Wednesday, February 24, 2016
Sunday, February 14, 2016
ஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலாம்......
என்ன
செய்யலாம்
கவிஞனை
ஆற்றாமையை
ஒப்பற்ற
துரோகத்தை
துரோகத்தில்
ஊறித்ததும்பும் புன்னகையை
கனவுகளின்
வாய்க்காலை
நஞ்சூறி
விரியும் வெண்சிறகை
எடைகூடிய
சொற்களைச் சுமக்கும்
கனத்த
இதயத்தை
கண்ணீரின்
வெதுவெதுப்பை
இயலாமையின்
சாறை
கைவிடப்பட்டவனின்
இறுதிச்சடங்கை
கவிஞன்
வானமும்
வெளியும்
சூன்யமும்
இல்லாத
அகதி
தலைச்சிறந்த
அயோக்கியன்
அனாதை
வழியிழந்த
பேதமறியா
விரல்களால்
நாளும்
எழுதிச்செல்கிறான்
பறவைகளே
நிதானமாயிருங்கள்
வயல்வெளிகளில்
சொற்களை
விதைக்கிறார்கள்
ஒரு
பிரிவை எழுத விரும்பாத விரல்களை என்ன செய்யலாம்
அறிவீர்கள்
நண்பர்களே
பிரிவின் உப்பும்
தகிக்கும்
காழ்ப்பும்
பிரிவின்
எரிப்பும்
சொல்லின்
முடிவும்
இறுகி
உடைக்க
முடியா உன்மத்தமடைகிறது
புணர்ச்சியில்
வெம்பிச்சரியும் உடல்கள் கவிஞனுடையதில்லை
களைப்பு
அவன் வரிகளைத் தீண்டுவதில்லை
விடை
பெற்ற முத்தங்களை
முத்தகங்களீந்த
வரியுதடுகளை
கனைக்கும்
குதிரைகளின் கால் குளம்புகளை
கவிஞன்
சொற்களாக்குகிறான்
ஒரு
கூர் நுனித் தனத்தை
முரசென
அறிவிக்கும்
கவிஞனின்
கரத்தை
எப்படித்
துண்டிக்கலாம்
வார்த்தைகளை
இழந்த மௌனத்தை
உதட்டில்
பீய்ச்சியடிப்பவனை
குருதியை
யாசகம் கேட்பவனை
மண்டையோடுகளை
காய்ந்த உதடுகளால்
அரவணைத்து
முத்தமிடுபவனை
கவிஞனை
என்ன
செய்யலாம்
விரல்களை
கரத்தை
கவிஞனை
கவிதையை
அவன்
விரும்பாத நிதானத்தை
நிதானத்தின்
பதட்டத்தை
என்ன
செய்யலாம்
என்ன
செய்யலாம்
ஒரு
கவிஞனின் பிணத்தின் முன் சிறுநீர் பெய்யலாம்
அல்லது
பதிலுக்கு
அவனது கவிதையை வாசிக்கலாம்
கவிதையை
முடிக்கும் போது
பெய்யும்
சிறுநீரை நிறுத்திவிட்டு
கண்களில்
வரவழைக்கலாம்
கனங்கூடிய
உப்பை.
Wednesday, February 3, 2016
காமத்துறைவனின் கடுஞ்சொல் கேளீர்...
நிச்சலனம் கிழித்தயிருள் மேவ
பித்துப்பிதிருடைத்துத் உடல்கதவைச்
சிதறடித்துத்
திறக்கும் பெருந்தாழ்ப்பாள்
கொன்றழித்து புதிருறங்கும் மயிர்
வனம்
சித்தம்தனை சிதறவிடும் பைத்தியக்
கிளிக் கூச்சல்
கண்களைக்கீறி வளரும் பயிர்விளைச்சல்
முப்போகம் விளைவிக்கும் முதற்சொல்
விரல்களை துளையிடும் ஊதல்
ஊழிச்சொல்
விதைத்த செந்நெல்
நகவிழிசிவந்து
செங்குருதிபாயும் பெரியாழின் கூர்
நரம்பு
மிரளும் கண்பாவை
சுவேதன ஒளிப்பரவல்
கைக்கும் வியர்வையில்
துவர்த்தல் வாடை
கிளர்ந்தெழும் காழ்த்தல்
திரளும் தித்தித்தல்
கறுகும் கார்த்தல்
இறுதியில் கசியும்
சதைத் துவர்த்தல்
சங்கதனைப் புதைக்கும் வெண்சுடலை
சூதனின் இறுதிச்சொல்
முட்டும் முடிவுறா தசாங்கம்
நித்திலக் குழியூரும் வெண்நஞ்சு
தாவரயோனிமீதேரும் பசலைக்கொடி
பச்சிளம் சிசு
பெருங்களிற்றுவட்டமேங்கும்
எரியின் வட்டம்
புகைச்சுருள் விசனம்
நாடோடி துயிலும் ஆலத்தின் வேர்
இறுகும் கண்ணின் கைப்பு
யாளியுறங்கும் நிசித்தாலாட்டு
பேய்களைக்கொன்று குலவையிடும்
உயிர்ச் சொல்
தாமிரபரணி
ததாகயோனி
சிற்றெழில் உறையும் வதனம்
சொல்
அஃது பெரும்பிழை
உயிர்
இதுவும் அது
நீலகேசி
தாம்பூலவல்லி
சக்கரவாளக்கோட்டம்
கடவுள் மறுத்த சொல்
காமம் பெருந்தீனி
தெறிக்கும் மூளைச் சிதறல்
நிணமொழுகும் கனா
நான்
நீ
தலைகீழ் யோனி
விழி அவி.
ஆகச்சிறந்த புணர்ச்சியை
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணர வேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம்
கைகள்....
சம்போ மகா தேவா
சம போகம்
அஃதே
சம்போகம்.....
Friday, January 1, 2016
ஆம்ரபாலி…
· நடனம். திசைகளைப் புணரும் ஆவேசம். கைகளில் முத்திரைகள் காற்றைக் கிழித்துக் கலைக்கிறது. ஆம்ரா உனது தாபங்களை உடலின் எந்தப் பகுதியில் சேகரம் செய்கிறாய் கண்ணே…
· ததாகரே உதடுகள் பற்றிய பிரக்ஞை எனக்கெதுவுமில்லை.
1. கனவு கண்டுகொண்டிருந்தேன். இரண்டு கரும்பாதங்கள்
பசிய மிருகம் போல் எனைச் சுற்றி சுழன்றதை.
கண்கள் அசைவுகளை வீசிக்கொண்டிருந்தன.
மெல்ல என்னுடல் சிறகானது. வசீகரிக்கும்
இசை எதுவுமின்றி மண்ணில் பாதங்களால் இசையொன்றை எழுப்பிக்கொண்டிருந்தாள்.
2.கரகரத்த மணலோசை என் செவிகளில் கூரிய நகங்களாய் மனதாபத்தைப்
பேசிக்கொண்டிருந்தது. பச்சை நிறத்தோடு பிட்சுகளின்
கண்கள் மௌனமாய் நடனத்தை விழியசைவின்றி மொய்த்துக்கொண்டிருந்தது. கப்பறையை எவர் கரமும் ஆழப்பற்றவில்லை. தண்ணீரில்
பிதப்பதைப் போல் அசைந்துகொண்டிருந்தது.
3. ஆம்ரா….இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்.
தன்னுடலை நடனமென பிச்சையிடுகிறாளா என்ன… இதை எந்தக் கப்பறையில் நான் வாங்க வேண்டும்…விழிகளே
திறக்கப்பட்ட கப்பறைத்தானோ… நான் வேண்டி வந்ததும் இதுதானா,
4.
என் விழிகளில் தாவரப்பசுமை குடியேறிக்
கொண்டிருக்கிறது. இனி அது மிருக வாசனை பழக
ஆரம்பிக்கும். செவிகளை விடைத்தபடி அது என்
மடியில் அமர தருணம் பார்த்தலைகிறது. அதன் வளர்ந்த
காதுகள் என் விரல்களின் ஸ்பரிசத்தை உணர அலைபாய்ந்து துடிக்கும் வெம்மை எனக்குப் புரிகிறது.
5.
ஆம்ரபாலி…. எத்தனை அற்புதமான பெயர்
6.
சாம்பல் படிந்த பாதங்களோடு உன் முன்னே
அமர்ந்திருப்பவனின் தற்பொழுதய பெயர் புத்தன்.
நடுங்கும் உதடுங்களால் இப்பெயரை உச்சரிக்கும் முகத்தில் தெரியும் பரவசத்தில்
நான் குளிர்காய்ந்திருக்கிறேன். ஆனால் பெரும்
மரமொன்று சாய்வதையொத்து என்னுள் எதுவோ தயங்கிச் சரிகிறது.
7. நடனம், அந்தரத்தில் காலுயர்த்தி முடிந்தது. என் சுவாசத்தின் மத்தியில் இளஞ்சூடாய் வழிவது… குருதியா…
இல்லையே… குருதி மணத்தையொத்து வேறெதுவோ… மணக்கிறதே… அது ஆம்ராவின் வியர்வைத் துளி.
8. நடனத்தை தன்னுடலிலிருந்து பிரித்தவள்
திரவத்தை சாட்சியாக்கி தன்னை பிழிந்தெடுத்திருக்கிறாள்.
9. நடனம் முடிந்துவிட்டதா என்ற பெரும் கேள்வி அனைவரின்
கண்களையும், அதன் புலன்களையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பதை உணர்ந்தேன். பிட்சுகளின் அமைதி என் காதை செவிடாக்கியது. துணுக்குற்று
நிமிர்கிறேன். என்னை நானே கேள்வி கேட்கும்
தருணங்களில் பதிலுக்காய், அதன் கூரிய சொற்களுக்காய் கண்களை நிலைகுத்த விட்டிருக்கிறேன். இனி சீடர்கள் நடனத்தின் தர்மம் என்னவெனக் கேட்கும்போது
என் தனிமை கேட்பாரற்று சூறையாடப்படும்.
10. ஆம்ரா
பாதத்தருகே அமர்ந்தாள். ஆனந்தன் பார்வையை நிமிர்த்த ஆம்ராவின் நடனத்தோழிகள் விருந்து
மண்டபம் தயாராய் இருக்கிறது ஆனந்தரே என்க ஆனந்தர் சோதரர்களே நிதானமாய்ச் செல்லலாம்
என்க காலுக்குக் கீழிருந்த மணற்பிரதேசம் இளம் வெயில் கூச வெளியே தெரிந்தது.
11. ஆனந்தன்
அமைதியாய் நின்றிருந்தான்.
12. வேண்டாத
தனிமையை எல்லாரும் கையளித்துச் சென்ற பின், ஆனந்தன் நிழலையும்., என் முன்னால் இருக்கும்
ஆம்ப்ராவின் குனிந்த தலையையும் கண்டேன்.
13. பெருங்காட்டின்
நடுவே யானைகள் நடந்து சென்ற ஒற்றைத் தடம் போல உன் வகிடு எவ்வளவு நேராகப் பிரிந்து செல்கிறது
ஆம்ரா..
14. ஆம்ரா நிமிரவேயில்லை. புன்னகையுடன் கேட்டேன். சொல்
ஆம்ரா கருப்பை பற்றிய உனது சந்தேகங்களை…என்க ஆம்ரா திகைப்பது அவளது உடல் அசைவில் தெரிந்தது.
நல்லது. எதுவோ இங்கு நடக்கப் போகிறது அல்லது சிதையப் போகிறது
15. இருப்பினும் கண்களைத் தாழ்த்தியபடி கேட்டேன். சொல்
ஆம்ரா கருப்பையின் லட்சியங்கள் குறித்த தர்மம் அறியாதவள்தானே நீ…
16. ஆம்ரா மெதுவாய் அழைத்தாள் சித்தார்த்தரே… குருதி
சட்டென உள்ளங்கைக்கு ஏற ஆனந்தன் பதட்டமடைந்தான். அவனுக்கு மிக அணுக்கமான புன்னகயோடு
சொன்னாள். ஓடும் குருதியில் வாள் இன்னும் மிதக்கிறதா…நான் சொன்னேன் ஆனந்தா நீ காத்திரு.
மௌனமாய் என் கண்களைப் பார்த்தவன் நகர்ந்து சென்றான்.
17. மிகமெதுவாய்
தலையை உயர்த்தியவள் புன்னகைத்தாள்.
18.மௌனம்
கொள் சித்தார்த்தனே….இது கேள்…ஆத்மாவின் அடிவயிற்றுக்கேவலை பசியென உணர்ந்து கப்பர்றையை
உடல் முன் நீட்டாதே…கேள் இதை.
19. இந்திரிய
வாசத்தால் கருப்பை பூரிப்படைவதில்லை
20. கருப்பையை
நிழல் தீண்டுவதில்லை
21. கருப்பைக்கு
ஸ்பரிசம் கிடையாது.
22. கருப்பைக்கு
விழிகள் உண்டு.
23. கருப்பையை
வார்த்தைகளால் நிறைக்க முடியாது
24. எவர்
வருகை வேண்டியும் கருப்பை காத்திருப்பதில்லை.
25. கருப்பை பற்றிய புரிதல்களை கருப்பை அறிவதில்லை.
26. கருப்பை பற்றிய உன் வார்த்தைகல் உண்மையல்ல, அது கருப்பை
பற்றிய உன் கற்பனை.
27. இறுதியாக கருப்பைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை
ஏனெனில் உனக்குக் கருப்பை இல்லை.
28. ஆம்ராவின்
நாவில் அசையும் சொற்களை கவனித்தபடியே மனம் அலைந்து கொண்டிருந்தது. தகிக்கும் பதில்களை
சதா காலமும் என் சொற்கள் கண்டலைந்தபடியே வந்திருக்கின்றன. இம்முறை பதில் சொல்ல மட்டுமல்ல… என் மௌனமும் பொருளற்றுப்
போனது, ஆம்ராவின் நாவு சிவந்த குருவாளென வெட்டவெளியை சாட்சியாய் வைத்து எனதறியாமையைக்
கிழிக்கிறது. நடந்தே தீரவேண்டும்.
29. ஆம்ரா தரையை அறைந்து ஓங்கி உறுமினாள். மாயா….
30. எனதுடலைக்
குரூரமாய் வதைக்க நினைக்கிறாள் ஆம்ரா. அவள் விழிகளை கரும் பாவைகள் நிறைத்தபடியே இருந்தது.
எனக்கோ விழிகளில் செவிகள் பூக்கத் தொடங்கிறது. இனி என் அத்தனை புலன்களின் தனிமையையும்,
ஆம்ரா வார்த்தைகளால் விதைத்து. அர்த்தங்களை அறுவடை செய்வாள்.
நன்றி’
கொம்பு
இதழ்-4
Wednesday, December 16, 2015
அல்குல்
அல்குல் ; பெண்ணின்
இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு
வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ?
அல்= இல்லாமல்
போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல்.
(அல்குல் இல்லாதாரே
அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல்
இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள்.
கூதி ; அல்குலுக்கு
வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம்.
புண்டை;
பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண்
காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு.
புண் –பெண்,
பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள்.
அல்குல், வ்ல்வா
( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச்
சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள்.
பழம் ஆங்கிலத்தில்
கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக்
குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary
of slang..vol 2)
Cu V e the
என்பதன் பொருள் ஏற்கனவே இருக்கும் அகழியில் தோண்டப்படும் மற்ருமொரு பள்ளம். இச்சொற்கள்
கூதிக்கு ஒலி உறவும், பொருள் உறவும் உடையன, அல்குலைத் தாண்டி ழ்ழப்படும் யோனியைக் குறிப்பதாம்
அது.
அல்குலுக்கு
எகிப்திய மொழி கா-ட் kat. ஆங்கிலத்தில் கன்ட், ஜெர்மன் குண்டே டச்சுக்குண்டே பழம் பிரசியன்
குண்டே, பழம் நார்ஸ் குண்டே எகிப்திய சொல்லுக்கு அம்மா பெண் பெண் உறுப்பு என்று பல
பொருள். இந்த ka-t, cunt ஆகி இருக்கலாம்.
ஜெர்மன் மற்றும்
வட அய்ரோப்பிய மொழிகளில் வழங்கும் குண்டே, குண்டா ஆகியவை புண்டை என்னும் சொல்லாக இருக்கலாம்..
அதைவிடவும் அதற்கு இன்னும் நெருக்கமான மேலைச் சொல் தற்கால ஆங்கிலத்தின் புடெண்டா(
pundenta) பன்மை புடெண்டம்.
( pudendum)
இந்தச் சொற்கள்
பொதுவாய் அல்குலைக் குறிப்பன என்றாலும் அதை வெளிப்படுத்துவதில் தனித்தனிப்பொருள் தருவன.
அல்குல் இது
புலவர் கையாள்வது.
கூதி யோனி
– vegina இவை அல்குலின் ஆழத்தை விளக்குவதாம். அதற்கு உறை என்றும் பெயர். யோனியும் வெஜைனாவும்
yoni- vegina) ஒலி உறவுடையன.
இப்படி 58 பக்கங்களில்
நீள்கிறது ஆராய்ச்சி.
படிக்க;
அல்குல்-
தமிழ்நாடன். காவ்யா பதிப்பகம்.
அதற்கு கி.ரா.
ஒரு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
சிற்றுரையில்
நடிகன் எஸ் .எம் ராஜா. அப்புத்தகத்தை என் இல்லத்தார் படிக்கச் செய்வேன், தேவைப்படும்
எனில் விளக்குவேன். என்று நேர்மையாகவும் பதிந்துள்ளார்.
கொற்றவையின்
கட்டுரை குறித்து வந்த விமர்சனங்களில் எனக்கு சில எனக்கு உயர் முற்போக்கு அறிவைத் தந்தன.
முற்போக்குப் பெண்ணியம் என்பதில் தொடங்கி புண்டைப் பெண்ணியம் வரை அது நீண்டது. வாழ்த்துக்கள்.
இப்படித்தான் பல பெண்ணியங்கள் உள்ளது. ஆனால் சகலரும் சொன்னது குடும்பப் பெண்கள் அவர்களை
எப்படி இழுக்கலாம் என்று,,
இந்த
இடத்தில்தான் குடும்ப ஆண்கள், தங்கள் கொடியை ஏற்றியிருக்கிறார்கள். முற்போக்குப் பெண்ணியத்தில்
குடும்ப ஆண்கள் என்ற சொல் நான் கேட்டறியாதது. இதுவரை படித்தறியாது. ஒரு வேளை ஆணாதிக்கத்தில்
குடும்ப ஆணாதிக்கமும் சேர்த்தியா எனத் தெரியவில்லை அறிந்தோர் விளக்கவும்.
நீ
பேசினால் உன் குடும்பத்தை இழுப்பதா என்ற கேள்விகள் அதிகமும் புழங்கின. மிக்க மகிழ்ச்சி.
தனது மகன் குறித்தும் அவரின் இசை கடவுளால் அனுகிரக்கிக்கப் பட்டது நினைத்தே பார்க்கமுடியாது
என சான்றோன் எனக் கேட்ட தந்தையாய் அனிருத்தின் தந்தை புளங்காங்கிதம் அடைந்திருந்தார்.
அவரை இப்பாடலைக் கேட்பாரா என்று கேட்டால் அது குடும்ப ஆணை இழுப்பதாகுமா என்று தெரியவில்லை.
எனக்கு
மறுபடியும் சிக்கல் வரும் சொல்லாக இந்தக் குடும்ப பெண்கள் பதம். ஏன் குடும்ப ஆண்களை
இழுத்தது தவறா எனத் தெரியவில்லை.
குடும்பப்
பெண்கள் என்றால் என்ன.. ?
1
சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள பெண்கள்.
2
ஆணாதிக்க சமூகத்தில், அனைத்து கேடுகளையும் வீட்டுக்கு வெளியே விதைத்து விட்டு வீட்டுக்குள்
குடும்ப ஆணாய் வரும் அவனுக்கு புருஷ சிருட்ஷை செய்வதா…இல்லை, நவீனத்தில் புருஷன் காலணிகளைத்
துடைத்து புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி இன்முகத்தோடு டாட்டா காட்டி கதவோரம் நின்று
கணவனைப் பார்த்து சிரித்து வழியனுப்பி வைப்பதா..இல்லை அவனின் சொத்துடைமயா… ஆணாதிக்கப்
பார்வையில் நல்லொழுக்கமான பெண்கள் என்ற அர்த்தமும் சேர்ந்தே வருகிறது. இதையும் முற்போக்கு
குடும்ப ஆண்கள் உணரத்தலைப்படலாம்.
குடும்பப்
பெண்ணாக இல்லாமல் தனியாக இருக்கும் தனிப்பெண்களை அழைக்க என்ன பதம். அறிஞர்கள் உதவுவார்களா.
இச்சமயத்தில்
சிறுகூற்றாக,
புண்டைக்கு
வரலாறு, அறிவியல், புவியியல் மட்டுமல்ல இதிகாசமே உள்ளது. என்ன பிரச்சினை என்றால் அனைத்தும்
ஆண்கள் எழுதியது. அதனால் அப்படித்தான் இருக்கும்.
அதேசமயம்
ஆண்களின் வசை சொல்லான புண்டை என்ற ஒரு சொல், ஒட்டு மொத்தமாய் ஒரு பெண்ணின் முழு உடலையே
முன் வைப்பதோடு, சம்பந்தப்பட்ட உறுப்பில்தான் இனவாதம் மதவாதம் மொழி வாதம் என எந்த வாதமாக
இருந்தாலும் பெண்களுக்கு எதிராய் யுகங்கள் தோறும், யுத்தங்கள் தோறும் ஆண்கள் அவ்வுறுப்பில்
கத்தியைச் சொறுகுவதும், துவக்குகளைச் சொறுகுவதும், மின்சாரம் பாய்ச்சுவதாகவும் இருக்கிறார்கள்
என்ன செய்ய.
இப்பொழுது
அதை துணிந்து, அதன் இளி தொனி மாறாமல் அப்படியே இருவர் பாடுவதை எதிர்ப்பதை விடவும்,
புண்டை என நீ எப்படிச் சொல்லலாம் என்ற கேள்விகளே நீண்டது. இடக்கரடக்கலும், வித்தியாசப்படுத்தலின்
அரசியலும், பெண்ணியமும், வர்க்க அரசியலும் தெரியாது, கருத்துச் சொல்லியாய் இருப்பதும்,
தன் குறி ஒன்றே பிரதானம் என்ற நினைப்பே போதுமானது என நினைத்து தட்டத்துச் செய்பவர்களுக்கு
நான் என்ன சொல்ல.
உதாரணமாக
டி
ஆர் எழுதிய பாடலான….
ங்கொப்பன்
மவனே
ங்கொப்பன்
மகனே
டண்டணக்க
என்ற
பாடலை
புண்டை
மவனே
புண்டை
மவனே
- எனப்
பாடினால் அசிங்கமும் ஆபாசமுமாகத்தான் இருக்கும்.
கவிதைகளில்
புண்டை எனக் குறிக்கப்பெறாமல் போன காரணம், அது வசவுச் சொல்லாக மாறியதானாலேயே தவிர.
குறிக்கக் கூடாதென்பதற்காக அல்ல. இடக்கரடக்கல். (மலத்தை நெருப்பென்று கரந்தழைக்கும்
பழக்கம் பார்ப்பனர்களிடத்தில் உண்டு. பீயை பீ என்று கூறாது மலம் என்ற பொதுவழக்கும்
உண்டு.)
இன்னும்
ஈழத்தில் எத்தனையோ கவிதைகள் போருக்கு எதிராய் துவக்குக்கு எதிராய் நீண்டிருக்கின்றன.
கவிஞர் வைரமுத்து கூட தினந்தந்தியில் யோனிக்கு மானக்குழி என பெயர் ஒன்றை இட்டு எழுதியிருந்தார்.
இடம்
பொருள் ஏவல், இத்தோடு தொனியையும் சேர்த்து அறியாத அறிஞர் பெருமக்கள் தமிழ் கூறும்
நல்லுலகில் முற்போக்கு நிலைய வித்துவான்களாய் இருப்பது நான் அறியாததொன்றல்ல..
யோனி,
ஆனந்ததம், அல்குல், திதலையகம், மாண்வரியகம் என இலக்கியமும், சங்கப்பாடல்களும் சொல்வது,
அதன் தொனியில் பெண்ணை நோக்கிய நேரடி வசைக்கான அர்த்தத்தை சேர்காததானாலேயே. இன்னும்
சொல்ல வேண்டுமென்றால் அல்குல் யோனி இவ்விரண்டும் வசைச்சொல்லாக உருமாறியிருந்தால் அதை
எழுத மாட்டார்கள்.
(
இன்னும் சில விலக்கமாய் தமிழில் நிர்வாணத்துக்கு சொல்லே கிடையாது. அப்படியென்றால் தமிழில்
யாரும் அம்மணமாக இருந்ததில்லையா என்ற ஆய்வும் தேவையே.)
இடக்கரடக்கலுக்கு
எடுத்துக்காட்டாக;
தாயாகப்
போகிறவளே
உன்
யோனியைப் பிளப்பேன்
உன்
யோனியை விரிப்பேன்
தாயையும்
சேயையும் பிரிப்பேன்
சூல்
பையிலிருந்து குழந்தையைத் தனியே தனிப்படுத்துவேன்
சூல்பை
கீழிறங்கட்டும்
- இது
அதர்வ வேதத்தில் வருகிற மகப்பேற்றின் போது வரும் பாட்டு.
இதை
யோனி என்று மொழி பெயர்த்தவர்..நேரடியாக
தாயாகப்
போகிறவளே
உன்
புண்டையைப் பிளப்பேன்
உன்
புண்டையை விரிப்பேன்
என்ற
ரீதியில் மொழி பெயர்த்தால் தொனியும் அர்த்தமும் இணைந்து தரும் விளக்கம் என்னவென வியாக்யானிகள்
பொருத்திப் பார்க்கலாம். மடல் வாழைத் துடை இருக்க என்று எழுதிய வாலி சமூகத்தில் கவிஞராகவும்,
எப்படி.. எப்படி.. சமைஞ்சது எப்படி.. என்று எழுதியபோது ஆணாதிக்க வக்ரப் பேர்வழியாகவும்
மாறியது இந்த இடம் பொருள் ஏவல் சாந்த புரிதல்களினாலேயே.
இப்படி
இழுத்து வைத்து இலக்கியம், எழுதுமுறை, கூறு முறை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல்
நிறுத்தி வைத்து அவ்வுறுப்பைச் சுட்டினால் அவர்களை சவுக்கால்தான் அடிக்க வேண்டுமென்றால்
தமிழ் கூறும் நல்லுலகில் சங்கப் புலவர்கள் தொடங்கி பிட்டுக்கு வாங்கிய அடியோடு இறையனார்
இன்னும் பல கோடுகள் தாங்கி வரிப்புலியாய்த் திரிதல் வேண்டும்.
மற்றபடி
குடும்ப பெண்கள் என்று சொல்லி கட்டுரையின் பொருளை இரண்டிரண்டு வரியாக பிரித்தெடுத்தால்
தொனியும் அர்த்தமும் மாறத்தான் செய்யும். குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள்
இதைச் சொல்லிக்கொடுக்காதீர்கள் என்று நானறிந்து அறிவுரை மழைகளை குழந்தை செல்வங்களுக்கு
வாரி வழங்கிக்கொண்டிருக்கும் குடும்ப ஆண்கள், என் மகள் அப்படிப் பேசினால் என் மகன்
இப்படிப் பேசினான் அய்யோ அழகு எனக் கொஞ்சும் குடும்பப் பெண்கள்… உங்கள் மகன் இப்படி
அறுவெறுப்பாக பேசுகிறானே என்ன செய்ய என்று கேட்பது ஒரு சமூகக் குற்றம். அழகாக பேசுகிறானே
என்றபோது உங்கள் தாய் தந்தையர்க்கான முகம் குமிழ் பூத்து நெக்கு விடும்போது உன் மகன்
இப்படியா என சுட்டிக் காட்டினால் குடும்பப் பெண்கள் கருத்துரிமை.
இத்தனைக்கும்
சுட்டிக்காட்டப்பட்ட அப்பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் எத்தனையோ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்கள்.
சம்பந்தப்பட்ட
அனிருத் சிம்பு இவர்களின் பாடல்களை கலைஞர்களாக இருக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள்
இதை எப்படி புரிந்து கொள்வார்கள் செயலாற்றப் போகிறார்கள் என்று கொற்றவை கேட்டதுமே குடும்ப
ஆண்கள் கொந்தளிப்பது மிகச்சரியாக இருக்கிறது. புண்டைப் பெண்ணியம், பொம்பளை என்ற ரீதியில்.
மகிழ்ச்சி. நிற்க.
உங்கள்
மழலைகள் தூங்கும் நேரம் தவிர அவர்களை வளர்ப்பது சமூகம். வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டுப்
போனால் சாலை மதில் சுவர்களில் தொங்கும் போஸ்ட்டர்களிலிருந்து அவர்களுக்கு சமுகம் கற்றுத்தரும்
சித்திரங்கள் ஏராளம். வாழ்க தமிழ்ச் சமூகம். என் மகன் இசையமைத்து ஹிட்டான பாடல் என
அவர்கள் பள்ளி விழாக்களில் ஆடச் சொல்லி உறுப்பின் பெயர் தெரியாது உங்கள் செல்ல மகள்
இடுப்பை அசைத்து ஆடும் போது என்ன செய்வீர்கள். பள்ளியைக் குற்றம் சாட்டுவீர்களா. அல்லது
படித்தவரைக் குற்றம் சாட்டுவீர்களா.
சிறு
விளக்கம்.
சிம்புவுக்குப்
பதிலாக அவர் குடும்ப ஆணான டி ஆர் முதலில் களத்தில் இறங்கி மைந்தனைக் காப்பாற்ற துடித்திருக்கிறார்.
மேலும்
சிம்பு டி ஆர் அனிருத் அவரது குடும்பப் பெண்களுக்காகப் பேசிய குடும்ப ஆண்களை மதிக்கிறேன்.
இனியாவது அவர்கள் பொதுவெளியில் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக
உள்ளேன்.
காதலியின்
சுண்டு விரல் போட்டோ போட்டு இன்னைக்கு இவகூட, அடுத்த நாள் இன்னொரு பெண்ணின் நகத்தைப்
போட்டு இன்று இரவு இவளோடு என்று குலாவும் போதும்..எனக்கு ஒருத்தி கிடைச்சிட்டா என்பதும்,
அதற்கு விருப்பக் குறிகளை அள்ளி வழங்கியதோடு, அடே நண்பா நானு நானு,… என நாக்கைத் தொங்கப்
போடுவதும், அக்குடும்ப ஆண்கள் அக்காதலிகளின் புகைப்படங்களைக் கூடப் போட துணிவில்லாது
இருப்பதும் கூட புண்டை ஆராய்ச்சிக்கு இடமளிக்கக் கூடும் என்ற பயத்தாலேயா.. அவ்வகை மாதிரிகளான
குடும்ப ஆண்களையும் மதிக்கிறேன்
தங்கள்
தோழிகளின் தோளில் சாய்ந்து தோழி எனக் கூடச் சொல்ல வராது அக்கா என்று பாத்திரவார்ப்பை
மாற்றுவது, அதே சமயம் இன்னொருவரின் அக்காவை அடியே உன்னை லவ் பண்றேண்டி எனச் சொல்லுவதும்
குடும்ப ஆண்களின் வழக்கம்தான்.
மீச்சிறு
குறிப்பு.
1
இரு ஆண்கள் புண்டையைப் பற்றி பாடியது இருக்கட்டும். ஒரு பெண் அதை எப்படி எழுதலாம் என்ற
கேள்வியை மறைத்துக்கொண்டு குடும்பப் பெண்கள் குடும்பப் பெண்கள் என்று குடும்ப ஆண்கள்
கூவியது மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில் முகநூலில் குடும்பமில்லாமல்தான் குடும்பப் பெண்களை
அவர்கள் வாழ்த்துவதும் வரவேற்பதும்.
2
கோவன் நேரடியாக முதலமைச்சர் ஜெயலலிதாவை உத்தமி உல்லாசி என்று பாடி, படம் போட்டுக் காட்டியதையும்
மகிழ்வுடன் கேட்டு, புரட்சி வாயை இழுத்து மூடி, பேசாமல் அமைதி காத்த முற்போக்கு
குடும்ப ஆண்களுக்கும் முற்போக்கு பெண்ணிய குடும்பப் பெண்களுக்கும் என் அன்பு. புரட்சியாளர்கள்
பேசினால் அது சாலத்தகும்.கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.
ம.க.இ.க
கோவன் பிரச்சினையில் உளவியலாய் நான் கற்ற கூறுகள் நான்கு.
1
அப்பாடலின் பாடபேதத்தை எதிர்த்தால் வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட அமைப்பினர் பேசக்
கூடும்.
2
அவர்கள் நேரடியாக உங்கள் குடும்பப் பெண்களை பெயர் சொல்லி சந்திக்குக் இழுக்கக் கூடும்.
3
முற்போக்கு புரட்சிகர முகமூடிகள் கிழிந்து தொங்கும்.
4
மெய்நிகர் உலகத்தில் நீங்கள் சக ஆண்களுக்கு, அல்லது சக பெண்களுக்கு விட்ட தூதுக்களை
கணிணி அறிவோடு பிறாய்ந்து உங்கள் இல்லத்தில் வீசக் கூடும்.
இவ்வளவே.
இதில்
நனிகூர் அறிவுடையோர் கூறும் கூற்றாகச் சொன்னது அவர்களாவது ஒரு தடவை சொன்னான் இந்தம்மா
எத்தனை தடவை சொல்லுது… இணையத்தின் கொற்றவையின் புழங்கு வெளி சிறிது. அவர் எழுதிய எதிர்வினை
எத்தனை பேரை அண்டப் போகிறது. ஆண்சொல்லாடலில் கரைக்கப்பட்ட சிறு பெருங்காயம் அது.
முகப்
புத்தகத்தில் உங்கள் நாலு வயசுக் குழந்தை இயங்கத் தொடங்கி அவர் கொற்றவையை அறிந்திருந்தால்
இது குற்றமே. கணிணியே காணாத மக்களையும் அவர் தம் குழந்தைகளையும் சிம்பு அனிருத்
வகையறாக்கள் அண்டும் விதம் அவர்களின் திரைத் துறை ஒலிப்பெருக்கிகள் அவர்கள் இல்லத்தில்
ஒலிக்கும்போது முக நூலோ அல்லது வாட்ஸ் அப்போ அறியாத அக்குழந்தைகள் எழுந்து பாடி ஆடினால்
என்ன செய்வீர்கள். விளக்குங்கள் தகைமையுள்ளோரே.
ஒரு
பாடலின் இயங்கு வெளி குறித்து சிற்றறிவும், ஊடக விளம்பர மோகத்தின் பாய்ச்சலும் அறியாத
உங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
4
அனிருத்தின் தந்தையும் குடும்ப ஆணாகவும் உள்ள ராகவேந்தர் தன் மைந்தனின் இசை குறித்தும்
கடவுள் கடாஷத்தைக் குறித்தும் முன்னொரு சமயம் விதந்தோதிய சுட்டி.
வாழ்த்துக்கள்.
வசுமித்ர
Wednesday, November 4, 2015
கோவனா? - தீப்பொறி ஆறுமுகமா?...
கோவனை கைது
செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம்
எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ஆணாதிக்கப் போக்கைக் காட்டியிருக்கிறது. இதில் ஆணாதிக்கம்
எங்கு வந்தது என்றோ, பிரச்சினையைத் திசை திருப்புகிறேன் என்றோகூட அவர்கள் கருத்துச்
சொல்ல வாய்ப்பியிருக்கிறது. அதே போல் தீவிர இடதுசாரிகளின் வெளிப்பாடு எவ்வளவு மோசமான
சகிப்பின்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உரையாட வேண்டும்.
கோவனைக் கைது
செய்தது சரியா எனக் கேட்டால் அது தவறுதான். அதற்காக போராட வேண்டுமா என்றால் போராடத்தான்
வேண்டும். கோவனுக்காக மட்டுமல்ல, இன்னும் அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் முதலாளித்துவப்
பார்வைகளை எதிர்த்து, நாள்தோறும் கைதாகும் தோழர்களுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டும்.
அதே சமயம் அவர்களின் போராட்ட வடிவங்களையும், அது அறிவிக்கும் முறைமைகளின் மீதும் நாம்
கவனம் செலுத்த வேண்டும்.
எழுத்துரிமை
பேச்சுரிமை இவைகளின் மூலம் கருத்துக்களை முன் வைக்கும் கருத்துரிமையும் நமக்கு இருக்கத்தான்
செய்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவ்வுரிமையை,
நான் இழக்க மாட்டேன்.
கருத்துரிமை
என்ற பெயரில் இன்னொருவரின் மீது ஆபாசமான சொற்களை வைப்பது கருத்துரிமையில் சேர்த்தியா..இதுதான்
என் கேள்வி.
பாடலில் ஊத்திக்கொடுத்த
உத்தமிக்கு போயஸுல்ல உல்லாசம் என்ற வரிகள் என்ன அர்த்தத்தைத் தருகிறது. ஆண் உத்தமன்
எனும் போது அவனது குணங்கள் முன்னுக்கு வருகிறது. பெண் உத்தமி எனும் போது அவளது உடல்
முன்னுக்கு வருகிறது. உல்லாசப்பயணம் என்பது வேறு, ஊத்திக்கொடுத்து ஒரு பெண் உல்லாசமாய் இருக்கிறாள்
என்றால் அவ்வரிகள் யாரை எந்த நோக்கத்தில் முன்வைக்கிறது.
மக்களுக்காக
ம.க.இ.க போராடுகிறது என்பதற்காக அது தான் மட்டுமே ஒர்ஜினல் இடது சாரி இயக்கம் என்ற
இருப்பை கைக்கொண்டுவிட முடியாது. ஆனால். அது தன்னை எப்பொழுதும் அப்படித்தான் அழைத்துக்கொள்கிறது.
இணைய வெளியில் மட்டுமல்ல பொதுவெளியிலும் அனைத்து இடது சாரிகளையும் அது போலி கம்யூனிஸ்ட்
கட்சி என்றே அதிகாரக் குரலால் அழைக்கிறது.
இப்பொழுது இந்தக்
கைதானது வார்த்தைகளுக்கான கைதா. இல்லை மது ஒழிப்பை ஆதரித்ததற்காகக் கைதா என நான் குழம்பியிருக்கிறேன்.
சி.பிஐ .எம்மின் வெகுஜன அமைப்பான த.மு.எ.க.ச ஒரு கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து
வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில்
இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. நேரடியாக அரசை
விமர்சிக்கிற பாடல் என்றதும், இவ்வாறு கைது, சிறை என்ற நடவடிக்கைகளில் இறங்குகிறது.
தேர்தல் சூழல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவோருக்கு
எச்சரிக்கை விடுக்கிற நடவடிக்கையாகவும் இதைக் காண வேண்டியுள்ளது.
மகஇக அமைப்பின் நிலைபாடுகளிலும் அணுகுமுறைகளிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள்
உண்டு என்றபோதிலும், அவர்களது முன்னணிக் கவிஞர்-பாடகர் கோவன் மீது அரசு தொடுத்துள்ள
இந்தத் தாக்குதலை தமுஎகச சார்பில் உறுதியாகக் கண்டிக்கிறோம். அரசு உடனடியாக இந்த ஜனநாயக
மறுப்பு நடவடிக்கையை விலக்கிக்கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேரடியாக அரசை
விமர்சிக்கிற பாடல் என்று இவ்வறிக்கையில் தமுஎகச சொல்லும் அவ்வரிகள், அரசை விமர்சிக்கிறதா அல்லது பெண்ணின் ஒழுக்கத்தை
விமர்சிக்கிறதா என்று விளக்கவேண்டும். கலை இலக்கியத்தில் புரட்சியை எடுத்துச் செல்வதோடு,
அது நச்சுக்கலை இது நச்சுப் பாட்டு. அது முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் நாவல்,
இது பெண்ணிய கவிதை என்றெல்லாம் தரம் பிரித்து விமர்சனம் செய்து வரும் அவ்வமைமைப்பு
இதனையும் புரட்சிகர விமர்சனங்களைக் கொண்டு இது கருத்தா என விளக்குவதோடு இதுதான் மக்கள்
இலக்கியம என்றும் எடுத்தியம்ப வேண்டும்.
இல்லை,.. இப்பொழுது
இது போன்ற பாசிச சக்திகள் தலை தூக்கும்போது நாம் இப்படி விமர்சிப்பது நாமே நம் அமைப்புக்களை
விமர்சிப்பது போல ஆகிவிடும் என்ற கருத்தை முன் வைத்தால்…நான் அதற்கு பதிலாக சொல்லுவது
இதுதான். எப்பொழுதும் மதவாத சக்திகளும் பாசிச சக்திகளும் பிரிந்ததே இருந்ததில்லை. அவைகள்
தங்கள் நோக்கத்தை முன்வைத்து வரலாற்றில் நகர்ந்தபடியே
இருக்கத்தான் செய்கிறது. புரட்சி பேசும் அமைப்புகள்தான் மாறி மாறி விலகியும், பேசியும்
வருகின்றன. உதாரணத்திற்கு ம.க.இ.க ஆளும் தரப்பை விமர்சிக்க வைத்த வார்த்தைகளின் அளவையும்
கனத்தையும் விட, இரண்டு கம்யூனிஸ் கட்சிகளையும், பிற கம்யூனிச அமைப்புகளையும், போலிக்
கம்யூனிஸ் கட்சிகள், போலி அமைப்புகள் என்று வைத்து விமர்சித்ததுதான் அதிகம்.
போராட்டத்தை
எப்படியும் எடுத்துச் செல்லலாம் என்றால், கோவன் செய்ததும் அதுதான் என்றால், அதிமுக,
திமுக இன்னும் வெகுஜனக் கட்சிகள், மேடைகளில் வெகுஜன மக்களை ஈர்க்க ஆடும் காபரே டான்ஸ்க்கும், அசிங்கமான பாடல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். தரங்கெட்ட வரிகளை வைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்
அமைப்பின் மீது, ஒரு தனிமனிதனாக, மார்க்சியத்தைப் படித்து வரும் ஒரு மாணவனாக, எனக்கு
சிறிதும் நம்பிக்கை இல்லை. என்பதோடு, மரியாதையும்
இல்லை என்றே சொல்கிறேன். வரலாற்றை சாகசமாக திருப்பமுடியாது. #கோவன் இப்பொழுது சாகச நாயகனாயிருக்கிறார்.
அவரது கைது - வரிகளுக்கா இல்லை அவ்வரிகளுக்கிடையே இருக்கும் மது ஒழிப்புக்கா என்ற குழப்பம் எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
இரண்டுக்குமே
எனது வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்கிறேன்.
இதற்கிடையே இணையவெளியில் கத்தாருக்கு இணையாக வைக்கப்பட்ட கோவனை இப்பாடல் விசயத்தில் நான் தீப்பொறி* ஆறுமுகம்
என்றே சொல்லுவேன். வேண்டுமென்றால் நீங்கள் இனி கோவனை இஸ்க்ரா கோவன் என்று அழைத்துக்கொள்ளலாம்.
மலிந்த ஆபாசாமான
வார்த்தைகளை முன்வைத்து சாராய ஒழிப்பைப் பேச வேண்டுமென்றால் என்னிடம் ஏராளமான பாடல்கள்
இருக்கிறது. அதையும் மகஇக வுக்கு எழுதித்தருகிறேன். இதை விட ரைமிங்க்காக மெட்டுக்கு
இடிக்காத வரிகளாக அவை இருக்கும் என உறுதியும் கூறுகிறேன். அரசை எதிர்ப்பது என்பது மகஇக
-வைப் பொறுத்தமட்டில் அது தனிநபர் எதிர்ப்பாகவே இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்
சேகுவேராவை இவ்வமைப்பு புறக்கணித்தே வந்தது. கேட்டால், விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை,
அவன் சாகசப்புரட்சியாளன் என்றது.
இப்பொழுது #கோவன்
செய்திருப்பது என்ன? வெகுஜன மலிந்த ரசனையை இயக்கப் பார்வையாய் வைத்து, இப்படிச் சொன்னால்
ஏதேனும் நடக்கும் என்ற எண்ணைத்தைத்தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது. ஒரு பெண்ணை அவமதிக்கிற
சொற்களை வைத்து மது ஒழிப்பைப் பேசுகிறேன் என்பது இன்னும் எனக்கு கூச்சந் தரத்தக்கதாகவே
இருக்கிறது. தமு எக ச அறிக்கையில் கூறியிருப்பது போல்
” தமிழகத்தில் சாதிய,
மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது.
அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே
மாநில அரசு எடுத்துவந்துள்ளது. ”
உத்தமி, உல்லாசம்,
அவள், இவள் என்பதையெல்லாம் “கருத்துகள்” என்று
சொல்கிற அளவுக்கு சிவப்பு கண்ணை மறைத்திருக்கிற தமுஎகசவுக்கு, இதே குற்றச்சாட்டை ம
க இக வின் மீதும் வைக்கலாம் என்பது தமுஎகசவுக்கும்,மற்ற இடதுசாரி தோழர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன்.
பொது வெளியிலும்,
இணையத்திலும் கம்யூனிசக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் சக தோழர்களை. சக அமைப்புகளை
எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் #மகஇக போன்ற சில
அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. எடுத்த எடுப்பில் என்.ஜி. ஓ க்கள், முதலாளித்துவ
கைக்கூலி, ஆன்டி மார்க்சிஸ்ட், திரிபுவாதி, ஓடுகாலி, சாதியவாதி, பெண்ணியவாதி இதுபோன்ற
பதங்களை வைத்துத்தான் வசைபாடுகிறது.
கோவனின் கைதை
எதிர்க்கிற நாம் இவ்வரிகளை என்ன செய்யப் போகிறோம்? உத்தமி உல்லாசமாய் இருக்கிறாள் என்று
கூறுவதை எப்படிப் பார்க்கப் போகிறோம். கோவன் இவ்வரிகளை ஒரு ஆண் ஆளும் போது பாடியிருந்தால்,
அதாவது முன்னால் முதலமைச்சராய் இருந்த கருணாநிதியாக
இருந்தால் ஊத்திக்கொடுத்த உத்தமனுக்கு கோபாலபுரத்துல உல்லாசம்.என்று இருந்திருக்குமா.
#கோவனை தவறாக
வழிநடத்தி அவரது வரிகளில் உள்ள கொச்சைத்தனத்தைச் சுட்டாமல் விட்டு, அவரை நெருக்கடிக்குத்
தள்ளியிருக்கிற மகஇக-வின் தலைமைக்குக்கும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்த தமிழக
அரசுக்கும் எனது கண்டனங்கள்.
புரட்சியை ஒரு
சாகசச் செயலாக கருதும்போது இது போன்ற ஆபாச வரிகளும் வரத்தான் செய்யும். ஏனென்றால் சாகசம்,
கதாநாயகத்தனம் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தையே வழிமொழியும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
சிறுகுறிப்பு;
#மகஇக தங்களது
அமைப்பின் புரட்சிகர தலைவர்களாக முன்வைக்கும் மார்க்ஸோ, எங்கெல்ஸோ லெனினோ, இது போன்ற
எதிர்ப்புப் போராட்டங்களில் உத்தமி அவள் இவள் என்ற வார்த்தைகளை வைத்து புரட்சியை நடத்தியிருந்தாகவோ,
அல்லது இது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவோ இருந்தால், எனது இந்தப்
பார்வைக்கு மன்னிப்புக் கேட்டு, இக்கருத்துக்களை
திரும்ப எடுத்துக்கொள்வதோடு, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் அவர்களின் ஆணாதிக்கக் குறிப்புகளையும்
வைத்து உரையாடுவேன்.
. இஸ்க்ரா – தீப்பொறி -
லெனின் நடத்திய பத்திரிக்கையின் பெயர்.
Subscribe to:
Posts (Atom)
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை”
“கவிதையைவிட மோசமானது வேறொன்றும் இல்லை” ரூமி வ சு மி த் ர “அப்துல்லாஹ் பின் ஷைத் பின் அஹ்லப்பாவிடம் நபிகளார் சொன்னார்: “தாங்கள் ப...
-
அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவரு...
-
அன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...
-
சு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...
-
கோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...
-
இனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...
-
நேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...