லாத பெரும்பாலான போராட்டங்கள் மட்டுமின்றிபொருளாதாரப் போராட்டங்களில் கணிசமானவையும்கூட தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களாக இருப்பதற்குக் காரணம் இதுதான். 

அம்பேத்கரின் படைப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்கான முயற்சியிலிருந்துசாதி மறுப்பு இலக்கியங்களை- அவை தலித் சமூகப்பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தாலும்தலித் அல்லாதவர்களால் எழுதப்பட்டிருந்தாலும்-வெளியிடுவது வரையில் இடதுசாரி எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்குக் காரணம் இதுதான்.

உலகமயமாக்கலின் உயர்தொழில்நுட்ப வளர்ச்சிசாதிய சமூகத்தின் அடித்தளத்தில் கீறல்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,உலகமயமாக்கலின் ஏவல் பணி செய்யும் இந்துப் பாசிசத்தையே வலுப்படுத்தியுள்ளது என்றும்இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இந்துப்பாசிசத்தின் கருத்தியல் உள்ளடக்கமாக பார்ப்பனியமும். பொருளாதார உள்ளடக்கமாக உலகமயமாக்கலும் விளங்குகின்றன என்றும்மேலும் உலகமயமாக்கலானது வினோதமான விதத்தில்ஏற்கனவே இங்கு நன்றாக வேரூன்றியுள்ள நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு உரமிடுவதாக அமைந்துள்ளது என்றும்உலகில் வேறெந்த நாட்டிலும் இடம்பெற்றிராத தீண்டாமை” என்னும் கொடிய வழக்கம் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமின்றிமனிதகுலம் இதுவரை கண்டவற்றிலேயே மிகவும் கொடுமையான,மிகவும் மனிதத்தன்மையற்றமிகவும் அருவருப்பான வழக்கமாகும் என்றும் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இடதுசாரிச் சிந்தனையாளர்களே. 

ஆனால் ஒட்டுமொத்த சமூக விடுதலையிலிருந்து தலித் மக்களின் விடுதலை-சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி-பிரிக்கமுடியாதது என்பதைப் புரிந்துகொள்ளாத தலித் அறிவுஜீவிகளின் தலைமையிலான சில தலித் இயக்கங்கள் தங்கள் அடையாள அரசியலுக்கு இடதுசாரிகளால் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் என்று கருதிஇடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகளைக் குறைகூறுவதில் தொடங்கிகம்யூனிஸ்ட் இயக்க எதிர்ப்புமார்க்சிய எதிர்ப்பு என அதனை விரிவுபடுத்திக்கொண்டுமார்க்சியர்களின் மீதும்மார்க்சியக் கருத்தியலின் அடிப்படையிலான இயக்கங்களின் மீதும் மிக மோசமான அவதூறுகளைப் பொழிவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அம்பேத்கரின் எழுத்துகளையும் வாழ்க்கைப் பணிகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு முன்வைக்கப்படும் அம்பேத்கரியம் என்னும் கருத்தியலின் பிரதிநிதிகளாகவும் ஆய்வறிஞர்களாகவும் வலம் வருவோரின் பங்கு இதில் குறைத்து மதிப்படத்தக்கதல்ல. அம்பேத்கரை முன்வைத்துஅவரது சாதி மறுப்பு அரசியலை முன்வைத்துஇவர்கள் நிறுவுவதற்கு விரும்புவதெல்லாம்சாதி அடையாளத்தை மையமாகக் கொண்டஇன்னும் துல்லியமாகச் சொல்வதெனில்தலித் அடையாளத்தை மையமாகக் கொண்டசாதியத்தை நிரந்தரமாக அழிப்பதற்கும் சாதியற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும் எதிரான அரசியலை முன்வைக்கின்ற அடையாள அரசியலைத்தான்அவ் அடையாள அரசியலின் வழியாக தலித் மக்களின் வாழ்வுரிமைகளுக்குப் போராடுவதைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதே இதன் நோக்கம்.

அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தமக்களின் மகத்தான தலைவர் என்பதற்கும் மேலாககடவுளைப் போல் வழிபடுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர் ஒரு மனிதப் பிறவிதான் என்று நம்ப விரும்பாதவர்கள் இவர்கள்சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அம்பேத்கரிடமே தீர்வு இருக்கிறது என்று நம்பவைப்பதற்கு இவர்கள் மேற்கொள்ளும் முயற்சி அளப்பரியது. பொதுவாகதனது வாழ்நாளின் பெரும்பகுதி முழுவதிலும் பகுத்தறிவுவாதியாக வாழ முயற்சி செய்த அம்பேத்கர்தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில்இந்து மதத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டது ஒரு சறுக்கல்தான் என்று இவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாகஅதை நியாயப்படுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். மேலும்தலித் மக்களுக்கு விடுதலையைத் தேடித் தரப்போவது தனது பௌத்தமே என்று அம்பேத்கர் கூறியபோதிலும் அவர்தொடக்க காலப் பௌத்தத்தை-அதன் பகுத்தறிவுப்பூர்வமான உள்ளடக்கத்தைக் கருதி-ஏற்றுக்கொண்டவரல்லமாறாகபிற்காலத்தில் பெருமளவுக்குப் பகுத்தறிவு அடிப்படைகளைக் கைவிட்டு வெறும் மூடநம்பிக்கைகளின் புகலிடமாக மாறிப்போன மகாயான’ பௌத்தத்தையே ஏற்றுக்கொண்டிருந்தார் என்று சொன்னால் அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மாறாக, “மகாயான” பௌத்தம் கூறுகின்றசர்வ வல்லமை படைத்த போதிசத்துவராகவே அம்பேத்கரை மாற்றி, “திருவுருவ” உருவாக்கத்தில் ஈடுபடுவார்கள். இத்திருவுருவ வழிபாட்டை யார் எதிர்த்தாலும்விமர்சித்தாலும்அவர்களை தலித் மக்களின் விரோதிகள்” என்றும், “ஆதிக்கச் சாதி வெறியர்கள்” என்றும் முத்திரை குத்துவார்கள். அம்பேத்கருக்கு எதிரான எந்தவொரு விமர்சனத்தையும் இங்கு முன்வைப்பவர்களுக்கு இங்கு நேருவது இதுதான். எங்கே தன்னைச் சாதி ஆதிக்கவாதி (அல்லது ஆதிக்க சாதி வெறி பிடித்தவர்) என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சியே நிறையப்பேர் இங்கு மௌனமாகி விடுகிறார்கள். இந்த மௌனம் விட்டுச்செல்கின்ற இடைவெளியில்தான் அடையாள அரசியல் பேசும் அம்பேத்கரியமும்வர்க்கப்போராட்டத்தை நீக்கி பன்மைக் கட்டமைப்புகளை முன்வைக்கும் பின்நவீனத்துவமும்தற்கால சமூகத்தில் நிலவும் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் காலனிய ஆட்சிக் காலமே என்று பேசும் பின் காலனியமும்வகுப்புவாதச் சிந்தனையும்  ஒன்று கலக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்குள்ளும் வெளியிலும் நிகழ்வது அநேகமாக இதுதான். மார்க்ஸை விமர்சித்துவிட்டு நீங்கள் மார்க்சியக் கட்சிகளில் தொடர்ந்து நீடிக்க முடியும்ஆனால் அம்பேத்கரை விமர்சித்துவிட்டு நீடிக்கமுடியாது. இந்த சமயத்தில் அம்பேத்கர் மீதானவிமர்சனங்களற்ற புகழுரைகளின் உரத்த கூச்சல் விண்ணை முட்டுகிறது. தலித் மக்களின் விடுதலைக்கு இது சற்றும் பயன்படாது என்ற போதிலும்அம்பேத்கரின் பௌத்த மத மாற்றத்தையும் அவரது மத நம்பிக்கைகளையும் விமர்சனமேதுமின்றிப் பரப்புவதும்அதை “ அம்பேத்கரிய பௌத்த அடையாள மீட்டுருவாக்கம்” என்று போற்றிப் புகழ்வதும்தங்கள் அடையாள அரசியலை முன்னெடுப்பதற்கான முக்கியமான கருவிகளில் ஒன்றாக அவரது மத நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்வதும் இன்றைய தலித் விடுதலை அரசியலின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன. முழு தலித் சமூகத்தையும் தங்களுக்கு இணக்கமாகக் கொண்டுவருவதற்கும்பாட்டாளிவர்க்க இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவாறு அவர்களைத் தடுப்பதற்கும் ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குஇத்தகைய தலித் அறிவிஜீவிகளின் செயல்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபுரிகின்றன. தலித்  மக்களில் பெரும் எண்ணிக்கையினர்  சமஸ்கிருதமயமாக்கப்படுவதையும் பாசிச இந்துத்துவக் கொடியின்கீழ்க் கொண்டுவரப்படுவதையும்உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவதையும்தன்னார்வ அமைப்புகளாலும் ஆக்ஸ்ஃபாம்போர்டு ஃபவுண்டேஷன் போன்ற அறக்கட்டளைகளாலும் தலித் அமைப்புக்களுக்கு ஏகாதிபத்திய நிதி கையளிக்கப்படுவதன் மூலம்   இவ்வகை அமைப்புகளில் பணியாற்றும் தலித் மக்கள் அதிருப்தியாளர்களாக”, “செயலற்றவர்களாக” வைத்திருக்கப் படுவதையும் இந்த தலித் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதில்லை. மார்க்சிய இயக்கங்களிலிருந்தும் அவ்வியக்கங்கள் மேற்கொள்கிற புரட்சிகரமான போராட்டங்களிலிருந்தும் அம் மக்களை விலக்கி நிறுத்துவதில் மட்டுமே அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்குப் பெருமுயற்சி தேவை. உரையாடல்களின் மூலம் பொதுவான உணர்வு நிலையையும் நிலைப்பாடுகளையும் வகுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கைக்கு இடமிருப்பதாக நம்பிய நாட்களெல்லாம் கடந்து போய்விட்டது போல் தோன்றுகிறது- ரங்கநாயகம்மா அவர்கள் தெலுங்குமொழியில் எழுதிஆங்கிலம் வழியாகத் தமிழில் கொற்றவை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:புத்தர் போதாது!அம்பேத்கரும் போதாது!மார்க்ஸ் அவசியத்தேவை” என்ற நூலுக்கு தமிழ்நாட்டு தலித் அறிவுஜீவிகள் காட்டியசொல்லுந் தரமற்ற எதிர்வினையும்,அதைத் தொடர்ந்து மார்க்சியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையிலான சாதியும் வர்க்கமும்’ குறித்த ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுக்கும் வகையில் கொற்றவை அவர்களால் தொகுத்து வெளியிடப்பெற்ற சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்:தொடரும் விவாதம்என்ற நூலுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் அதே தலித் அறிவுஜீவிகள் இன்றுவரை கடைப்பிடித்துவரும் மௌனமும் இந்த நம்பிக்கையின் முடிவை உணர்த்துகின்றன. இந்த நிலையில்,(பகத்சிங்கின் மொழியில் கூறுவதெனில்) கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்குஒரேயொரு வழிமுறை மட்டும்தான் மிச்சமிருக்கிறது. எப்படியாவது உண்மையை உரக்கப் பேசி,அச்செவிகளில் விழவைப்பதுதான் அது. அப்படி உரக்கப் பேசும் ஒவ்வொரு சொல்லும் வெடிகுண்டுச் சப்தமாய் கேளாத செவிகளைக்கிழித்து உட்புக வேண்டும். கேள்விக்கணைகளாகப் பாய்ந்து செல்கின்ற ஒவ்வொரு சொல்லும்கேட்போரின் இதயத்தைக் கிழித்து அங்கே உண்மையைப் பதிக்க வேண்டும். இந்த நோக்கத்துடன் தோழர் வசுமித்ர அவர்கள் மேற்கொண்ட கடும் உழைப்பின் விளைபயனே இந்நூல்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் ஆய்வுக் குழப்பங்களைவாசகர்களின் மனங்களை மாற்றவேண்டும் என்ற நோக்கில் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு அவர் எழுதி வைத்திருக்கும் பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகளைஅதன் பின்னணியில் இருந்ததலித் மக்களுக்கான விடுதலையை மட்டுமே பற்றிச் சிந்தித்ததன் விளைபயனாக எழுந்தவகுப்புவாதக் கண்ணோட்டத்தின் தர்க்கரீதியான முடிவாகத் தன்னுணர்வுடனோதன்னுணர்வின்றியோ அவர் வந்தடைந்த அடையாள அரசியலைவசுமித்ர தனது கூர்மையான அரசியல் பார்வையுடனும் தர்க்க வாதங்களுடனும் விமர்சிக்கின்றார். அவ்விமர்சனங்கள் வசுமித்ர மார்க்சிய அரசியல் சார்பையும் விமர்சனக் கூர்மையையும் கொண்டிருப்பதால் மட்டுமின்றிஉண்மை என்னும் உரைகல்லில் சோதித்துப் பார்த்து முன்வைக்கப்பட்டவையாகவும் இருப்பதால்நூல் நெடுகிலும் அவரது வாதங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. அதே நேரத்தில்சமூக மாற்றங்களில்,சாதிய சமூக அமைப்பைத் தகர்ப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் சரியாக மதிப்பிடுகிறார் வசுமித்ர. பொதுவாக அம்பேத்கரின் தத்துவசமயப் பார்வையிலிருக்கும் சிக்கல்களை விமர்சிப்பதே இந்நூலின் நோக்கம் என்றபோதிலும் விவாத முறைகளும்தரவுகளை முன்வைக்கும் விதமும்ஆய்வு முடிவுகளுக்கு வந்து சேரும் பாங்கும் காய்தல் உவத்தலின்றி” நடுநிலையுடன் திகழ்வதைக் காணமுடியும். மொத்தமாகதமிழகத்தில் அம்பேத்கரைக் கடவுளின் திருவுருவாகக் காண்பவர்களில் பலரையும் அம்பேத்கர் மீதான வசுமித்ர-வின் ஆய்வு-விமர்சன முடிவுகள் சங்கடப்படுத்தக் கூடுமெனில்அதற்குக் காரணம் அவர்களது அடையாள அரசியல் சார்பும் ஆய்வு அடிப்படையற்ற முன்முடிவுகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. உண்மையான தலித் விடுதலையிலும்பகுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்திலும்,  சமத்துவமும் சமநீதியும் நிலைபெறுகின்ற சோஷலிச சமூகத்தை நிறுவுவதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்ற அனைவருக்கும்தமிழகச் சூழலில் யார் எவர் என்று அடையாளம் காட்டுகின்ற நோக்கில் இந்நூலுக்கு முன்னோட்டம்” ஒன்றையும் வசுமித்ர வழங்கியுள்ளார். இதுஅடையாள அரசியலோடு-அதாவது தலித் இயக்கங்களோடு-தொடர்புடையவர்களின் சார்பு நிலைகளை மட்டும் சுட்டுக்காட்டுவதோடு நின்றுவிடவில்லை: ஆயிரம் பக்கங்களுக்கு நீளக்கூடிய இத்தகைய நூலை அவர் எழுதுவதற்கான ஆய்வு அடிப்படைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவ,சமயக் கண்ணோட்டங்களை விமர்சிப்பற்காக மட்டும்தான் வசுமித்ர இந்த நூலை எழுதியுள்ளாராஇல்லைமதத்தின் அடிப்படையைக் கொண்டு கட்டியெழுப்பப்படும் அரசியல்விடுதலைக்கு வழி வகுக்காது;மாறாக அடையாளத்திற்குள் சிறைபட்டுச் சின்னாபின்னமாகிவிடும் என்று சொல்வதற்காகவும்தான். அது மட்டுமாஇல்லை. சாதியை ஒழிப்பதும்அடையாளங்களை நிராகரிப்பதும்பாட்டாளிவர்க்க உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான புரட்சிகரச் செயல்பாட்டின் மூலமே சாத்தியப்படும்;அதற்கு எத்தகைய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்அதுகுறித்துத் தலைசிறந்த மார்க்சிய அறிஞர்களும் ஜனநாயகச் சிந்தனையாளர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம்  எடுத்துச் சொல்வதற்காகவும் தான்.

ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்டாலும் இறுதிவரை சுவைகுன்றாமல் வாசகர்களை நடத்திச் செல்லும் ஆற்றுவெள்ளம் போன்ற நடை! அம்பேத்கரை புறவயமான,  வரலாற்றுப் பொருள் முதல் வாதப் பார்வையோடு அணுகி விமர்சிக்கின்ற முதல் தமிழ் நூல் இது. சொல் புதிது பொருள் புதிது” என சோதிமிக்க” நவ உரைநடை நூலைத் தமிழுக்கு அளித்துள்ள தோழர் வசுமித்ர அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.



Monday, April 22, 2019

பத்திரிக்கையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது






அப்படித்தான் இருக்கிறது
பத்திரிக்கையாளர்கள் 
அமைதியாக 
இருக்கும்போது 
நாடு 
தன் நிர்வாணத்தை 
அமைதி நிரம்பிய 
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிக்கையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி 
மிக நேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாகவாவது 
குடிமக்களுக்குக் காட்டிக்கொடுக்கவேண்டும்
மாறாய்
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கிறது

காகிதங்களிலோ
பத்திரிக்கையாளர்கள்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணனையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்குக் காட்டப்படுகையில்
அரசியல்வாதிகள்
அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர்

பத்திரிக்கையாளர்கள் மௌனமாக இருக்கும் நாடு உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம்
இது 
மக்களின்
சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கிறார்கள்

குழந்தைகள் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரீகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தைக் காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத
வார்த்தைகளை
திறக்க முடியா உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி 
கசியும் வரை

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை
கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான் 
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களையே நோக்கியிருக்கவேண்டும்
இப்படியாகத்தான் கவிஞன் தன்னை உற்பத்தி செய்கிறான்
இறந்து விடாமல்

பத்திரிக்கையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிக்கையாளனே நாட்டுக்குத் தேவை
பத்திரிக்கைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிக்கையாளன் தலை குனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை நகர்ந்து செல்கிறது

பத்திரிக்கைகளுக்கு தெரியாத பத்திரிக்கையாளன்
அல்லது கவிஞனுக்குத் தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி 
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்பொழுது

அரசு மௌனமாகிறது.

Saturday, April 13, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும்- நூல் மதிப்புரை.



                      



அம்பேத்கர் இந்துமதத்திலிருந்து விலகி பௌத்த மதத்தை தழுவினார். ‘பௌத்த மதத்திற்கு ஒரு பைபிள் தேவை’ என்று கூறிய அம்பேத்கர் ‘புத்தரும் அவரது தம்மமும்’என்ற நூலை  எழுதியுள்ளார். இது பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது.

பல இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அம்பேத்கர் கடவுளாகத் துதிக்கப் படுகிறார். இந்த நிலையில் வசுமித்ர எழுதியுள்ள நூல், அம்பேத்கர் குறித்து பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது.
ஏற்கெனவே  ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு : புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!’ என்ற நூலை மொழிபெயர்த்தவர் கொற்றவை. அவருடைய வாழ்நாள் தோழனான வசுமித்ர இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலை வெளியிட்ட குறளி பதிப்பகம்தான் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெளிவந்துள்ள ரங்கநாயகம்மாவின் நூலுக்கு வந்த எதிர் வினைகளின் தொடர்ச்சியாக  ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது எனலாம்.

மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக இந்த 920 பக்க நூலை வசுமித்ர படைத்துள்ளார். கிட்டத்தட்ட  இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனஎனவே இது பெரிய நூலாகிவிட்டது .

 ‘என் ஆசான் காரல் மார்க்ஸ்’ என்று பெருமையாக நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடுகிறார். தென்னாட்டு கோசாம்பி என்று அழைக்கப்படும் நா.வானமாமலைஎஸ்.தோதாதிரிவெ.கிருஷ்ணமூர்த்திதேவ.பேரின்பன் போன்ற மார்க்சிய அறிஞர்களை பெருமையாகச்  சொல்லுகிறார் வசுமித்ர. எனவே இந்த நூல் மார்க்சிய கண்டோட்டத்தில் அம்பேத்கரைப் பார்க்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

‘அம்பேத்கர் மற்றும் அவருடைய புத்தர்பற்றி’ இந்த நூல் பேசுகிறது. ‘புத்தரை அழகுடையவராக ஆராதனை’ செய்கிறார் அம்பேத்கர். அவருடைய உயரம்அங்க லட்சணம்கம்பீரமான தோற்றம்உயரம் எல்லாமே வர்ணிக்கப்படுகிறது. புத்தரை கடவுளாக்கி விமர்சனம் செய்யும் அம்பேத்கரை இந்த நூல் சமரசமின்றி விமர்சனம் செய்கிறது. ‘வசுமித்ரவின் வார்த்தைகள் யோசிக்க வைக்கும் வார்த்தைகள்’ என்கிறார் இதற்கான முன்னுரை எழுதியுள்ள தி.சு.நடராசன்.

மொழிபெயர்ப்பாளரும்மார்க்சிய அறிஞருமான கோவை. எஸ்.பாலச்சந்திரன் இந்த நூலின் சாரத்தை ஓரிரு பக்கங்களில் சொல்லுகிறார். ‘வசுமித்ரவின் வாதங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றன’ என்கிறார் எஸ்.பாலச்சந்திரன்.

தன் வாழ்வின் பெரும்பகுதி முழுவதிலும் பகுத்தறிவுவாதியாக வாழ முயற்சி செய்த அம்பேத்கர் பௌத்தமதத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சறுக்கல்தான் என்கிறது இந்த நூல். மேலும் தொடக்க கால பௌத்தத்தை அதன் பகுத்தறிவுப் பூர்வமான உள்ளடக்கத்தை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக மூட நம்பிக்கைகளின் புகலிடமாகிப்போன மகாயான பௌத்தத்தையே ஏற்றுக் கொண்டார் என்கிறது இந்நூல். ‘பாசிசத்தின் கருத்தியல் உள்ளடக்கமாக பார்ப்பனியமும்பொருளாதார உள்ளடக்கமாக உலகமயமாக்கலும் விளங்குகிற இந்தக் காலகட்டத்தில் தலீத் அறிவு ஜீவிகள் கம்யூனிச எதிர்ப்பில் ஈடுபட்டு அடையாள அரசியலை முன்னெடுக்கின்றனர். இப்படி அடையாள அரசியல் பேசுவோரும்தலீத் அறிவுஜீவிகளும் தலீத் மக்களில் பெரும் எண்ணிக்கையினரை சமஸ்கிருதமயமாக்கப்படுவதையும்அவர்களை உலகமயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வைப்பதையும் செய்கின்றனர்’ என்று மிகக் கவலையோடு சொல்லுகிறார் எஸ்.பாலச்சந்திரன்.

 ‘அம்பேத்கரின் ஒருநாள் வாழ்க்கையை நம்மால் இந்த நிலைமையில் வாழ்ந்து கடக்க முடியாது’ என்று சொல்லும் வசுமித்ர, நீண்ட தூரம் போராட்டத்தோடு பயணித்து இறுதியில் மனச்சோர்வோடு நிறுவனமயமான ஆன்மீக புத்தத்தின் பாதையில் அம்பேத்கர் முடிவடைந்ததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அம்பேத்கரது பௌத்தத்தை (நவயானம் எனச் சொல்லப்படுவதை) ஆய்வு செய்து எனது விமர்சனங்களை முன் வைக்கிறேன் என்கிறார். கடவுளாக்கப்பட்ட புத்தரை ஏன் அம்பேத்கர் படைத்துள்ளார்அது குறித்தான ஆய்வும் முடிவுமே இந்த நூல். அம்பேத்கர் தனது  இறுதிக் காலத்தில்  ‘பௌத்த பிக்குகள்’ மனநிலையில் புத்தரை அணுகியிருக்கிறார். இது இளமைக்கால அம்பேத்கருக்கு முரணான சித்திரம் என்கிறார் வசுமித்ர.

உழைப்பு குறித்து எந்த எதார்த்தமான புரிதலும் இல்லாத ஒரு பௌத்தத்தைமனதை அடக்க உழைகாமத்தை அடக்க உழைபுலன்களை அடக்க உழை என்று தனி மனிதக்கருத்தியல் ரீதியான ஒழுக்கவாதத்தைவர்க்க கருத்தியலுக்கு இணையாக வைத்து பேசுவதன் மூலம் தவறு இழைக்கிறார் என்கிறார் வசுமித்ர.

அம்பேத்கருடைய எழுத்துக்கள் காலவரிசைப்படி தொகுக்கப்படவில்லை. இதனால் அவர் இறுதியாக சொன்ன கருத்து என்னவென்று நமக்குத் தெரியவில்லை. அவரது கருத்துக்களை இடம் மாற்றிவெட்டிப் போட்டு அரசியல் தன்மையற்ற மேற்கோள்களாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுகிறார் வசுமித்ர. அம்பேத்கரது மதமாற்றச் செயல்பாடுகள் அனைத்தும் மஹர் சாதியனரை ஒட்டியே நடந்திருக்கிறது  என்கிறார் நூலாசிரியர்.

‘அம்பேத்கர் மார்சை விமர்சித்து வந்தாலும் அவரை நெஞ்சில் சுமந்தார்’ என்று அருணன் சொல்லுவதெல்லாம் நழுவல்வாதமே என்கிறார்.மார்க்சை நிராகரித்து புத்தரை முன்மொழிந்த அம்பேத்கர் பற்றி  எஸ்.வி.ராஜதுரை,வ.கீதாஅ.மார்க்ஸ்ரவிக்குமார்பிரேம்முத்துமோகன்அருணன் என எவரும் ஆய்வுப்பூர்வமாக ஒரு கட்டுரையைக் கூட எழுதியதில்லை என்கிறார்.பௌத்தம் துக்க கோட்பாட்டை முன்வைத்து மக்களின் புரட்சிகர உணர்வை மேலெழும்ப விடாமல் பார்த்துக் கொண்டது என்கிறார் வசுமித்ர.

பௌத்தம் என்றுமே அரசர்களை எதிர்த்ததில்லை. அரச ஆதரவோடுதான் இருந்ததால்தான் அது படைவீரர்களை பிக்குகளாக சேர்த்துக் கொள்ளவில்லை. சுரண்டலுக்கு ஆதரவாக  இருந்ததால்தான் வணிகர்களின் ஆதரவு கிடைத்தது. இல்லையென்றால் ஆயிரக்கணக்கானவர் தங்கிப் படித்த நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு உணவு எப்படி கிடைத்தது என்கிறார். எனவே சுரண்டலை பாதுகாத்த பௌத்தத்தையும்சுரண்டலுக்கு எதிரான மார்க்சியத்தையும் ஒன்றாக பார்க்கவே முடியாது என்கிறார்.

நூலைப் பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. ஆனால் படிக்க ஆரம்பித்தால் எளிதாக நகர்கிறது. என்னுரையில் தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை 120 பக்கங்களில் சொல்லுகிறார். இதனை விவரிக்கும் விதமாக நூலின் எஞ்சிய பகுதிகள் அமைகின்றன. அம்பேத்கர் குறித்த தனது முடிவுகளை நிறுவுவதற்காக பல்வேறு அறிஞர்களை அவர்கள் அடையாள அரசியலை பேசினாலும் சரிமார்க்சிய அரசியலை பேசினாலும் சரி. அழைக்கிறார் வசுமித்ர.

 ‘இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகள் அம்பேத்கரை எப்படி அணுகுவது என்பதில் அமைப்பு ரீதியாகதத்துவ ரீதியாக எந்தப் பொதுக் கருத்தையும் வைத்ததில்லை என்று குற்றம் சாட்டுகிறார். ‘அம்பேத்கரின் கம்யூனிச வெறுப்பும்இஸ்லாம் மதத்தின்பாலான விமர்சனங்களும் இந்துத்துவர்களுக்கு உவப்பான விஷயங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோகிறிஸ்தவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டுநலன் பெரிதும் பாதிக்கப்படும்’ என்று அம்பேத்கர் சொல்லுவதால்தான் இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிறார். ‘அம்பேத்கரது பௌத்தத்திற்கு மாறியவர்களில் இதுவரையிலும் சாதியை ஒழித்ததற்கான சிறு தடயம் கூட கிடைக்கவில்லை’என்கிறார் வசுமித்ர.
அம்பேத்கர் நூலை மொழிபெயர்த்த கி.வீரமணி ‘அம்பேத்கர் ஏன் கம்யூனிசத்திதற்கு ஏற்கவில்லை?’ என்ற கேள்வியை விட்டுவிடுகிறார். அம்பேத்கர் எழுதியதாக சொல்லப்பட்ட நூலின் முன்னுரையை தான் மொழிபெயர்த்த நூலில் பெரியார்தாசன் விட்டுவிட்டார் என்று கூறுகிறார் வசுமித்ர.

கோசாம்பிராகுல சாங்கிருத்யாயன்தேவி பிரசாத் சட்டோபாத்யாயா வழியில் நின்று அம்பேத்கர் குறித்த சித்திரத்தை நமக்குத் தருகிறார்.

அம்பேத்கர் குறித்து இவர் உருவாக்கியுள்ள சித்திரம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். சங்கடமான கேள்விகள் எழலாம். ஆனாலும் இதுதான் அம்பேத்கரின் உருவம் என்று தன்னம்பிக்கையோடு வசுமித்ர வரையறை செய்கிறார்.
எப்படி இருந்தாலும் இவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது அறிவுஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த நூல் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த நூல் வெற்றி பெற்றிருக்கிறது.


920பக்கம்/ரூ.890/டிசம்பர் 2018/ குறளி பதிப்பகம் சென்னை.
பீட்டர் துரைராஜ்.
நன்றி: காக்கைச் சிறகினிலே.

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...