Thursday, August 11, 2016

புத்தரும் அவரது தம்மமும் – அம்பேத்கர் - சில கேள்விகளை முன்வைத்து...




இந்த நூலைப் படிக்காதவர்களான முன்னாள் கவிஞர்களும், முன்னாள் ஆய்வாளார்களும்  சாதி ஒழிப்பு நூலையும் படிக்கவும் போவதில்லை என்பது அவர்களின் விமர்சனப்பூர்வமான (படிக்காமல் பேசுவது) அணுகுமுறைகள் நன்றாகக் காட்டுகிறது.


புத்தரும் அவர் தம்மமும் நூல் குறித்து இதுவரை ஆராய்ச்சிப் பூர்வமாக இவர்கள் எழுதிய, அல்லது வேறு யாரேனும் எழுதிய கட்டுரைகளை முன் வைத்து நகர்வதன் மூலம் வாசிப்பவர்களுக்கு ஒரு வழியைக் காட்டலாம். இவையெல்லாம் என் வேண்டுகோள்.

பூக்கோ, தெரிதா, சார்த்தர் எழுதிய நூல்களை மேற்கோள்களாகச் சுரண்டி இட்டது போல், அம்பேத்கரையும் சுரண்டி எழுதி தங்களது, அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் யாருக்கு என்ன பயன் இருக்க முடியும்?


புத்தரை ஒரு வாசகச் சுவாராசியத்திற்காக முன்வைக்கும் இவர்கள், பின்நவீனத்துவம், குடி, கூட்டுக்குடி, அறம் சார்ந்த வாழ்க்கைமுறைகள், குறித்த தங்களது கலக வாழ்க்கையை மேல்தள  உரையாடல்களாக நியாயப்படுத்திப் பேசியதும், எழுதி வந்ததும் ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


எனக்குத் தெரிந்து பௌத்த இயல்களை முன்வைத்துப் பேசிய எவரையும் இவர்கள் படிக்கவில்லை என்பதும் வெளிச்சமாகிறது.

அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் நூலுக்கு தமிழில் வந்த ஆய்வுப் பூர்வமான விமர்சனங்களையும்,  அல்லது ஒரே ஒரு கட்டுரையையாவது, இங்கு சுட்டுவதன் மூலம் பௌத்தம் குறித்து நாம் விவாதிக்கலாம் நண்பர்களே.


மேலும் சில  கேள்விகள்;

1.மார்க்சியத்தைப் பெருங்கதையாடல் என்றவர்கள் பௌத்தத்தை பெருங்கதையாடல் எனச் சொல்லமுடியுமா? முடியாதென்றால் எப்படி. முடியுமென்றால் விளக்கலாம்.

2அம்பேத்கர் பின்நவீனத்துக்கு முன்னோடியானது எப்போது?

3.அம்பேத்கர் புத்தரும் அவரது தம்மமும் நூலை எழுதவதற்கு ஆதாரங்களாக உள்ள நூல்கள் எவை.?

4.மறுபிறப்பை அம்பேத்கர் நம்புவதாக சொல்லியிருக்கிறார். இதன் விளக்கத்தை, பின்நவீன வெளிச்சத்திலோ, அல்லது கவிதை முறையில் கூட விளக்கலாம்.( பதிலுக்கு அதே முறைகளில் விவாதமும் அமையும் )

5.பௌத்தத்தின் இன்றைய பெறுமதி என்ன?

6.புத்தரா கார்ல் மார்க்ஸா கட்டுரையில், மார்க்சியம் சம்பந்தமாக அவர் ஆய்வு செய்த நூல்கள் எவை. எவை.?

7.புத்தர் தன் தந்தையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடாதீர்கள் என்ற கூற்று பௌத்த தத்துவ இயல்களில் எங்கு இருக்கிறது. அல்லது அனுமானமா?

8.கடன்பட்டவரையும், சிப்பாய்களையும் மதத்தில் இணைத்துக்கொள்ள தடைவிதித்ததன் பின் புலம் என்ன?

9.பார்ப்பனியம் அரசுடைமையாளர்களை சார்ந்து வளர்ந்தது போல், பௌத்தம் வளர்ந்தது எதனால்? அதன் பின்விளைவுகள் என்ன?

10,“மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழகப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது. –பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று _ இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக்கொள்கிறார்கள்.” இது அம்பேத்கர் கூறியது. 

இது குறித்து உங்களது விவாதங்கள் என்ன?

11. புத்தரின் கையில் ஸ்வஸ்திக் முத்திரை இருந்தது என அம்பேத்கர் தன் நூலில் குறிப்பிடுகிறார். இதுகுறித்த ஆராய்ச்சிகள் என்ன?


12. காலாவதியான சிந்தாந்தம் என்று ஒன்றுண்டா, அப்படி காலாவதியானதன் தொடர்ச்சியாக எந்த காலாவதியாக சிந்தாந்தமும் தோன்றியதில்லையா?

13. படிக்காமல் ஒரு நூலை   ‘பீ’ யிக்கு ஒப்பச் சொல்வதன் மூலம், இவர்களின் எந்த நூலையும் படிக்காத ஒருவன் அட்டையை மட்டும் பார்த்துவிட்டு  இவை அனைத்தையும்  ‘பீ’ என்று சொல்ல வாய்ப்பளிப்பார்களா? 


நினைவூட்டல் ; 500 பக்க அளவுக்கு இழுத்துப் போகும் பெரும் கேள்விகளும் உண்டு.


                   

“ கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் 

அல்ல என்று நேருக்கு நேர் வாதிடத் துணியும் 

கலகக்காரர்களுக்கு இந்த உலகம் 

கடமைப்பட்டுள்ளது” – 


அம்பேத்கர்.









No comments:

Post a Comment

இடதுசாரிகளின் கவனத்திற்கு...

      “ இடது ”  இதழ் வெளியிடாத கடிதம். (ஆகஸ்டு 9- 2017)    (இடது ’  இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி ,  இடது இதழ் வெளியிடாத ...