Thursday, January 12, 2012

அன்புடன் மனுஷ்ய புத்திரனுக்கு......



" இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர்ராமசுப்ரமணியனுக்கும் வசுமித்திரா என்பவருக்கும் தேவ தச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்துவிட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம்வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…"
மனுஷ்ய புத்திரன் 




வணக்கம் மனுஷ்ய புத்திரன். என் பெயர் வசுமித்ர....வசுமித்திரா அல்ல....அதிலும் சங்கர்ராம சுப்ரமணியன் என்ற கவிஞருக்கும் வசுமித்திரா என்பவருக்கும்....நல்லது இந்த என்பவர் என்ற வசுமித்ர உங்களது உயிர்மையில் கவிதைகள் எழுதியிருக்கிறார். என் நினைவுக்குத் தெரிந்து 2003ல் தொடங்கி 2011 டிசம்பர் வரை வந்த உயிர்மையில் இரண்டு பேருக்குத்தான் அதிக பக்கங்களில் கவிதை வெளிவந்திருக்கிறதென்று நினைக்கிறேன். ஒன்று வசுமித்ர, இன்னொன்று மனுஷ்யபுத்திரன்.

மேலும் உங்களது பதிப்புப் பரப்பில் நீங்கள் தொலைத்த விமர்சனக் கடிதங்களில் என்னுடைய கடிதமும் ஒன்று. அது நீங்கள் பதிப்பித்து ஜெயமோகன் எழுதிய சுந்தரராமசாமி நினைவின் நதியில் என்ற நூலுக்கானது அதோடு அந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு இரு முறை போன் செய்து கடிதத்தை
எடிட் செய்யலாமா என்று கேட்டீர்கள் நானும் சம்மதித்தேன். ஆனால் உயிர்மையில் அந்தக் கடிதம் வரவேயில்லை. நல்லது. மறுநாள் நேரில் வந்து கேட்டதற்கு கடிதம் தொலைந்து விட்டது என்றீர்கள். அதோடு என் கவிதைகள் குறித்துப் படித்த கவிஞர் க்ருஷாங்கினி என்னையும் என் மகள் நேயாவையும் சந்திக்க விருப்பம் உள்ளதாக தங்களிடம் தெரிவித்ததாகச் சொன்னீர்கள். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை. மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மறப்பது உடலுக்கும் சில சமயம் மனதுக்கும் நல்லதுதான். ( சாரு, ஜெ.மோ விசயங்கங்களில் உங்களுக்கு இது உதவக் கூடும்.) கடிதத்தை தொலைத்து விட்டேன் என்று நீங்கள் கூறியதும் உங்களது பதிப்பில் எனது கவிதைத் தொகுதி வர எனக்கு விருப்பமில்லை என்று சொன்னேன். உயிர்மையில் கவிதைத் தொகுதி அதும் 2004 களில் எவ்வளவு பெரிய விசயம். மகிழ்ச்சி. அந்த கவிதைத் தொகுதிதான் "ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கு காரணங்கள் உள்ளன”. அது கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்தது.


என் பெயர் தெரியாதது போல் நடிக்கும் உங்களது வார்த்தைகள் என் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. இதை மனுஷ்யபுத்திரன் என்பவர் எனக்குச் சொன்ன செய்தியாகவே எடுத்துக்கொள்கிறேன். இன்னும் உங்களுக்குத் தெரியாத கவிஞர்கள், மற்றும் எழுத்தாளர்கள் அங்கு இருந்தார்கள். அந்த என்பவர்கள் குறித்து நாமும் பேசலாம்.

மனுஷ்ய புத்திரன்....சங்கருக்கு நீங்கள் போன் செய்வதற்கு முன், இந்த அடிதடியில் உங்களுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில் சில விசயங்களை நீங்கள், கவிஞரை தெரிந்தவர் என்பதற்காக, அல்லது ஒரு பதிப்பாளராக, மேலும் கடை போட்டிருப்பவராகக் கூட சம்பவ இடத்திற்கு சென்று நடந்தது என்ன என்று கேட்டிருக்கலாம். அதை விடுத்து கட்டப் பஞ்சாயத்தார் போல் தீர்ப்பு கூறுவது வருத்தமாக உள்ளது. சங்கர் எழுதிய கவிதைக்கு ம.... தோழர்கள் அவரது வீட்டுக்குச் சென்று விவாதித்தது குறித்து அறிவீர்கள் என்றே நம்புகிறேன். அதையே எனக்கு சங்கர ராம சுப்ரமணியன் செய்தார். கேட்டதற்கு முதலில் வன்முறையை பிரயோகித்தது சங்கர ராம சுப்ரமணியன். இப்பொழுது கடித்தேன் என்று அவர் அழுத்தந் திருத்தமாக கூறியிருக்கிறார். அவர் என்னை அடித்தார் நான் அவரை அடித்தேன் சண்டையில் அவரது விரல் என் முகத்தில் பட்டிருக்கலாம், பற்களில் பட்டிருக்கலாம். திரைக்கதை போல் சண்டையை அதுவும் எதிர்பாராத சண்டையை எழுதி வைத்து சண்டை போட முடியாதது தானே. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் குடித்திருந்தார் என்பதையும், அப்பொழுது மருத்துவமனையில் அவருக்கு என்ன சிகிச்சைகள் வழங்கினார் என்றும் அப்படியே கேட்டுச் சொல்லுங்கள். இது குறித்து நான் சுந்தர புத்தனிடமும், ஆசிரியர் அசோகனிடமும் பேசி விட்டேன்.


தமிழுக்காக ரத்தம் சிந்துவது, மற்றும் சிறுநீர் பெய்வது போன்ற வசனங்களை எழுதும் போது கொஞ்சம் யோசியுங்கள். டாக்டர் வீட்டில் ரத்தம் வடிய என்பதன் மூலம் சங்கர் ராமசுப்பிரமணியன் மேல் உள்ள உங்களது இரக்ககுணம் பொதுப் பார்வைக்கு வந்திருப்பது குறித்து நான் மனம் மகிழ்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட இரக்கக் குணம் குறித்து நான் பெரு மகிழ்ச்சி அடைவதோடு, அது தன் தன்மையை இழக்காமல் இருக்க என் அன்பையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.



இன்று புத்தகக் கண்காட்சிக்கு நான் வருவேன். மேலதிக தகவல்கள் தேவைப்படுமெனில் என்னைத் தாங்கள் தொடர்பு கொள்ளலாம். ஏனெனில் என் முகம் உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் என்றே நம்புகிறேன். மேலும் நேற்று நீங்கள் விடியலில் வாங்கிய கோசாம்பியின் நூல் மற்றும் வன வாசி புத்தகங்களுக்கு நான் பில் போட்டதும், நூலை நீங்களும் உங்களுடன் வந்தவர் மறந்து சென்றதும், பின் சொல்லி அனுப்பியபோது கொடுத்ததும் நான்தான். முடிந்தால் இன்று பேசலாம்.


மேலும் உங்களது வரிகளுக்கு பின்னூட்டமாக கட்டை விரலைக் கடிக்கும் மனநோயாளி என்ற வார்த்தைகள் வருகின்றன. மிகவும் மகிழ்ச்சி. சங்கர் குடித்து சண்டையிட்டார் என்றதும் இது போன்றவர்கள் குடிகாரர்களை  ஒழித்துக் கட்ட வேண்டும்...குடிகாரர்களே இப்படித்தான்...என்ற தூய குணங்களையும் அவர்கள் பார்வைக்கு வைப்பார்கள். உங்களது அறத்தையும், அதன் எதிர்பார்ப்புகளையும்  நான் மதிக்கிறேன். வணக்கம். இந்த மனநோயாளி என்ற வார்த்தைகளோடு இனி வரப் போகும் வார்த்தைகளுக்காகவும் காத்திருக்கிறேன்.

Monday, January 2, 2012

மான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....



சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற்றெறிச்சலை காதின் வழியாகவும், இன்ன பிற துவாரங்களின் வழியாகவும் இலக்கிய பெருமூச்சாய் விட்டிருப்பதோடு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்று மார்க்சியம் பற்றியும் பேசியுள்ளார்.

அவருக்கு ஒரு வாசகனாக நான் சொல்லுவது இதுதான். அய்யா உங்களது பின்னட்டைக் குறிப்புகளை விடவும், அதை சற்று நீளமாக எழுதி கவிதை.... கவிதை என்று கொட்டை எழுத்தில் உயிர்மையில் போடுவதை விடவும் சு. வெங்கடேசன் அவ்வளவு மோசமாக காவல் கோட்டத்தை எழுதியதில்லை. வாசிக்க சந்தர்ப்பமும், நேரமும் வாய்த்தால் நாவலைப் படித்து விமர்சனம் செய்யுங்கள்.

அதோடு அதே உயிர்மையில் கட்டங்கட்டி தேவதச்சனுக்கு அமெரிக்காக்காரர்கள் விள்ள்ள்ள்....க்கு விருது வழங்கியிருக்கிறது என்று குதங் குளிர்ந்திருக்கிறீர்கள். அவரும் இலக்கிய மேப்பார்வையோடு படத்தில் காட்சியளிக்கிறார். எனக்குத் தெரிந்து அவர்கள் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டைத்தான் அப்பெயரில் அளிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நல்லது.

அறிவு நாணயம், மற்றும் அறிவுச் சில்லறைகளை தாங்கள் கல்லாக் கட்டும் உயிர்மையின் வாயிலாக நான் அறிய முடிகிறது. அதோடு பாம்புக்கு கால் முக்கியமோ தலை முக்கியமோ என்று தேவதச்சன் அவர்கள் எழுதித் தந்தால் அதையும் வாசிக்க தயாராயிருக்கிறேன். புதிய எழுத்தாளனை வரபேற்பதில் ஒரு சக இன்பம் கிடைக்கிறது. நாளை சோடை போனாலும் போனால் போகிறது என்று விட்டு விடலாம். ஆனால் காலஞ்சென்ற பிணங்களை ஊதிப் பெருத்த உடலோடு கவிஞன் என்று தூக்கிச் சுமக்க சற்று அதீத தைரியமும் வலிவும் வேண்டும்...நீங்கள் தூக்கிச் சுமந்த பிணங்களின் பிரிவைக் கண்ணீராகவும் வசையாகவும் இறக்கி வைக்க ஒவ்வொரு இதழையும் பயன்படுத்துகிறீர்கள். நல்லது ஒப்பாரியையும் இலக்கியத்தில் சேர்த்த பெருமை உங்களுடையது.

உக்களுக்கு ஒரு விருதை உருவாக்க இளம் தலைமுறையினருக்கு காலமாகலாம். வேண்டுமென்றால் சொல்லுங்கள் ஒரு, ஒரு ரூபாய்க்குரிய விருதை வழங்குகிறோம். ஆனால் அந்த ஒரு ரூபாய் சுஜாதா சாகும் தறுவாயில் உங்களுக்களித்த ஒரு ரூபாயை விட அறத்திலும் கனத்திலும்...இன்னும் காலத்தால் புளிப்பேறாத புத்துயிருப்பு தத்துவ தரிசனத்தோடு இருக்காது. அதற்கு வருந்துகிறோம்.


சிறு குறிப்பு;

பின்னட்டை எழுதும்போது இந்த அறம் தரிசனம் எல்லையற்ற கவித்துவம் இது போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள். அது ஒரு தொற்று நோய் போல உங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது. அழுக்குத் தீரக் குளியுங்கள். அல்லது வாசியுங்கள். இதுதான் இப்பொழுதைய மருந்து. இலவச இணைப்பாய் நீங்கள் உங்களையே கவிஞன் என்று விதந்தோதிக் கொண்டு கையில் வெள்ளைக் குவளையோடும் நீயா நானா சோஃபாவிலும் அமர்ந்து நேர் கோணத்தில் இடது கையை சோஃபாவைத் தடவிய கோலத்தில் வெளிவந்த உங்களது புகைப் படம் தாங்கிய பின்னட்டைக் குறிப்புகளான இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் என்ற உள்ளட்டைக் குறிப்புகளை தயவு செய்து புரட்டி பத்தாம் பக்கம் உள்ளதை ஒரு முறை வாசியுங்கள். கவிஞர்கள் ஈரம் காயாமல் எழுதும் வித்தையை குறித்து எழுதியிருப்பீர்கள். வாழ்த்துக்கள்.  

Thursday, December 29, 2011

.......... ஜெய மோகன் நீங்கள் மிகவும் நல்லவர்.




எதிர்க்கட்சிகளின் ஒரு மித்த வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு சாவர்க்கரின் படத்தைப் பாராளுமன்றத்தில் திறந்து வைத்துள்ளார் குடியரசுத் தலைவர், மரியாதைக்குரிய அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். காந்தியைக் கொன்ற சதிக்கு தலைமை தாங்கிய இந்துத்துவத்தின் தந்தை சாவர்க்கருக்கு காந்திக்கு அருகில் பாராளுமன்ற மரியாதை இந்த வெட்கங் கெட்ட செயலுக்கு குடியரசுத் தலைவர் உடந்தை.*


1937- ல் இந்து மகா சபையின் அகமதாபாத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று சாவர்க்கர் - பேசியபோது, “ நமது இந்திய தேசத்திற்கு முகமதியர்கள் மிகப்பெரிய ஆபத்தாக விளங்குவார்கள் என்று இந்துக்களை நான் எச்சரிக்கிறேன். இந்தியா ஒரு படித்தான ஒற்றைத் தேசமல்ல. இந்துக்கள் எனவும் முஸ்லீம்கள் எனவும் இரு இரு தேசங்கள் அதற்குள் உள்ளன” சாவர்க்கர்.*

டாக்டர் மூஞ்சே, சீரி சாவர்க்கர் போன்ற இந்துக்கள் வாளின் பலத்தையும் வன்முறைக் கோட்பாட்டையும் நம்புபவர்களாக இருக்கலாம். இந்து ஆதிக்கத்தின் கீழ் முஸல்மான்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு அவர்கள் எண்ணிடலாம். நான் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்   காந்தி.*





ஜெயமோகன்....காந்தியைப் பற்றி உங்கள் கோமணம் உருக எழுதியது போதாதென்று இப்பொழுது  பசு நெய்யை நாக்கில் வழித்து சத்தியம் வேறு செய்துள்ளீர்கள். அ.மார்க்ஸ்,
அ. முத்துக்கிருஷ்ணன் இருவரும் பணம் பெற்று வேலை செய்கிறார்களென்று. அய்யா தாங்கள் யாரிடம் பணம் பெற்று எழுதுகிறீர்கள் நான் சொல்லப் போவதில்லை. திரைக்கு வசனம் எழுத நீங்கள் வருவதற்கு முன் தங்களை அறிந்தவன் நான். இப்பொழுது நாலு காசு சேர்ந்ததும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறீர்கள். சாரு எழுதிய வரிகளிலேயே நான் மிகவும் மதித்த வரிகள் அவர் உங்களை சரியாகக் கணித்தது மட்டுமே. உளறுவதற்கு ஒரு மடத்தை வட்டமெனத் தொடங்கினீர்கள். ஏன் கைக்காசு குறைகிறதா விழா எடுக்க. வேட்டி சட்டையுடன் உங்கள் விருதுகளை வாங்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் மீதும் எனக்கு ஒரு வாசகனாக மரியாதை குறைகிறது. போகிற போக்கைப் பார்த்தால். அ.மார்க்ஸிற்கும் விருது வழங்குவீர்கள். அந்த நாள் தொலைவில் இல்லை. பிறர் உங்களை ஏதேனும் ஒரு வரிகள் எழுதினாலே என்னை வசை பாடினார்கள் என்று பல பக்கங்களுக்கு முழக்கமிடுபவர் நீங்கள். ஆனால் நீங்கள் பிறர் குறித்து வைக்கும் ஆபாசங்கள் கேட்கச் சகியாதவை. நீங்கள் இதுவரை  உங்களைத் தவிர வேறு யாரையும் விட்டு வைத்ததில்லை. உங்களின் பெற்றோரின் மரணம் இன்னும் அவநம்பிகையின் பால் உங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் எழுத்தின் ஒவ்வொரு வரியிலும் நான் உணர்கிறேன். நீங்கள் கருணை பற்றி அறம் பற்றிப் பேசும்போதெல்லாம் அது ஏன் எனக்குக் கிட்டவில்லை  என்ற சுய எரிச்சலையே முன் வைக்கிறீர்கள். இது குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அவநம்பிக்கை மட்டுமே நீங்கள் கூறும் அறச்சக்கரத்தின் மையம். அதை நீங்கள் இந்துவத்துவத்தின் தேர்களுக்குப் பொருத்தவே நீங்கள் இன்னும் முயல்கிறீர்கள். உண்மையைச் சொன்னால் அங்கு உங்களை விட பழம் தின்று கொட்டை போட்ட எண்ணற்ற ஞானிகள்...நீங்கள் சொல்லும் அறக்குவியங்களான சடாதாரிகள் நிரம்ப உள்ளனர்.


இவ்வளவு கேவலமாக மனிதர்களை எப்படி உங்களால் எடை போட முடிகிறது. காரணம் உங்களின் அவ நம்பிக்கை.  பணம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று முதலில். அ.மார்க்ஸ்சை மட்டும் சாடி வந்தீர்கள். இப்பொழுது முத்துக் கிருஷ்ணனையும் சேர்த்திருக்கிறீர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த குஜராத் கலவரக் குறிப்புகள் எனக்கு நினைவுக்கு வந்து போகிறது. அவர்கள் காசு வாங்கினால் மகிழ்ச்சிதான். அதே போல் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கினால் அதையும் அந்நிய சதி என்பீர்கள். காசு எங்கு வாங்கினார்கள் என்று கேட்க, அல்லது நிரூபிக்கவாவது உங்கள் வாசக படை வட்டங்களை பயன்படுத்துங்கள். அவர்களும் எவ்வளவு காலந்தான் துதிகளையும் பஜனைகளையும் பாடுவது. 

பத்தாயிரம் பக்கங்கள் எழுதினாலும் டால்ஸ்டாய்...தஸ்யாயேவ்ஸ்கி...அறம்...தரிசனம் என நீங்கள் முக்கினாலும் உங்களை அறியமால் உங்கள் வாயில் வருவது நொண்டிநாய் என்றுதானே அய்யா...உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும். காந்தியம் பற்றி அவரின் தரிசனங்கள் பற்றி நீங்கள் எழுதிய வரலாற்றுக் குப்பைகளை..அதோடு உங்களது கற்பனையின் சீழை என்னவென்பது. கலாமுக்கு காந்தியைத் தெரியும் சாவர்க்கரைத் தெரியாது. ஆனால் கலாமை விட அவர் கையிலேந்தி வாசிக்கும் பகவத் கீதையைப் பற்றி சாவர்க்கருக்கும் உங்களுக்கும் நிறையத் தெரியும். ஒரு முறை பகவத் கீதையின் நிழலில்தான் எழுத வந்ததாகக் கூறீனீர்கள். நல்லது அய்யா.

அ.மார்க்ஸ், அ.முத்து கிருஷ்ணன் இவர்கள் வாங்கிய காசோடு, காந்தி அவர்கள் எவரிடம் காசு வாங்கினார் என்பதையும், சாவர்க்கர் யாரிடம் காசு வாங்கினார் என்பதையும் வரலாற்றைத் திரந்து இந்துத்துவ அற அரிப்பில்லாது ஒரு முறை  எழுதுங்கள்.


அப்துல்கலாமை ஞானி என்று அழைப்பது இஸ்லாம் பற்றி பேசத்தானா....அறிய முடிகிறது ஜெயமோகன். இந்து மத யாத்திரையில் அத்வானி வந்த ரதத்தை ஓட்டியவன் ஒரு முஸ்லீம். இதையும் அறிந்து கொள்ளுங்கள். அந்த பெயர் தெரியாதவனுக்கும்... கலாமுக்கும் வேறு வித்தியாசங்கள் இல்லை. உங்களுக்கும்.  நாளுக்கு நாள் வெறி கூடும் உங்களது இஸ்லாமிய வெறுப்பை அறியமுடிகிறது.




* மேற்கண்ட குறிப்புகள் அ.மார்க்ஸ் எழுதியவையே வருடம் ஏப். 2003
அப்போதிருந்தே அ.மார்க்ஸ் காசு வாங்கியிருந்தால்...இந்நேரம்........

Thursday, September 15, 2011

தமிழர்....அரசு....தமிழகம்.......?


                                        


                             ஒரு மறுவாசிப்பு வேண்டி.........

புதிய வந்தேறியம்.

தமிழகத்திற்கு வாய்த்த அதிகார வகுப்பிலும்கூட இன்று தமிழரல்லாதார்மே பெரும்பான்மையா? மொழிவழியில் தமிழகத்தைக் கொந்திக் கூறாடி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், தமிழகத்தில் அரசு அதிகாரத்திலும் ஆட்சித் துறையிலுங்கூட தமிழரல்லாதோரே இன்னும் தனிக்கொற்றம் புரிந்து வருகின்றனர். 1995 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆளவந்தாராக விளங்கிய வந்தேறிகள் சிலரை அடியில் காண்க:*

                                            ஆட்சித் துறை இ..( I.A.S )

ஆர் வரதராசுலு..................................முதலமைச்சரின் செயலர்................தெலுங்கர்
ஆதிஷேஷையா..................ப.............முதலமைச்சரின் இணைச்செயலர்.....தெலுங்கர்
ஃழீலாப்பிரியா....................ப.............ஆளுனரின் செயலர்.......................தெலுங்கர்
அரிபாஷ்கர்.......................ப.............தலைமைச் செயலர்........................தெலுங்கர்
சி,இராமச்சந்திரன்..............................தொழில்துறை செயலர்...................மலையாளி
ஜி.இராமகிருஃழ்ணன்........இ...................போக்குவரத்து ஆணையர்....................தெலுங்கர்
எம்.தேவராஜ்...................................... நகராட்சி இயக்குனர்.....................படுகர்
சுந்தரதேவன்.....................ப..............தேர்தல் ஆணையர் செயலர்.............படுகர்


எம்.அகமது...............................................................................மலையாளி
பி,சி.சிரியாக்.............................................................................மலையாளி
லீலா நாயர்...............................................................................மலையாளி
சாந்தஃழீலா நாயர்......................................................................மலையாளி
கே.ஏ மாத்யூ.....................ப.....................................................மலையாளி
சூசன் மாத்யூ..................................................................................மலையாளி
கே.சந்திரசூடன்..................ப.....................................................மலையாளி
.பி.சோசம்மா...................ப.....................................................மலையாளி
மாதவன் நம்பியார்..............ப.....................................................மலையாளி
வே.மாதவன் நாயர்................ப.....................................................மலையாளி
டி.ஜேக்கப்.............................ப.....................................................மலையாளி
பிந்து மாதவன்................................................................................மலையாளி

வி.கே.ஜெயக்கொடி.............ப.....................................................தெலுங்கர்
ஆதிஷேஃசன்........................ப.....................................................தெலுங்கர்
வரபிரசாதராவ்...................ப....................................................தெலுங்கர்
ராம்மோகன்ராவ்................ப.....................................................தெலுங்கர்
ஜி..ராஜ்குமார்.....................ப.....................................................தெலுங்கர்
ஆர்.பாஷ்கரன்.......................ப.....................................................தெலுங்கர்
ஜே.டி.ஆச்சார்யாலு......................................................................தெலுங்கர்
ஜி.ரங்காராவ்....................ப......................................................தெலுங்கர்
பிரபாகர் ராவ்.................................................................................தெலுங்கர்
வி.கே.சுப்புராஜ்..............................................................................தெலுங்கர்
.வி.ஃழெட்டி...................ப.......................................................துளுவர்
எம்.பி.பிரானேஃழ்.................ப.......................................................கன்னடர்
புஜங்கராவ்...........................ப.......................................................வடவர்
எச்.எம் பாண்டே..................ப.......................................................வடவர்
ஆர்.சி.பாண்டா....................ப.......................................................வடவர்
கே.சௌத்ரி.........................ப.......................................................வடவர்
உஜாகர் சிங்........................ப................................................வடவர்
எஷ்.கே.உபாத்தியாயா.......ப................................................வடவர்
பிரிஜேஷ்வர் சிங்..................ப................................................வடவர்
சுவரண் சிங்...................... ..ப................................................வடவர்
நிர்மல் சிங் ஹிரா................ப................................................வடவர்
அனுராதா கட்டி..............................................................................வடவர்
அஜித் பட்டாச்சார்யா..........ப............................................................வடவர்
மோகன் பியாரே..............................................................................வடவர்
என்.பி.குப்தா........................ப.........................................................வடவர்
நரேஃழ் குப்தா..................ப................................................வடவர்
ராக்கேஃழ் குப்தாஷ்...........ப............................................................வடவர்
சமீர் வியாஷ்......................................................................................வடவர்
ஹன்ஷ்ராஜ் வர்மா............................................................................வடவர்
குத்சியா காந்தி.............................................................................வடவர்
சி.கே.கரியாலி..............................................................................வடவர்
ஜோர் சிங் ஃழயிம்..........................................................................வடவர்
சத்பதி.........................................................................................வடவர்
தீபக் ஜெயின்................................................................................வடவர்
லதிகா படால்கர்............................................................................வடவர்
முனீர் ஹோடா.................ப...........................................................வடவர்
ஐஷ்பீர் சிங் பஜாஜ்............ப..................................................வடவர்
வால் ராவ்னா சைலோ.......ப.............................................................வடவர்
ரேமந்தகுமார் சின்ஃகா....................................................................வடவர்
சன்வத் ராம்..................................................................................வடவர்
ரவி வினய் ஜா................................................................................வடவர்
பவன் டெப்னா...............................................................................வடவர்
பிரவீண்குமார்.................................................................................வடவர்
ரமேஃழ்ராம் மிஷ்ரா..........................................................................வடவர்
தேபேந்திர நாத் சாரங்கி..................................................................வடவர்
அம்புஜ் சர்மா.................................................................................வடவர்
சசி சேகர்.....................................................................................வடவர்
பிரிஜ் கிஃழோர் பிரசாத்....................................................................வடவர்
ராஜிவ் ரஞ்சன்.................ப...........................................................வடவர்






                                             காவல் துறை - .கா.(I.P.S)




கே.கே ராஜசேகர நாயர்......கா.ப...........காவல் தலைமை இயக்குனர்............மலையாளி
சர்மா...............................கா.ப...........கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
ஆர்.சி.பந்த்.......................கா.ப............கூடுதல் காவல் இயக்குனர்..............வடவர்
பெருமாள்சாமி...................கா.ப...........காவல்துறைத் தலைவர்(குற்றம்)...........தெலுங்கர்
குமாரசாமி........................கா.ப............காவல்துறைத் தலைவர்...................தெலுங்கர்
சந்திர கிழோர்...................கா.ப............காவல்துறைத் தலைவர் (சிறை)...........வடவர்
முகர்ஜி.............................கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
முன்ஃழினி........................,கா.ப............காவல்துறைத் தலைவர்...................வடவர்
பி.ஆர் தாப்பா....................கா.ப.............காவல்துறைத் தலைவர்...................வடவர்
என். பாலச் சந்திரன்...........கா.ப.............காவல்துறைத் தலைவர்........................மலையாளி
விஜயகுமார்......................கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........மலையாளி
பாலசந்திரன்....................கா.ப.............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
இராதா கிருஃழ்ண ராஜா.....கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
ராமராஜன்........................கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
கே.வி.எஷ் மூர்த்தி..............கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........தெலுங்கர்
லத்திகா சரண்..................கா.ப............காவல் வட்டத் துணைத்தலைவர்........வடவர் 


விபாகர் சர்மா...................கா.ப.................................................வடவர்
அசோக் ஜிண்டா................கா.ப.................................................வடவர்
சஞ்சை அரோரா...............கா.ப..................................................வடவர்
ஜாங்கிட்.........................கா.ப..................................................வடவர்
அஜிஷ் பாங்ரா..................கா.ப..................................................வடவர்
ஆர்.என்.சவானி................கா.ப..................................................வடவர்
ரவீந்திரநாத்.....................கா.ப..................................................மலையாளி
பி.பாஷ்கர்........................கா.ப..................................................தெலுங்கர்
திலகவதி.........................கா.ப..................................................தெலுங்கர்
ரஞ்சித் சிங்......................கா.ப..................................................சௌராட்டிரர்



                                                           வழக்குமன்றத் துறை

கே..சுவாமி......................உயர்வழக்குமன்றத் தலைமை நடுவர்..............கன்னடர்
வெங்கடசாமி.....................உயர் வழக்குமன்ற நடுவர்............................தெலுங்கர்
ராமானுஜம்........................நடுவர்....................................................தெலுங்கர்
வி.ராமசாமி........................நடுவர்....................................................தெலுங்கர்
ராஜு......................................நடுவர்....................................................தெலுங்கர்
ஶ்ரீ ராமுலு.........................நடுவர்.....................................................தெலுங்கர்
சிவப்பா...................................நடுவர்.....................................................கன்னடர்
சிவராஜ் பாட்டீல்....................நடுவர்.....................................................கன்னடர்
அப்துல் ஹாதி........................நடுவர்.....................................................உருது
அலி அகமது...........................நடுவர்.....................................................உருது
சுப்பிரமணி.............................நடுவர்.....................................................மலையாளி
வெங்கிடாச்சலம்...............நடுவர்......................................................தெலுங்கர்
சீனிவாசன்.......................நடுவர்......................................................தெலுங்கர்
ஜெயராம் சவுதா....................நடுவர்......................................................கன்னடர்
ஜெய்சிம்ம பாபு.................நடுவர்......................................................கன்னடர்


இந்த அழகில் தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் செய்வது எங்கனம் ஆகும்?






நூல் : தமிழின மீட்சி
ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்; குணா

தமிழக ஆய்வரண்
வெங்காலூர். 1995.

இதன் நீட்சியாக வாசிக்க.....

குணா
பாசிசத்தின் தமிழ் வடிவம்.
- அ.மார்க்ஸ்.
கோ.கேசவன்.

Wednesday, September 14, 2011

சென்னகரம்பட்டி கொலை வழக்கு.




" நீதி நம்பக்கம் இருக்கும்போது, நாம் எப்படித் தோற்போம் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் போராட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக இருக்கிறது. இந்தப் போராட்டம் முழுமையாக உணர்வு பூர்வமானது. அதில் துளி அளவும் சுயநலம் இல்லை. ஏனெனில், நமது போராட்டம் சொத்துக்கானதோ, அதிகாரத்திற்கானதோ அன்று.நமது போராட்டம் விடுதலைக்கானது. இந்த சமூக அமைப்பினால் ஒடுக்கவும் சிதைக்கவும் பட்ட மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டமே நம்முடையது. உங்களுக்கான எனது இறுதி அறிவுரை இதுவே; கற்பி,போராடு ஒன்றுசேர்"

அம்பேத்கர்.

சென்னகரம்பட்டி கொலை வழக்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும்பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிழந்த அதே சாலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு நூறு மீட்டர் தொலைவில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையைச் செய்த அதே கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப் போக்கையும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றின் சாதியமனோபாவத்தை புரிந்து கொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் ( same plot) மேலவளவு கொலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

ஏறத்தாழ தலித் அமைப்புகள் தலித் கொலை நிகழ்வுகளையொட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களோடு நிறுத்திக்கொள்ளும் நிலையில், குறைந்தபட்ச நீதிக்கான எந்த உத்தரவாதமுமின்றி அரசின் கருணையிலேயே நடந்து நீர்த்துப் போய்விடுகின்றன.

( பக்கம் 5,6 )

அரசு தரப்பு சாட்சி எண் ; 10

பெயர்; டாக்டர்.லதா கணேசன்
/பெ: கணேசன்
கிராமம்: மேஜர்.மதுரை
சாதி: இந்து பிள்ளைமார்.
வயது:50 ஆண்டுகள்
நாள்: 28.3.2008

முதல்விசாரணை : அரசு தரப்பில்


நான் தற்போது மேலூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறேன். 1992ம் ஆண்டு அரசு மருத்துவமனை மேலூரில் உதவி மருத்துவராக பணி புரிந்தேன். 6.7.92ம் தேதி பாண்டி கணேசன் என்பவர் காவலர் 566 என்பவர் கொடுத்த வேண்டுகோளை பெற்று அன்று காலை 10.30 மணிக்கு ஒரு ஆண் அம்மாவாசி என்பவரின் பிரேதத்தை சடலக்கூறாய்வு செய்தேன். மேற்படி மேலூர் காவல் நிலைய சம்பந்தப்பட்டது. மேற்படி பிரேதத்தில் ஒரு கருப்பு மச்சம் வலது மார்பகத்திற்கு கீழ் காணப்பட்டது. மற்றொரு மச்சம் தொப்புளுக்கு கீழ் காணப்பட்டது. மேற்படி இறந்து போன நபருக்கு வயது சுமார் 50 வயதிருக்கும். மேலூர் காவல் நிலைய குற்ற எண்.468/92 வழக்கு சம்பந்தப்பட்ட பிரேதம் மேற்படி ஆரோக்கியமான பிணம், கண்கள் திறந்திருந்தது. நாக்கு வாய்க்குள் இருந்தது.8,8/32 இருந்தது. முகவாய் இருக்கமாக இருந்தது. பிணவிறைப்பு தன்மை கைகால்களில் காணப்பட்டது. அவர் உடலில் கீழ்க்கண்ட வெளிக்காயங்கள் காணப்பட்டது.


1. 18செ.மீx6செ.மீx 6 செ.மீ அளவில் ஒரு வெட்டுக்காயம் கழுத்தின் முன்பகுதியில் காணப்பட்டது. அதில் கழுத்தின் சதைகள் மற்றும் மூச்சுக் குழாய் உணவு குழாய் வெட்டப்பட்டிருந்தது. செர்விகல் வெஷ்டிபுலா தைராய்டு கார்ட்டிலேஜ் - ம் வெளியே தெரிந்தது.

2. இடது கன்னத்தில் 10செ.மீ x 2செ.மீ x 2செ.மீ அளவில் வெட்டுக்காயம் காணப்பட்டது.


3. இடது பக்க பின் தலையில் டெம்பரல் ரிஜின் பகுதியில் ஒரு பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அது கபாலத்தின் அடிப்பாகம் வரையில் நீண்டிருந்தது. இடது காது வழியாக நீண்டிருந்தது.20x6x6 செ.மீ அளவில் காணப்பட்டது.

4. கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு வெட்டுக்காயம் 15 x 5 x5செ.மீ அளவில் காணப்பட்டது. அது இடது பக்க தாடை எலும்பு வரை நீண்டிருந்தது.

5. ஒரு வெட்டுக்காயம் 5x2x2 செ.மீ அளவில் பின்பக்கத்த்ஹில் (ஆர்சிபிட்டல்) காணப்பட்டது. அதே இடத்தில் மற்றொரு வெட்டுக்காயம் 3x2x1 செ.மீ அளவில் காணப்பட்டது. வஒரு வெட்டுக்காயம் பிராமன்ஷ் மேல் காணப்பட்டது. மற்றொன்று கீழ் காணப்பட்டது.


6. 5வது காயத்திற்கு கீழ் 6வது காயம் காணப்பட்டது.

7. சிதைந்த காயம் ஒன்று தோள்பட்டையிந் இன்புறம் இடது பக்க தோள்பட்டையில் காணப்பட்டது.3x2x1செ.மீ அளவில் இருந்தது.

8. மற்றொரு வெட்டுக்காயம் 6x4x2செ.மீ அளவில் வலது காதின் கீழ் காணப்பட்டது.

9. தோள்பட்டை மார்ஜினில் எலும்பு எல்லையில் 3x2x1செ.மீ அளவில் ஒரு சிதைந்த காயம் காணப்பட்டது.

10. வலது சுண்டு விரலில் நுனிப்பகுதி காணப்படவில்லை.


பிரேத உட்புற பரிசோதனை செய்தபோது

1. கேரோடிட் ஆர்ட்டிரேட் இரண்டு பக்கத்திலும் காணப்படவில்லை. அதன் கீழ் பகுதி வெட்டப்பட்டு வெளிப்புறமாக தெரிந்தது. செர்விகல் வெஷ்டிபுலா வெளியே தெரிந்தது.

2. தோரா க்க்ஷ் நுரையிரல் வெளிறி காணப்பட்டது. இருதயம் வெளிறி இருந்தது. இருதயத்திந் அறைகள் காலியாக இருந்தது.

3. வயிற்றில் சுமார் 200. மி.லி அளவில் சரியாக ஜீரணம் ஆகாத உணவு காணப்பட்டது. பகுதியாக ஜீரணித்த உணவு.

4. சிறுகுடல் காற்றில் உப்பி காணப்பட்டது. சிறு நீர் பையில் நீர் இல்லை. காலியாக இருந்தது.

5. லேரின்க்ஷ், கிலாட்டிஷ், ஒரு பகுதி காணப்படவில்லை.

6 தைராய்டு கார்ட்லிக்ஷ் இருந்தது. ஹைராய்டு எலும்பு காணவில்லை. கணையம் கல்லீரல் வெளிறி காணப்பட்டது.

7. இடது பக்க முன் மண்டை எலும்பு உடைந்து இருந்தது.டெம்பரல் எலும்பு. முன்பக்க மண்டை எலும்பு இடதுபக்கம் உடைந்து இருந்தது.மூளையில் எவ்வித காயமும் இல்லை.அது வெளிறி காணப்பட்டது.

மேற்படி நபர் அவருக்கு ஏற்பட்ட உயிர் காக்கும் உறுப்புக்களில் ஏற்பட்ட காயத்தினாலும், அதனல் ஏற்பட்ட ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியினால் பிரேத பரிசோதனைக்கு முன் 10லிருந்து 11மணி நேரத்திற்கு முன்பாக இறந்திருக்கக் கூடும் என கருத்து தெரிவித்து பிரேத பரிசோதனை சான்று அ.சா..10 வழங்கினேன்.

( பக்கம் 117, 118)

நூல்: சென்னகரம்பட்டி கொலை வழ க்கு.
தொகுப்பு: பொ.இரத்தினம்( வழக்குரைஞர்)
விடியல் பதிப்பகம்
புத்தக வெளியீட்டகம்.




சாதி, தன் கருத்துக்களால் காவு வாங்கிய ஒரு உயிரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் மேற்கண்டது. தலித்துக்கள் ஆதிக்க சாதியிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாது அரசிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில்தான் சாதியம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை அரசே ஊதிப் பற்ற வைக்கும்போது, மேற்கண்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள்தான் இனி ஆளும் அரசின் சட்டப் புத்தகங்களாய் இருக்க முடியும்.


பரமக்குடி.........?



“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”

“கவிதையைவிட மோசமானது வேறொன்றும்  இல்லை”   ரூமி     வ சு மி த் ர      “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...