Sunday, March 14, 2010

ஒரு காதல் கடிதமும்….ஆளற்ற கடற்கரையில் கரையும் கருப்பு நிற காக்கைகளும்….


……….சொல்ல வேண்டிய வார்த்தைகளின் அர்த்தங்களை மனதில் நினைத்ததும் மௌனம் தலைகுப்புற நம்முன் விழுந்து மரிக்கிறது. சொல்லப்படாதவைகளோ சொல்லப்பட வேண்டியவருக்கு நாம் செலுத்தும் வன்முறையாகவும் மாறுகிறது.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கும் மௌனத்திலிருந்து வார்த்தையின்மைக்கும் தாவிக்கொண்டிருந்தேன் உண்மையில் அது ஒரு ஊசலாட்டம்தான் இருந்துவிட்டுப்போகட்டுமென மனமும் பேசித்தீர் என அடம்பிடிக்கும் நண்பர்களும் கொண்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைக்கும் வன்முறையிலிருந்து சதா தப்பியபடியே அலைந்துகொண்டிருந்தவன் நிதானிக்க வேண்டியிருந்தது. நின்றுவிட்டேன். நான் விரும்பிக் கைக்கொண்டிருந்த, எவருக்கும் தர மறுத்த என் அனாதைத்தனத்தை ஒரு சிறு புன்னகையால் பிடுங்கியெறிந்திருக்கிறாள்.வழியும் பெயரற்ற கண்ணீரில் உப்புச்சுவை காற்றில் கரைகிறது.

இப்படியாக......

அவளை சரியாக கடற்கரையில் வைத்து சந்தித்தேன் என்பதை விட பார்த்தேன் என்று சொல்வேன். பார்த்தேன். கவிதைகளையும் கோபங்களையும் உடன் கொண்டு வந்திருந்தாள். நானும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுத்தான் போயிருந்தேன். பற்றிக்கொள்ள எதுவும் நடக்கவில்லை. நானறிந்த கவிகளைப் பேசியதைத்தவிர. இன்றுவரை எனக்கு அதில் ஆச்சரியமாய் இருப்பது எந்தப்புள்ளியில் நான் அவளைஅவளை….போகட்டும்….

வாழ்நாள்தோழியாய் வந்து நிற்கிறாள். எதையும் தொலைப்பதில் ஆர்வமுள்ள நான் மிகச்சரியாக என்னைத் தொலைத்திருக்கிறேன். புன்னகையில் கரையும் முகம் அவளுக்கு நித்ராவாகிய அவளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இருக்கிறேன்இருக்கிறேன். இருக்கிறேன்.

வாழ்நாள் தோழனாய் நான் இருப்பேனென்பதை அவளுக்கு அவளை விட அவள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் மீதமர்ந்து சொல்கிறேன்.

நித்ரா உன்னை மிச்சம் வைக்காமல் காதலிப்பேன்னென்பதை நான் உனக்கு வெகு ஆழமாய்ச் சொல்கிறேன். அது என்னையும் இழுத்துச்செல்லும் பாதாளம் என்பதையும் அறிவேன்.

உன் அன்பின் பெருங்கைகளுக்குள் அடக்கிக்கொள் இச்சிறுவுயிரை.

சிறுகுறிப்பு

நண்பர்களின் முகச்சுளிப்புகளை பிரியத்தின் மீது கட்டப்பட்டும் செங்கற்கள் என்பதாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என் அன்பு.

5 comments:

  1. bravoooooooooooo.........!!!!!!!!!

    ReplyDelete
  2. மரியாதையின் மீதமர்ந்து காதலிக்க தெரிந்திருக்கு...
    உமக்கு பாக்கியம் தான்...
    வன்முறைகள் சிறுசிரிப்பில் இழைந்தோடிவிடுகின்றன கண் மூடும் கணத்தில்...
    இப்போதே உமது எழுத்துக்கள் 70-73 லிலும் பிரிவென்ற சொல்லை மறுக்கிறது...
    தூரத்தில் நின்று சிறு உதடசைவில் கண்கள் மகிழ்ச்சியில் மூழ்கிக்கொள்ள நெக்குடன் வாழ்த்துக்கூறுகிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வசு மித்ர
    வாழ்த்துகள் கொற்றவை

    ReplyDelete
  4. ரேவதி, நேசமித்ரன், உங்களுக்கு என் அன்பு,
    சரவணன் அது என்ன 70 - 73.

    ReplyDelete

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...